
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
#✡️ராசிபலன் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ஓம் முருகா #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ஓம் முருகா #✡️ராசிபலன் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
#📸பக்தி படம் #🙏பெருமாள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️ஓம் முருகா #✡️ஜோதிட பரிகாரங்கள்
இன்று தேய்பிறை பஞ்சமி
********************************
வராகி அம்மன் தோற்றம்
வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமான வர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தி னையும் பெரிய வயிற்றினையும் கொண் டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காண ப்படும்.
வலது கரங்களில் ஒன்று வரத முத்திரை யிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிரு க்கும்.
இடது கரங்களில் ஒன்று அபய முத்திரை யினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும்.
இவர் எருமையை வாகனமாகக் கொண்டி ருப்பார் என வராகியினைப்பற்றி ஸ்ரீ தத்துவநிதி விபரிக்கின்றது. தண்டநாத வராகி, சுவப்ன வராகி, சுத்த வராகி என்னும் மேலும் மூன்று வகையான வராகியை இந்நூலில் கூறப்படுகின்றது.
◆தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையில் இருக்கும்.
◆சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந் திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம் பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
◆சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண் டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச் சந்திரனை சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.
●வராஹி அம்மன் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் நாம் செய்யும் செயல்களாலே ஏற்படுகிற து. இதனால் பல எதிரிகளின் தொல்லை யினால் சிரமப்படுவார்கள். எதிரியின் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள் வராகி அம்மனை வழிபாடு செய்து வந்தா ல் நல்ல பலன் கிடைக்கும்.
எதிரிகளை அழிப்பதற்கு வராஹி அம்மன் ருத்ர அவதாரம் எடுப்பாள். எதிரியின் தொ ல்லை நீங்குவதற்கு வராஹி அம்மனின் மூல மந்திரத்தை 26 நாட்கள் சொல்லி வழி பாடு செய்து வந்தால் வராகி அம்மனுடை ய மொத்த அருளும் உங்களுக்கு கிடைக்கும்.
●பூஜை அறை வழிபாட்டு முறை
வராஹி அம்மனை வழிபடுபவர்கள் வெள்ளை மொச்சை பருப்பை நன்றாக வேக வைத்து அதனுடன் தேன் மற்றும் நெய் கலந்து நைவேத்தியமாக படைத்து வராகி அம்மனை வழிபாடு செய்து வர வேண்டும்.
இந்த வழிபாட்டினை தினமும் செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும், அதோடு தன வசியம் பெருகும். தொழில் விருத்தி அடைந்து நல்ல செழிப்பாக இருக்கும்.
●வராஹி மூல மந்திரம்
ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா
●சகலவித பயங்களும் நீங்க வாராஹி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவியை நமஹ
ஓம் ஹ்ரீம் பயங்கரி அதிபயங்கரி ஆச்சர்ய பயங்கரி
சர்வஜன பயங்கரி ஸர்வபூத பிரேத பிசாச பயங்கரி
ஸர்வ பயம் நிவாரய சாந்திர்பவதுமே ஸதா.
06.04.2026... நேசமுடன் விஜயராகவன்.... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ராசிபலன்
இன்று 07.04.2026 வராக ஜெயந்தி
திருமாலின் அவதாரங்களில் மூன்றாவது, வராக அவதாரம். இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை கடலுக்குள் ஒளித்து வைக்க, மகாவிஷ்ணுவராக அவதாரம் எடுத்து, அசுரனை வதம் செய்து பூமியை மீட்டார்.
ஒரு சமயம், மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய நான்கு மகரிஷிகள் வந்தனர். அவர்களை வாயில் காப்பாளர்களான ஜெயன், விஜயன் இருவரும் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த ரிஷிகள், “நீங்கள் பூலோகத்தில் அசுரர்க ளாக பிறப்பீர்கள்” என்று சாபமிட்டனர்.
அதன்படி அவர்கள் இருவரும், காசியப முனி வருக்கு பிள்ளைகளாக பூலோகத்தில் பிறந்தனர். இரண்யகசிபு, இரண்யாட்சன் என்ற பெயர்களைக் கொண்ட அவர்கள், பல யாகங்களையும், தவங்களையும் செய்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றார்கள்.
