#🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✨ அக்ஷய திருதியை விரைவில் 🪔 #⭐தேர்தல் வாக்குறுதிகள்🤩 #🔴தேர்தல் கருத்துக்கணிப்புகள்🤔
#🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
#✨ அக்ஷய திருதியை விரைவில் 🪔 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #✡️ராசிபலன் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ஜோதிட பரிகாரங்கள்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள்
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #✨கடவுள்
#👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #👆வாக்களிப்பது எப்படி?🤔 #🤪தேர்தல் அலப்பறைகள்📦 #🔴தேர்தல் கருத்துக்கணிப்புகள்🤔 #⭐தேர்தல் வாக்குறுதிகள்🤩
குரு ராகவேந்திரர் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவரின் எல்லையற்ற கருணையும், "நம்பினோர் கெடுவதில்லை" என்ற வாக்கும் தான். அவரின் அருளால் ஒரு ஏழை பக்தனின் வாழ்வில் நடந்த நிகழ்வு ...
மகானின் அருளால்.
ராகவேந்திரரின் தீவிர பக்தர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தவர். அன்றாட உணவிற்கே கஷ்டப்படும் சூழல் இருந்தாலும், ராகவேந்திரர் மீது அவர் வைத்திருந்த பக்தி மட்டும் குறையவே இல்லை.
ஒருமுறை ராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு அந்த பக்தர் சென்றார். அங்கிருந்த மற்ற செல்வந்தர்கள் குருவுக்கு தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த பட்டுத் துணிகளை காணிக்கையாக அளித்து வந்தனர். இதைப் பார்த்த அந்த ஏழை பக்தர், "என்னிடம் குருவுக்குத் தர எதுவுமே இல்லையே" என்று வருந்தினார்.
அவர் கையில் இருந்தது வெறும் ஒரு மண் கிண்ணம் மட்டுமே. அதில் கொஞ்சம் காய்ந்த தானியங்கள் இருந்தன. மிகவும் தயக்கத்துடனும், சங்கடத்துடனும் கூட்டத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு நின்றார்.
மந்திராலய மகானின் லீலை:
எல்லாவற்றையும் அறிந்த குரு ராகவேந்திரர், செல்வந்தர்களின் விலையுயர்ந்த காணிக்கைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தைப் பார்த்து சத்தமாகக் கேட்டார்:
"எனது அன்பிற்குரிய அந்த பக்தன் எங்கே? அவனிடம் எனக்காக ஒரு விசேஷமான பரிசு இருக்கிறதே!"
அனைவரும் வியப்புடன் பார்க்க, ராகவேந்திரர் அந்த ஏழை பக்தரை அருகே அழைத்தார். பயந்தபடியே வந்த அந்த பக்தர், தன் கையில் இருந்த மண் கிண்ணத்தை நடுங்கும் கரங்களுடன் குருவிடம் நீட்டினார்.
அதிசயம்:
ராகவேந்திரர் அந்த மண் கிண்ணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அவர் அதைத் தொட்ட அடுத்த நொடி, அந்த சாதாரண மண் கிண்ணம் தங்கக் கிண்ணமாக மாறியது! அதிலிருந்த தானியங்கள் நவரத்தினங்களாக ஜொலித்தன.
சுற்றியிருந்தவர்கள் மலைத்துப்போய் நின்றனர். ராகவேந்திரர் புன்னகையுடன் சொன்னார்:
"பக்தியில் உயர்வு தாழ்வு இல்லை. நீங்கள் கொடுக்கும் பொருளின் மதிப்பை விட, அதை எந்த உணர்வோடு கொடுக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். உன்னிடம் இருந்த அந்தச் சிறிய பொருளை நீ முழுமனதோடு எனக்கு அளித்தாய், அதுவே எனக்குப் பெரிய காணிக்கை."
