⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
746 views
11 hours ago
இன்று 14.05.2026 குரு வார பிரதோஷம். இன்று மாலை 4.30க்கு எல்லாருமே பிரதோஷ தரிசனத்துக்கு புறப்படுவோம். அதன் மகிமை யைத் தெரிந்து கொள்ளுவோம். அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ் வை முடித்து கயிலாயம் சென்றான். அந்த ப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியானி த்துக் கொண் டிருந்தாள். வெளியே நந்தி தேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார். சிவபார்வதி தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான். அவளை கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான். பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியான ம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவ லையும் மீறி, தன் இருப்பிடத் திற்கு பக்த ன் வந்ததைக் கண்டவள், "நந்தீசா, யாரை கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள். அவளிடம் வந்த நந்தி,"தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பி யிருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன், மன்னியுங்கள்,'' என்றார். அங்கு வந்த சிவன் பணியில் தவறிய நந்தியை பூலோகத்தில் மானிடராகப் பிறக்கும்படி செய்து விட்டார். இவ்வேளையில் சிலாதர் என்ற முனிவரி ன் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர். அவர்களுக்கு சிலாதரின் மனைவி அன்ன ம் பரிமாறச் சென்ற போது 'குழந்தையில் லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது' என்ற விதிப்படி அங்கு தங்களால் உண்ண இயலாது என சொல்லி சென்று விட்டனர். இதனால் மனம் வருந்திய முனிவரும், அவரது மனைவியும் சிவனை உருக்கமாக வேண்டினர் இந்த வேளையில்தான் சிவன், நந்திக்கு சாபம் கொடுத்திருந்தார். நந்தீசரை ஒரு பெட்டியில் வைத்து பூலோ கத்தில், சிலாதர் தங்கியிருந்த ஆஸ்ரமத் தின் அருகே வைத்தார். சிலாதர் கண் களில் அந்த பெட்டி பட்டது. அதற்குள் காளையின் முகம், மனித உடலு டன் ஒரு குழந்தை இருந்ததைக் கண்டார். தனக்கு குழந்தை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவர், "இறைவா! பிள்ளையில்லாத எனக்கு ஒரு நற்குழந்தையை தந்திருக்கக் கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தை யை ஊரார் எப்படி ஏற்பார்கள்?'' என மன்றாடினார். அந்த நேரத்தில்,""சிலாதா! வந்திருப்பவன் யாரோ அல்ல. என் காவலன் நந்தீசன். அவனு க்கு அழகான முகம் தருகிறேன். ஆனால், அவனது ஆயுள் பூலோகத்தில் 12 ஆண்டுகள் மட்டுமே. அவன் ஒரு சாபத்தா ல் உன்னிடம் வந்துள்ளான். அவனை வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு,'' என அசரீரி ஒலித்தது. 12 ஆண்டுகள் தன்னோடு வாழ வந்தவன் என்றாலும், தங்களை கயிலாயம் அழைத் துப் போகிற பிள்ளை என்பதால், சிலாதர் மகிழ்ந்தார். தன் மனைவியிடம் குழந்தை யை ஒப்படைத்தார். அந்தக் குழந்தை சிவ லோகப் பிள்ளை என்பதால், அவனைப் பார்த்தவுடனே பலருக்கு நோய் நீங்கியது. சிலர் அவனைக் கடவுளாகவே பாவித்து வணங்கி, தங்களுக்கு முக்திநிலை வேண்டும் என்றனர். அவன் பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6.00) சிவ தியானத்தில் ஈடுபடுவான். அப்போது பக்தர்கள் பலரும் அவனுடன் இணைந்து சிவ தியானம் செய்வர். அவன் கண்மூடி தியானிக்கும் போது, நெற்றியி ன் நடுவில் சிவதரிசனம் காட்டினான். இதனால், தங்களுக்கு பிறப்பற்ற நிலை கிடைத்ததாக மக்கள் எண்ணினர். பல பல அற்புதங்கள் நிகழ்த்திய நந்தீசர் 12 வயதில் தன் பெற்றோருடன் கயிலாயம் சேர்ந்து, இழந்த பதவியை மீண்டும் பெற் றார். தன் தவறுக்கு வருந்தி