அந்த வரங்களைக் கொண்டு, பூலோக மக்களையும், தேவர்களையும், முனிவர்க ளையும் கொடுமைப் படுத்தத் தொடங்கி னர். அவர்கள் கொடுமை எல்லை தாண் டியது. கொடிய அசுரர்களான அவர்கள் இருவருக்கும் பயந்து, தேவர்கள் மறைந்து வாழத் தொடங்கினர்.
இரண்யகசிபு பிரம்மாவை நோக்கி கடும் தவம் இயற்றி, மூன்று உலகங்களையும் ஆளும் வரத்தைப் பெற்றான். இதனால் அவனது சகோதரன் இரண்யாட்சனுக்கு ஆணவம் அதிகரித்தது. அவன் வருண பகவானை பிடித்து துன்புறுத்த நினைத்தான்.
அப்போது வருணன், “நீ என்னிடம் மோது வதை விட, வராக அவதாரம் எடுக்கப் போகும் திருமாலிடம் மோதுவது தான் சிறப்பானது. அவரை வெற்றி கொண்டா ல், அனைத்தையும் வெற்றி கொண்ட வனாவாய்” என்றார்.
அதன்பிறகு வராக மூர்த்தியைத் தேடுவதே, இரண்யாட்சனின் முழுநேர வேலையாகிப் போனது. ஆனால் எங்கு தேடியும் வராகரைக் காணவில்லை. எனவே பூமியைக் கவர்ந்து சென்று கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான்
இதனால் உலக உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. பிரம்மதேவர், பூமியை காப்பாற்ற மகாவிஷ்ணுவை நினைத்து ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்தில் இருந்து கட்டை விரல் அளவு கொண்ட வராகம் தோன்றியது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பிரமாண்டமாக வளர்ந்து நின்றது. மகா விஷ்ணுவே, வராகமூர்த்தியாக அவதரித்திருந்தார்.
மகாவிஷ்ணு வராகமூர்த்தியாய் வந்துள்ள செய்தியை, நாரதர் மூலம் அறிந்த இரண்யாட்சன் விரைந்து வந்தான். அதற்குள் வராகர், பூமி மறைத்து வைக்கப்பட்டிருந்த கடலுக்குள் நுழைந்து விட்டார்.
அங்கு வந்த இரண்யாட்சன், வராகரை தடுத்து போரிட்டான். முடிவில் அவனை அழித்த வராகர், தனது இரண்டு கோரை பற்களுக்கு இடையே பூமியை வைத்து கொண்டு கடலுக்குள் இருந்து மேலே வந்தார்.
அப்படி கடலுக்குள் இருந்து மேல்மட்டத்திற்கு வரும் வழியில், பூமாதேவி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம், வராகர் பதிலளித்துக் கொண்டே வந்தார். பின்னர் பூமியை அதன் இடத்தில் நிலை நிறுத்தினார்.
அப்போது அவர் உடலில் இருந்து பெருகிய வியர்வைத் துளிகளால் நித்யபுஷ்கரணி தீர்த்தம் உருவானது. அந்த தீர்த்தத்தின் அருகில் வராகர் ஓய்வெடுத்தார். பின்னர் கண்விழித்து பார்த்தார்.
அப்போது ஒரு விழிப் பார்வையில் இருந்து அரச மரமும், மறு விழிப் பார்வையில் இருந்து துளசிச் செடியும் உருவானது. தேவர்கள் அனைவரும் வராக மூர்த்தியாக இருந்த மகாவிஷ்ணுவை வழிபட்டனர்.
பின்னர் மகாவிஷ்ணு அங்கிருந்து வைகுண்டம் புறப் படத் தயாரானார். ஆனால் அவரிடம் பூமாதேவி, வராக திருக்கோலத்திலேயே தன்னுடன் சில காலம் தங்கியிருந்து அருள் பாலிக்கும் படி வேண்டியதன் பேரில், பூவராகப் பெருமாளாக அங்கேயே அருள்பாலிக்கத் தொடங்கினார்.
