#🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨பிரதோஷம்🕉️ #🌺 சிவன் கோவில்கள் 🔱 #✨ மகா சிவராத்திரி விரைவில் 🙏🏻 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
#🙏பெருமாள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #✡️மார்கழி மாத ஜோதிடம்
🌹ஆஞ்சநேயர் வழிபாட்டினால் என்னென்ன பலன் கிடைக்கும் .
🌹வால்மீகி ராமாயணத்தை படிக்கும் போது, ஆஞ்சநேயருக்காகச் சொல்லும் புகழ்மிக்க ஸ்லோகம் ஒன்றுண்டு.
🌹 புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா!
அஜாட்யம் வாக் படுத்வம் கீச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்!!
🌹ஆஞ்சநேயர் வழிபாட்டினால் ஒருவருக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த ஸ்லோகம் பட்டியல் இடுகிறது.
🌹நல்ல புத்தி, தேகபலம், புகழ், சாந்தகுணம், யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, ஆரோக்கியம், உற்சாகம், வாக்குவன்மை ஆகிய எட்டும் ஆஞ்சநேயரை தியானிப்பதால் உண்டாகும்.
🌹 இந்த எட்டையும் எட்டுவதற்கு ஆஞ்சநேயரை வணங்குங்கள்.
ஜெய் ஶ்ரீ ராம்....
21.11.2023.. நேசமுடன் விஜயராகவன்... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🙏ஜெய் ஆஞ்சநேயா
#😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🔍ஜோதிட உலகம் 🌍 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
⛰️🦁⛰️நாமக்கல் நரசிம்மர் திருக்கோவில்⛰️🦁⛰️
🌼இக்கோவிலின் மூலவர் #நரசிம்மர் ஆவார்.தாயார் நாமகிரித்தாயார் ஆவார்.
🌼நாமக்கல் மலையும் அதன் மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் கோட்டையாக உள்ளது.
🌼மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும் மலை மேல் கோட்டையின் உள்ளே வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ளார்.
இப்படி மூன்று அவதாரம் பெற்றிருப்பினும், நரசிம்மரே இங்கு பிரதானம்.
🌼முதலில் கோவிலுக்கு முன்னே #அனுமார் கிழக்குத் திசை நோக்கியவராக 18 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.
அடுத்து நரசிம்மர் நாமகிரித் தாயாருடன் உள்ள சந்நிதி.
🌼நரசிம்மர் மிகவும் கம்பீரமாக பெரிய சிம்மாசனம் ஒன்றின் மீது அமர்ந்து உள்ளார்.
🌼நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உள்ளார்.
🌼திரிவிக்கிரமர்,
வராகர்,
வாமனர்,
அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களில் இடம் பெற்றுள்ளனர்.
🌼நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரில் ஒரு சாளரத்தின் வழியே அனுமாரைக் காணலாம்.
ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரது பாதங்களைப் பார்த்து இருப்பது போல் அமைந்துள்ளது.
🌼கோட்டையின் மேற்கு புறம் அரங்கநாதரைத் தரிசிக்கலாம்.
அரங்கநாதர் கார்கோடகன் மேல் தெற்கே தலையும் வடக்கே காலும் நீட்டிச் சயனித்திருப்பதைக் காணலாம்.
காலடியில் சங்கரநாராயணரைக் காணலாம்.
சற்றுப் பின்னால் அரங்கநாயகி தாயாரைக் காணலாம்.
🌼கீழே இறங்கி வந்தால் கமலாலயம்.
அது அனுமனுக்குத் தாகம் தீர்த்தது.
அடுத்து மலையேறினால் வரதராஜரைத் தரிசிக்கலாம்.