இந்தக் கதையின் நீதி
நமது பக்தி உண்மையாக இருந்தால், நாம் அர்ப்பணிக்கும் மிகச்சிறிய பொருளும் மகானின் பார்வையில் பெரும் மதிப்பை பெறும். ஸ்ரீமன் மூலராமோ விஜயதே... #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
மன தைரியத்தை கொடுக்கும் சக்தி வாய்ந்த நரசிம்மர் மந்திரம்
பெருமாளின் அவதாரங்களில் ஒரே நாளில் தோன்றி மறைந்த அவதாரம் நரசிம்மர் அவதாரம்.அதாவது தன்னுடைய பக்தன் பிரகலாதன் அபய குரலுக்கு ஓடி வந்து காப்பற்றிய நரசிம்மர் அவரை வணங்க நமக்கு எந்த ஒரு துன்பமும் நெருங்குவதில்லை.
ஒரு மனிதனுக்கு நேரம் சரி இல்லை என்றால் தொட்டது எல்லாம் பிரச்சனையாக மாறும்.அந்த வேளையில் வீரனாகவே இருந்தாலும் மன வலிமை குறைந்தே காணப்படுவான்.அது தான் காலம் செய்யும் சூழ்ச்சியும் மாயமும்.
ஆனால்,எவன் ஒருவன் அந்த காலகட்டத்தில் மனம் தளர்ந்து போகாமல் இறைவனை மனதில் நிறுத்தி தன்னம்பிக்கையுடன் போராடுகிறனோ வெற்றி அவன் பக்கம்.அந்த வேளையில் எத்தனை மனிதர்கள் பக்க பலமாக இருந்தாலும்,அவர்களை தாண்டி நம்மை வழிநடத்த இறைவழிபாடு மிக அவசியம்.
அப்படியாக மிகவும் உக்கிர தெய்வமாக கருதப்படுபவர் நரசிம்மர்.ஆம்!காரணம் எங்கெல்லாம் அதர்மம் கையோங்கி தர்மத்தை அழிக்க நினைக்கிறதோ அங்கு எல்லாம் நரசிம்மர் அவதாரம் எடுப்பார்.இவ்வளவு சக்தி வாய்ந்த நரசிம்மர் அவரை முழுமனதார வணங்கி எந்த ஒரு காரியம் செய்ய நம்மை மீறி நாம் முன்னோக்கி செல்ல ஒரு சக்தி தூண்டுவதை பார்க்க முடியும்.
இது தான் நரசிம்மர் வழிபாட்டின் முக்கிய விசேஷமாகும்.ஏன்?கோழை என்று கருதி பின் தங்கியவரும் முன் நோக்கி வெற்றியை அடைய வழிவகுப்பவர் நரசிம்மர்.தர்மம் உங்கள் பக்கம் நிற்க அவர் கவசம் உங்களை காக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
அந்த வகையில் நரசிம்மர் வழிபாட்டோடு சேர்ந்து அவருக்குரிய மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால்,யார் உங்களை வீழ்த்த நினைத்தாலும் உங்கள் முன் அவர்கள் வீழ்ந்து போவார்கள்.நினைத்த விஷயத்தை சாதிக்க நமக்கு தூண்டுகோளாக இருப்பார்.
அவரை வணங்க மனதில் பயத்திற்கு இடமே இல்லை.ஆக,மனம் பலவீனமாகும் பொழுதும்,எங்கே தோற்று விடுவோமோ என்று பயந்து பின் தங்கும் பொழுதும் நரசிம்மரை மனதார நினைத்து சொல்லி வழிபட வேண்டிய மந்திரத்தை பற்றி பார்ப்போம்.
மந்திரம்:
“உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்”
எங்கு இருந்தாலும்,எந்த சூழலில் தவித்து கொண்டு இருந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.பிறகு பிரபஞ்சம் நடத்தும் அதிசயத்தை பார்க்கலாம்.தர்மத்திற்கு வெற்றி நிச்சயம் என்பது அழிக்கமுடியாத உண்மை.ஆக,வருவதை தைரியமாக போராடி வெற்றி காண்போம். #🔍ஜோதிட உலகம் 🌍 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ராசிபலன்
#✨கடவுள் #🕉️ஓம் முருகா #🗓️ தமிழ் மாதங்களின் சிறப்புக்கள் 🌼 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம்
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🏹ராம நவமி வாழ்த்துக்கள்🙏 #🙏பெருமாள்