அப்பொழுது, அவருடைய பரிவாரங்களு ம் பூமியிலேயே தங்கின. திருமால் தன் கைகளில் இருக்கும் சங்குக்கு சங்கு தீர்த்தத்திலும், சக்கரத்திற்கு சக்கர தீர்த்தத்திலும், பிரம்மாவுக்கு பிரம்ம தீர்த்தத்திலும், கருடனுக்கு பார்க்கவ தீர்த்தத்திலும், வாயுவுக்கு கோபுரத்திலு ம், ஆதிசேஷனுக்கு பலிபீடத்திலும், விஷ்வக்சேனருக்கு வாசலிலும் இடமளித்து அருளினார்.
அதோடு இங்கு வந்து தன்னை வழிபடு பவர்களை எமதூதர்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்ளும் பணியை ஆதிசேஷனுக்கும், வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை பிரம்மாவுக்கும் வழங்கினார்.
ஓம் நமோ நாராயணாய... #🙏ஜெய் ஆஞ்சநேயா #🙏பெருமாள் #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம்
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼ஓம் நமசிவாய #🌻🌻காலை வணக்கம்🌻🌻
படித்ததில் பிடித்தது
ராமா.....!!!
ஸ்ரீ ராமச்சந்திரனை தஸரத சக்ரவர்த்தி மட்டும் ராமா என்று அழைத்து வந்தாராம். தந்தை என்ற முறையில் இந்த அதிகாரம் அவருக்கு மட்டும் உண்டு.
தாயான கௌஸல்யா மகனை ராமபத்ர என்று அழைத்து வந்தாள் .இது தாயின் வாத்ஸல்யம் நிரம்பியதாக உள்ளது.
சிற்றன்னை கைகேயி ராமச்சந்த்ர என்று அழைப்பாள் .குழந்தையாக இருந்தபோது ஸ்ரீ ராமன் ஆகாயத்தில் இருக்கும் சந்திரன் வேண்டும் என்று அழுதபோது கைகேயி ஒரு கண்ணாடியில் சந்திரனின் பிம்பத்தை காண்பித்து ஸமாதானப் படுத்துகிறாள்.இந்த காரணத்தினால் ராமச்சந்த்ர என்ற பெயர் பொருத்தமாக உள்ளது.
ப்ரம்ம ரிஷிகளான வசிஷ்டர் ஸ்ரீ ராமனை பரதத்துவம் என்று அறிந்து வேதஸே என்று அழைத்தார் .
அயோத்யா நகரத்து ப்ரஜைகள் எல்லோரும் எங்களுடைய ரகுவம்ஸத்து அரசன் என்ற அர்த்தத்தில் ரகுநாத என்று அழைத்து வந்தனர் .
ஸீதாதேவி நாத என்றே அழைத்து வந்தாள் .அப்படி அழைப்பதற்கு ஸீதாதேவிக்கு மட்டுமே உரிமை உண்டு.
மிதிலை நகரத்து மக்கள் அனைவரும் எங்களது ஸீதாதேவியின் பதி என்ற அபிமானத்தினால் ஸீதாயபதயே என்று கூறி வந்தார்கள்.
அந்த ஸ்லோகம் : --
ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம :
இது மிகவும் ப்ரஸித்தமான ஸ்லோகம் .ஆனால் இந்த பத ப்ரயோகங்களில் இருக்கும் உள் அர்த்தம் மனதைத் தொடுவதாகும் .
இப்படிப்பட்ட ராமனுக்கு நமஸ்காரங்கள். #🙏ஜெய் ஆஞ்சநேயா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள்
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🏹ராம நவமி வாழ்த்துக்கள்🙏 #🙏பெருமாள்
'இன்சொல்லின் இறைவன்'
சித்திரகூட மலையில் மந்தாகினி ஆற்றின் கரையில், அந்த அழகிய மாலை வேளையில், லட்சுமணன் வேய்ந்த சிறிய குடிலொன்றில் விறகு அடுப்பின் புகை மேலே கிளம்புகிறது.
