தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக, "சமூகநீதி சர்வே" எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே உடனடியாக நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து பாமக தலைவர் கோரிக்கை வைத்தார். மேலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். சமூகநீதியைப் பாதுகாப்போம்! இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டுவோம்!
#tncmvijay #anbumani #reservation #tamilnadu #pattalimakkalkatchi
#💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