#🙋♂️தமிழக வெற்றி கழகம் #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️
"அண்ணே....மகளிருக்கு 2,500 ரூபாய் கொடுக்கிற பணிகள் தொடங்கிடுச்சுன்னு நியூஸ் வந்திருக்கே...பார்த்தீங்களா..."?
"ம்ம்ம்...பார்த்தேன்...பார்த்தேன்...இவ்வளவு சீக்கிரமா இப்படி அறிவிப்பு வந்ததுக்கும் ஒரு காரணம் இருக்கு..."
"என்ன காரணம்ணே..."?
"திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்ல தவெக ஜெயிக்கனும்னா இப்படி அறிவிப்புகளை விட்டு தானே ஆகனும்....மகளிர் உரிமை தொகையான 1,000 ரூபாயை இன்னிக்கு கொடுத்தது கூட இந்த இடைத்தேர்தலை மனசுல வெச்சு தான்..."
"ஓஹோ....அப்படியா சங்கதி.."?
"பின்ன, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 1,000 ரூபாய், மகளிர் உரிமை தொகை என எதுவும் கொடுக்காம இடைத்தேர்தல்ல நின்னு தோத்து போய்ட்டா, அது விஜய்க்கு பெருத்த அவமானம். அதே சமயம், ஏற்கனவே ஜெயிச்சு, இப்ப தோத்து போயிட்டா, தமிழகம் முழுவதும் இந்த ஆட்சிக்கு எதிர்ப்பு கிளம்பிடுச்சுனு பேச ஆரம்பிப்பாங்க..."
"அப்போ சீக்கிரம் 2,500 ரூபாய் கொடுத்து விடுவாங்களா..."?
"சந்தேகம் தான். ஏன்னா, மு.க.ஸ்டாலின் அறிவிச்ச 1,000 ரூபாய் மகளிர் உரிமை தொகைக்கும், விஜய் அறிவிச்ச 2,500 ரூபாய் மகளிர் உரிமை தொகைக்கும் இடையே பெரிய சிக்கல் இருக்கு..."
"சிக்கலா..."?
"ஆமா, எந்த வயசு வித்தியாசமும் இல்லாம எல்லார் மகளிருக்கும் 1,000 ரூபாயை மு.க.ஸ்டாலின் அறிவிச்சார். ஆனா, 60 வயசுக்குள் இருக்கும் மகளிர்களுக்கு 2,500 ரூபாயும், 60 வயசுக்கு மேல் இருக்கும் மகளிர்களுக்கு 3,000 ரூபாய்னு விஜய் அறிவிச்சார்..."
"ஆமா...."
"இப்ப 2026-ம் ஆண்டு 59 வயசுள்ள பெண்கள் 2,500 ரூபாய் வாங்குவாங்க. இவங்க 2027-ல் 60 வயசை அடையும்போது, அவர்கள் அனைவரும் 3,000 ரூபாய் வாங்க தகுதியானவங்களாக மாறிடுவாங்க. இப்படி 1 லட்சம் பெண்கள் 60 வயசை அடைந்தால், அவர்களை சரியாக கணக்கு எடுத்து கூடுதலாக 500 ரூபாய் அனுப்பனும்.."
"அட ஆமால்ல...."
"ஆமா.....இந்த மாதிரி ஒவ்வொரு வருஷமும் 1 லட்சம் அல்லது 2 லட்சம் பெண்கள் 60 வயதுக்கு மேல் போகும்போதெல்லாம் அரசுக்கு நிதிச்சுமை அதிகரிச்சிக்கிட்டே போகும். அதாவது, 2026-ல் சுமார் 20 லட்சம் பெண்களுக்கு தலா 3,000 ரூபாய் கொடுத்தால், 2027-ல் இந்த எண்ணிக்கை 25 லட்சமாக கூட உயரும். இது 2031 வரை ஒவ்வொரு வருஷமும் கூடிகிட்டே போகும்..."
"அய்யயோ....இது பெரிய சிக்கலா இருக்கே.."?
"ஆமா....இது மட்டுமில்லாம தமிழக முழுவதும் அரசு பேருந்துகளில் இலவச பயணம், தங்கம் கொடுப்பது, சிலிண்டர் கொடுப்பது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால், இந்த அரசும் நிச்சயமாக ஒரு பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்..."
"இந்த ஆட்சி பெரிய சிக்கல்ல சிக்கிடுச்சு போல..."
"நிச்சயமாக....இவர்கள் ஆட்சியை விட்டு போகும்போது எப்படியும் 15+லட்சம் கோடி கடனில் தான் தமிழகத்தை விட்டு செல்வார்கள்...பொருத்திருந்து கவனிப்போம்.."!!!
#DMKITWING