அடுப்படியில் சமைத்துக் கொண்டிருப்பவள் சாதாரணப் பெண் அல்ல; ஜனக மகாராஜனின் திருமகள், அயோத்தியின் மருமகள், லக்ஷ்மி தேவியின் அவதாரம். ஆனால் இன்று அவள் ஒரு இல்லத்தரசி மட்டுமே — கணவனுக்காக அன்போடு சமைக்கும் மனைவி.
சீதாபிராட்டி வியர்வையைத் துடைத்துக்கொண்டாள். காட்டில் கிடைத்த கிழங்குகள், கனிகள், கீரைகள் என எல்லாவற்றையும் அன்போடு சமைத்திருந்தாள்.
"என் கணவர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வந்திருக்கிறார். அயோத்தியில் கிடைத்த அரசு விருந்து இங்கு இல்லை. ஆனால் என் அன்பு குறையாது. என் கைகளால் சமைத்ததை அவர் விரும்பி உண்ண வேண்டும்."
இதுவே அவளின் ஒரே ஆசை. வெளியே இலக்குவன் காவல் நிற்கிறான். உள்ளே ஸ்ரீராமபிரான் தர்ப்பைப் புல்லில் அமர்ந்து வேதம் கற்கிறார்.
"ஆரியபுத்ரா! உணவு தயார்" என்று மெல்லிய குரலில் அழைத்தாள் சீதை. (வால்மீகி இராமாயணத்தில் சீதை இராமரை 'ஆர்யபுத்ர' என்று தான் அழைப்பாள்) அந்த மெல்லிய குரலைக் கேட்டதும் ஒரு புன்னகையுடன் ஸ்ரீராமபிரான் வந்து அமர்ந்தார். இலையில் உணவு பரிமாறினாள் சீதை. கண்கள் நிறைந்த பக்தியுடன் கணவனைக் கவனிக்கிறாள்.
"இது எப்படி இருக்கிறது?"
ஸ்ரீராமபிரான் ஒரு கவளம் உண்டார். கண்கள் மூடினார்; பின் திறந்தார். ஒரு புன்னகை மலர்ந்தது. "சீதே... இது மிகவும் சுவையாக இருக்கிறது. காட்டில் கிடைக்கும் கிழங்கும் கனியும் உன் கைகளில் வந்தவுடன் அவை அமிர்தமாகின்றன."
சீதையின் கண்கள் மகிழ்ச்சியில் மின்னின.
இன்னொரு காய்கறியைப் பரிமாறினாள். "இதுவும் சொல்லுங்கள்" என்று கேட்டாள். ஸ்ரீராமபிரான் சிரித்தார். "இதுவும் நன்றாக இருக்கிறது சீதே. சித்திரகூட மலையின் அருளும் உன் அன்பும் சேர்கின்றன. சுவை இரட்டிப்பாகிறது."
சீதை வெட்கத்துடன் தலை குனிந்தாள். "இவர் எப்படி இப்படிப் பேசுகிறார்? ஒவ்வொரு முறையும் என் மனதை மலரச் செய்கிறார்." என்று தன் மனதிற்குள் பேசிக்கொண்டே அடுத்த உணவை எடுத்தாள்.
அதைப் பார்த்ததும் சீதையின் கைகள் நடுங்கின. அந்த உணவு தீய்ந்திருந்தது. கவனம் சிதறிய ஒரு தருணத்தில், விறகடுப்பின் சூட்டில் அது கருகிப் போயிருந்தது. வெளியே பார்க்கவே வேண்டாம் என்று தோன்றும் நிறம்.
"என்ன செய்வது? இதனை அவருக்குப் பரிமாறிவிட்டால் அவர் மனம் நோகுமோ? பரிமாறாமல் இருந்தால் என்ன சொல்வது?" நெஞ்சு படபடத்தது. ஆனால் அவரிடம் ஒன்றையும் மறைத்ததில்லை சீதை. தயக்கத்துடன், நடுங்கும் கைகளுடன், தலை குனிந்தபடி பரிமாறினாள்.
"இது... இது எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள். குரல் மிகவும் மெல்லியதாக இருந்தது. கண்கள் தரையைப் பார்த்தன.
