Makkal Mugam
544 views
1 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் லப்பை கிருஷ்ணாபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா மூன்றாம் ஆண்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் , அம்மன் பூங்கரகம் திருவீதி உள்ள நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிரசு ஏற்றுதல் நடைபெற்றது. மேலும் அதி நூதன வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நாதஸ்வரம் மேளம், நையாண்டி மேளம், கோலாட்டம், புலியாட்டம், கேரளா செண்டை மேளம் வாணவேடிக்கை, போன்றவை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து அம்மன் சிரசு நிறுத்துதல், கூழ்வார்த்தல், பொங்கலிடுதல் போன்றவை நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நாட்டாமைஅப்பு மந்திரி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சி ஏற்பட்டினை ஊர் நாட்டாமை, மேட்டுக்குடி, ஸ்ரீ கெங்கையம்மன் விழா குழுவினர்கள், கிராம பொதுமக்கள், இளைஞர்கள், என நிகழ்ச்சி ஏற்பட்டின செய்து இருந்தனர்.