k.p.arumugam
706 views
1 days ago
#📺வைரல் தகவல்🤩 #⭐தேர்தல் வாக்குறுதிகள்🤩 #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் T V K சார்பில் தேர்தல் அறிக்கையில், வேளாண்மை கூட்டுறவு கடன்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், பெரிய விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ₹50,000 வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் முழு தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்ற சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குக் கூட வெறும் ₹5,000 மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானதாகும். இன்று பெரும்பாலான விவசாயிகள் ₹1 லட்சத்திற்கு மேல் கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு எந்தவித பயனையும் அளிக்காது. உண்மையில் கடன் தள்ளுபடி செய்யும் எண்ணமே இல்லையெனில், அரசு அதை நேரடியாக அறிவித்திருக்கலாம். ஆனால் தேர்தல் காலத்தில் “விவசாயிகளுக்காக பிறந்தவர்கள்” என மக்களிடம் உணர்ச்சி வசப்பட்ட பேச்சுகளை பேசி, சினிமா பாணியில் வாக்குகளை பெற்று, தற்போது முற்றிலும் மாறுபட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற நிலை உருவாகியுள்ளது. நாங்கள் முன்பே கூறியபடி, விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் — கடந்த தேர்தலில் T V K அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி வழங்குவோம் என்று கூறியது; அதை செய்து காட்டியது. 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என்றோம்; அதை செய்தோம். மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றோம்; அதையும் நிறைவேற்றினோம். ஆனால் மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி வாக்குகளை பெற்ற நடிகர் கட்சிக்கு ஆதரவு அளித்ததன் விளைவாக, இன்று விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்திலும் துயரத்திலும் உள்ளனர். “விவசாய கடன் தள்ளுபடி” என்ற வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்களுக்கு இன்று பட்டை நாமம் போடப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் மனவேதனையுடன், “வாக்களித்து இப்படி மோசம் போய்விட்டோமே” என்று புலம்பி வருகின்றனர். எனவே, இந்த அரசு எந்த விதமான வரம்புகளும் இன்றி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.