TAMIL NADU NEWS 24.7
482 views
17 hours ago
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விரித்த வலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி விழுந்து அழிந்தது! 'அண்ணாமலையை நீக்கினால்தான் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி' என்ற நிபந்தனையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விதித்ததாக திரு. செங்கோட்டையன் அவர்கள் கூறியுள்ளார்கள். இதை தமிழக மக்கள் அன்றும், இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு அவர்கள் கேட்ட தொகுதிகள் கொடுக்கப்படவில்லை. அவர்கள் விரும்பாத தொகுதிகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டது! பல நாட்கள் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய பாரதிய ஜனதா கட்சி இதைப் பேசாமல் வேறு என்ன 'முக்கிய விஷயங்கள்' பேசின? தேர்தலில், தமிழக பாரதிய ஜனதாவின் வாக்குகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சென்றிருக்கின்றன (transfer). ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு வரவில்லை என்று பலரால் கூறப்படுவது உண்மை என்று மக்கள் நம்புகிறார்கள். தமிழகத்தில், பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று மறைமுகமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் அறிவுறுத்தப் பட்டது என்பதை மக்கள் நம்புகிறார்கள். 2021 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் தாங்கள் தோற்றுப் போனதாகவும், இதனால்தான் சிறுபான்மை மக்களது ஆதரவை இழந்ததாகவும், மீண்டும் ஒருபோதும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படையாக பாரதிய ஜனதாவை குத்திப் பேசியது. 2024 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியைக் காலை வாரியது இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் போக்கில் எந்த மாற்றமும் இல்லாத போது, மீண்டும் கூட்டணி சேர வேண்டிய கட்டாயம் என்ன? தமிழகத்தில், பாரதிய ஜனதா கட்சி குரல் கொடுக்கும் எந்த பிரச்சனைகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இருப்பதில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளையும் தமிழகத்தில் வெற்றி கொள்ள வேண்டி, இரவும் பகலும் உழைத்தார் முன்னாள் காவல் துறை அதிகாரி திரு. K. அண்ணாமலை அவர்கள். இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார்த்தையைக் கேட்டு அந்த நல்ல மனிதருக்கு துரோகம் செய்து விட்டது பாரதிய ஜனதா கட்சி! தமிழக பாரதிய ஜனதா கட்சியில் சுயநலப் பயணம் செய்து கொண்டு, திராவிடக் கட்சிகளுடன் மறைமுக உறவு வைத்து, கட்சி நலனைப் பற்றி சிறிதும் கவலைப் படாதவர்களை மத்திய பாரதிய ஜனதா கட்சி கண்டிக்கத் தவறியது. திரு. K. அண்ணாமலை அவர்களது கருத்தை மீறி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விரித்த வலையில் விழுந்து, அண்ணாமலைக்கும் தமிழக மக்களுக்கும் பெரும் துரோகம் செய்து விட்டது மத்திய பாரதிய ஜனதா கட்சி. இதனால், தமிழக பாரதிய ஜனதா கட்சி ஐம்பது ஆண்டுகள் பின்தங்கி உள்ளது! யார் இதற்கு பொறுப்பு ஏற்பது? யார் இதைச் சரி செய்வது? #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