🌼இரண்யனை வதம் செய்த நரசிம்மர் யாரும் நெருங்க இயலாதபடி உக்கிரம் பொங்கக் காட்சி தந்ததைக் கண்டு பிரகலாதன் வேண்டுதலுக்கு இணங்க சாந்தமூர்த்தியாகி சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர,
திருமகள் தனது நாயகனைப் பிரிந்ததால் இந்தக் கமலாலயத்தில் தவம் புரிய,
சஞ்சீவி மலையைச் சுமந்து வந்த அனுமன் கண்டகி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம நரசிம்மரையும் எடுத்துக் கொண்டு வர, இந்தக் கமலாலயத்தைக் கண்டதும் தனது தாகம் தீர்த்துக் கொள்ள நினைத்து நரசிம்மரை கையிலிருந்து கீழே வைக்க, தாகம் தீர்ந்ததும் நரசிம்மரைத் தூக்கினால் நரசிம்மர் வரவில்லை.
எவ்வளவு முயன்றும் அனுமனால் முடியவில்லை.
🌼இங்கே தான் நரசிம்மரை நினைத்து லட்சுமியும் தவம் புரியவே,
அவளுக்கு நரசிம்மர் அருள் புரியவே இங்கே தங்கி விட்டதாகக் கூறுவர்.
🌼அற்புதச் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட நாமக்கல் நரசிம்மர் வரம் தரும் விஷ்ணுவாகக் கருதப்படுகிறார்.
🌼நரசிம்மரை கூப்பிய கரங்களுடன் சேவித்தவாறு ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தவண்ணம் எழுந்து அருள்கின்றார்.
ௐ நரசிங்கா போற்றி.
#✨கடவுள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📸பக்தி படம்
#🔍ஜோதிட உலகம் 🌍 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ஜோதிட பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨கடவுள்
#🕉️ஓம் முருகா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
மாசி மாதம் 10ம் நாள் 22-பிப்ரவரி-26 ஞாயிறு பானு வாரம் சஷ்டி விரத நாளில்
உதய பானு சூரியன் போல் பிரகாசித்து மனதில் உள்ள சஞ்சலம் தரும் இருளை அறவே நீக்கி
அமைதியான ஆனந்தமான தேஜோமய வாழ்க்கை அருளிட எல்லாம் வல்ல கார்த்திகேய முருகனை
அசஞ்சலா பக்தியோடு போற்றி பாடி வணங்கிடுவோம் வாரீர்
சக்தி கொடுப்பாய் சக்தி வேல் ஏந்திடும் உன் கரத்தால் என் கரங்களால் சேவை உனக்கு செய்திடும் எனக்கு
எங்கும் எப்போதும் உன் திருப்புகழை வாயினால் சொல்லி வணங்கும் தவறுகளை மன்னித்து அருள்வாய்
அருளை அருவிபோல் பொழியும் உன்னிடம் தூய தமிழில் வேள்வியாக பக்தி பாடல்களை பாட வைப்பாய்
வையகத்தில் நான் வேண்டும் வரங்களை நிறைவேற்றுபவனே என் இதய கமலத்தை வைத்தேன் உன் காலடியில்
காலால் அனுதினமும் உன் சந்நிதி சுற்றி வந்து அழகா உனை என் இதயத்தில் ஸ்திரமாக அமர்த்தி பார்த்திடுவேன்
வேண்டிய போதெல்லாம் எங்கும் எந்த வேளையிலும் உன் அழகு ரூபத்தை ஆசைதீர பார்த்து ஆனந்தம் அடைவேன்
வேதனை மனதை மற்றும் உடலை வாட்டும்போது குமரா நீயே ஓடி வந்து அணைத்து ஆறுதல் தந்து போக்கிடுவாய்
போற்றி மனம் உருகிட உன் தண்ணருள் பிரவாகத்தில் மூழ்கி மெய் மறந்து எனை மறந்து அமைதி அடைந்திடுவேன்
சக்தி சிவபாலா, சக்தி வடிவேலா, சடாக்ஷரா, சண்முகா, சரவண பவா, சக்ரதாரி மருகா, சரணம் சரணம் கார்த்திகேயா
🙏🦚🐓 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ஓம் முருகா #📸பக்தி படம் #✨கடவுள்
#🕉️ஓம் முருகா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள்








