சரவணகுமார்©183
857 views
1 months ago
மனிதர்களுக்கு வணக்கம். யாம் இணையதள போராளிகள். சென்ற பகுதியில் தி.மு.க பற்றி விரிவாக பார்த்தோம் இல்லையா? இந்த பகுதியில் அதிமுக பற்றி விரிவாக பார்ப்போம். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தைந்திற்க்கு பிறகு அவர் நடித்த அனைத்து படங்களிளும் Dravidian பண்பாடுகளுடன் இந்திய தேசியக்கொடியையும் இணைக்க முயன்றன. இதன் மூலம் மக்களிடையே பேராதரவை உளவுத்துறை மூலமாக எம்ஜிஆர் வெகுசீக்கிரமாக பெற்றார். ஆனால் ஆட்சி அமைக்க இதுமட்டும் போதாது என்பதால் அப்போதுதான் இன்னொரு உளவு நிறுவனம் கைகோர்த்தது. தெற்காசியாவைச் சுற்றி நடந்த நக்சல் வளர்ச்சி, இந்தியாவில் ஏற்படும் பிரிவினை எண்ணங்கள், ஈழத்தில் உருவாகும் Tamil Nationalism ஆகியவற்றை கொண்டு CIA தனது காய்நகர்த்தல்களை திட்டமிட்டு இருந்தது. அதனடிப்படையில் "South India may potentially become a Communist-controlled, culturally detached region in thirty years." என்ற கருத்தை கொண்டிருந்த CIA, இதை நடக்க விடாமல் தடுக்க கேஜிபியை விடுத்து மீண்டும் RAW மற்றும் CIA சேர்ந்து செயல்பட ஆரம்பித்தது. இதன் மூலம் எம்ஜிஆருக்கு பேராதரவு மேலும் பெருகி ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தேழு தேர்தலில் அணைந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி அமைந்தது. எம்ஜிஆரின் ஆட்சி – ஒருபுறம் திராவிட பெயருடன், மறுபுறம் இந்திய தேசியத்தோடு நடக்கும் புது கலாசாரக் கோட்பாடாக முன்மொழியப்பட்டாலும், இது உண்மையில் US-Russia Cold War நேரத்தில் இந்தியா உள்ளடக்கிய “Low-Conflict Stabilization Zones” திட்டத்தின் ஒரு பக்கமாக CIA மற்றும் KGB மாறி மாறி தமிழ்நாட்டு அரசியலில் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி வைத்து காய்களை நகர்த்தியது. இப்படியான நேரத்தில்தான் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி நான்கு ஜூன் மாதம் மும்பை ஜாஸ்லோக் மருத்துவமனையின் மருத்துவரும் நரம்பியல் வல்லுநருமான எம்.கே.மணிக்கு எம்ஜிஆர் அழைப்பு விடுத்தார். ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தைந்தாம் ஆண்டு அவசர நிலை பிரகடனத்துக்குப் பின் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு சிகிச்சை அளித்தவர் மணி. அதோடு இவர் RAWவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்தான் இந்த டாக்டர் மணி. தம்முடைய சிறுநீரக பிரச்சினைக்காக டாக்டர் மணியை எம்ஜிஆர் வரவழைத்திருந்தார். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி நான்கு அக்டோபர் ஐந்தாம் தேதி அப்போலோ மருத்துவமனையில் எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டார். அப்போது, எம்ஜிஆருக்கு காய்ச்சல், சளி மற்றும் லேசான ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக அப்போலோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது. அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே உள்ளிட்டோர் ஊடகங்களைச் சந்தித்து விளக்கமும் அளித்து வந்தார். எம்ஜிஆர் உடல்நிலை குறித்து மிகக் கவனமாக CIA மற்று RAW கையாண்டு வந்தது. இதனடிப்படையில் CIA மூலம் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி நான்கு அக்டோபர் பதினேழு, பதினெட்டு தேதிகளில் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட எலி ப்ரெட்மான், ஜான் மேயெர், க்றிஸ்டோபர் ப்ளாக் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு எம்ஜிஆருக்கு சிகிச்சை அளித்தனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க மருத்துவர்கள், “எம்ஜிஆர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்” என்றனர். ஆனால், அப்போலோ நிர்வாகத்துக்கு அமெரிக்க மருத்துவர்கள் வருகை தந்தது KGB உளவு நிறுவனத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை அறிந்து கொண்ட CIA மற்றும் RAW இதைப் பயன்படுத்தி மக்களிடம் பரிதாப அலையை ஏற்படுத்தி மீண்டும் தமிழக அரசியலில் ஒரு புரட்சியை செய்ய வித்திட்டது. CIA மற்றும் RAW திட்டத்தின்படி, ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி நான்கு நவம்பர் ஐந்தாம் தேதி எம்ஜிஆர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்கு CIA மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். எம்ஜிஆருடன் ஜானகி, ஹண்டே உட்பட இருபத்தோரு பேர் தனி விமானத்தில் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குச் சென்றனர். KGBயின் திட்டத்தின்படி, ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி நான்கு நவம்பர் பதிணைந்தாம் தேதி எம்ஜிஆர் உடல்நலம் குறித்து திமுகவின் செயற்குழு கூட்டம் கேள்வி எழுப்பியது. மேலும், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஜனாதிபதியை திமுக எம்.பி.க்கள் குழு சந்தித்து முறையிடும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தமிழக சட்டசபைக் கலைக்கப்பட்டு லோக்சபா பொதுத்தேர்தலுடன் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் CIA அறிவுறுத்தலின் படி, ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி நான்கு நவம்பர் இருபத்தி மூன்றாம் தேதி ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபடியே ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் எம்ஜிஆர். நியூயார்க்கில் இந்திய தூதராக இருந்த அருண் பட்வர்த்தன் முன்னிலையில் அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் எம்ஜிஆரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது. ஆனால், KGB பின்புலம் கொண்ட திமுக இதனைக் கடுமையாக விமர்சித்தது. எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி நான்கு டிசம்பர் இருபத்தி நான்காம் தேதி தமிழகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் எம்ஜிஆர் முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஐந்து பிப்ரவரி நான்காம் தேதி தமிழகம் திரும்பிய எம்ஜிஆருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. CIA மற்றும் ரா பின்புலத்தால் மீண்டும் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஐந்து பிப்ரவரி பத்தாம் தேதி மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வரானார் எம்ஜிஆர். இதன்பிறகு ரா “Operation Cloakfield” என்கின்ற உளவுத்துறை திட்டம் ஒன்றை உருவாக்கி, இதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய அதிகாரப் பதவிகளில் உள்ள IAS, IPS அதிகாரிகள், உயர்நிலை ஆசிரியர்கள், தொலைக்காட்சி நிர்வாகிகள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு மெல்லமெல்ல இந்திய தேசிய பண்பாட்டை ஊட்டும் வகையில் பயிற்சிகள், நிதி, விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தேழில் எம்ஜிஆர் மரணம் என்பது ராவிற்கு பேரதிர்ச்சியை தந்தது. இந்த முறை KGB வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டது. எம்ஜிஆர் மரணம் அதே நேரத்தில் அதிமுகவுக்கு ஒரு தலை துண்டான நிலை, மேலும் தமிழக அரசியலில் உளவுத்துறை திட்டங்கள் வகுக்க புதிய பாதைக்கு ஆரம்ப புள்ளியாக மாறிய காலம். இந்த காலக்கட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள அடுத்த பதிவு வரை காத்திருங்கள். யாம் இணையதள போராளிகள் நன்றிகள் பல. #@அமானுஷ்யம்@( HORROR ) #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்