முழங்காலிட் டு இன்றும் சிவபார்வதி முன்னால் பணி வுடன் அமர்ந்துள் ளார். பிரதோஷ நாளா ன இன்று, நந்தீஸ்வரரி ன் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம். இன்று வியாழன் பிரதோஷம்: ******************************** வியாழப் பிரதோஷம் வழிபாடு பலன்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் வரு ம் சந்தியாக் காலங்கள் இறைவழிபாட்டிற் குரிய ஒரு சிறந்த நேரமாகும். அப்படி மாலை வேளை மற்றும் இரவு வேளை என இரண்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில் வரு வதுதான் “நந்தி பகவான்” சிவ வழிபாடு செய்யும் “பிரதோஷ நேரம்” ஆகும். பிரதோஷங்கள் வாரத்தின் அனைத்து கிழமை களிலும் வருகின்றன வியாழக் கிழமை அன்று வரும் வியாழக் கிழமை வரும் பிரதோஷத்தின் சிறப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மனிதனாக பிறந்து விட்ட அனைவரின் பிறவி தோஷங்களை போக்குவது தான் பிரதோஷம். மற்ற நாட்களிலும், நேரங்க ளிலும் சிவபெருமா னை வழிபடுவதற்கும் இந்த “பிரதோஷ நேரம்” மற்றும் அது வரக் கூடிய கிழமைகளில் வழிபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த பிரதோஷங்கள் எந்தெந்த கிழமைக ளில் வருகிறதோ அந்த கிழமைக்குரிய நவகிரக நாயகர்களின் அருளும் அன்றை ய தினத்தில் நமக்கு கிடைக்கிறது. வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம் “வியாழப்பிரதோஷம்” என்று அழைக்கப் படுகிறது. இன்று வரும் பிரதோஷத்தில் சிவ பெருமானை கோவிலுக்கு சென்று வணங்கு வதால் நவகிரகங்களில் முழு சுபகிரகமான “குரு பகவானின்” அருளை யும் சேர்த்து நமக்கு பெற்று தருகிறது. வியாழன் பிரதோஷம் வருகிற போது மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக் குள்ளாக சிவன் கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதி களில், மஞ்சள் நிற பூக்க ளை வைத்து, 27 வெள்ளை கொண்டைக் கடலைகளை நிவேதி த்து வணங்க வேண்டும். பின்பு நந்தி பகவான் சிவபெருமான் அம்ம ன் மற்றும் தட்சிணாமூ ர்த்தி ஆகியவர்க ளை வணங்க பொருளாதார பிரச்சனை கள், திருமண தடை, புத்திர பேறு இல்லா மை போன்ற பிரச்சனை கள் நீங்க சிவபெ ருமான் மற்றும் குரு பகவான் அருள் புரிவர். பிரதோஷ வேளை பஞ்சாக்ஷர மந்திரம்: ******************************************* “ஓம் நமச்சிவாய” இந்த மந்திரத்தின் மகிமையே தனி. இதனை உச்சரிப்பதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா? ◆◆ நமது முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அகலும். ◆◆ உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும். ◆◆ குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும். ◆◆ எதிரிகள் நமது பாதையிலிருந்து விலகுவர். ◆◆ இறுதியில் மோக்ஷம் கிடைக்கும். பிரதோஷ காலத்தில் கீழ் காணும் ஸ்லோ கத்தை 18 முறை சொல்லவேண்டும். "ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக| பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:.." இன்மையிலும் நன்மை தருவார் பிரதோ ஷ மூர்த்தி. பிரதோஷ காலத்தில் நந்திய ம்பெரு மானை வணங்க வேண்டும். "நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும் குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர் சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே." என்ற பாடல் பிரதோஷம் மற்றும் நந்தியம் பெருமான் மகிமையை வலியுறுத்தும் ஓம் நமசிவாய.... திருச்சிற்றம்பலம்.... 14.05.2026... நேசமுடன் விஜயராகவன்..... #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨பிரதோஷம்🕉️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👉🏼இன்றைய ராசிபலன்✡️