ஸ்ரீராமபிரான் உண்மையை மட்டுமே பேசுபவர். வாழ்நாளில் ஒருமுறை கூடப் பொய் சொன்னதில்லை. தர்மம் என்பது அவருக்கு மூச்சு போன்றது. வால்மீகி முனிவர் ஸ்ரீராமபிரானை வர்ணிக்கும்போது "ப்ரியவாதீ" (இனிமையாகப் பேசுபவர்), "வதான்யஸ்ச" (வள்ளல் குணம் உடையவர்), "சத்யவாதீ" (உண்மையே பேசுபவர்) என்கிறார்.
தன்னை மட்டுமே நம்பி, அரண்மனை சுகங்களைத் துறந்து கானகம் வந்த சீதையின் கண்களில் தெரிந்த அந்தப் பயத்தையும் வருத்தத்தையும் ராமரால் காண முடிந்தது. "இவளை மனம் நோகச் செய்யலாமா? ஆனால் பொய் சொல்லலாமா?" சத்தியமும் அன்பும் அங்கே போட்டியிட்டன.
அந்தத் தருணத்தில் ஸ்ரீராமபிரானின் உதடுகளில் ஒரு புன்னகை மலர்ந்தது.
"சீதே..."
அவள் தலை நிமிரவில்லை. "சீதே, என்னைப்பார்." மெல்ல தலை நிமிர்த்தினாள்; கண்களில் கண்ணீர் தளும்பியது.
ஸ்ரீராமபிரான் சிரித்தார். ஆழமான, அன்பான சிரிப்பு. "நீ மிகவும் நன்றாகச் சமைத்திருக்கிறாய். உன்னிடம் குறை இல்லை. ஆனால் இந்த அக்னி பகவான் சற்று அதிகமாகத் தன் வேலையைக் காட்டிவிட்டார் — அவரும் கொஞ்சம் தீய்த்து எனக்கு அளிக்கும் உணவில் சுவை சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் போலும்!"
சீதை ஒரு கணம் பார்த்தாள். "அப்படியானால்... இது நன்றாக இல்லையா?" என்று பயத்துடன் கேட்டாள்.
ஸ்ரீராமபிரான் அந்த உணவை எடுத்தார். ஒரு கவளம் உண்டார். முகம் மாறவில்லை.
"சீதே, தீய்ந்த உணவு பார்ப்பதற்கு என்னைப்போலவே கருப்பாக (சியாமளம்) இருக்கிறது — அது அழகுதானே? அதைச் சாப்பிடுவதோ ஒரு தனிச்சுவை. எனக்குப் பிடித்திருக்கிறது!"
அந்த வார்த்தைகளைக் கேட்ட சீதையின் இறுக்கமான நெஞ்சு திடீரென மலர்ந்தது. கண்களில் கண்ணீர் நின்றது; உதடுகளில் சிரிப்பு வந்தது. வெட்கம், ஆனந்தம், பக்தி என எல்லாம் ஒருசேரப் பொங்கின.
"இவர் என்ன மனிதர்! தீய்ந்த உணவைக்கூட என் மனம் நோகாமல் பார்க்கிறார். சத்தியத்தையும் விடவில்லை, அன்பையும் விடவில்லை" என வியந்த சீதையின் முகம் வெட்கத்தில் சிவந்தது. கண்கள் நன்றியில் நனைந்தன. அவள் கைகளைக் கூப்பினாள்.
ஸ்ரீராம ஜெயராம் ஜெய ஜெய ராம்! 🙏 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #📸பக்தி படம்







![🤔 ஆன்மீக சிந்தனைகள் - உன்னை வீழ்த்தகாத்திருக்கும் விரோதிகளின் வியூகத்தை துநத்றிறிணீதீ ர ஜயராகவண் உன் வம்சத்தையே நினைத்தது நடக்கும் காத்து ] வாராஹி போற்றிற &0 என்று ஒருமுறை வணங்கி பதிவிடு உன்னை வீழ்த்தகாத்திருக்கும் விரோதிகளின் வியூகத்தை துநத்றிறிணீதீ ர ஜயராகவண் உன் வம்சத்தையே நினைத்தது நடக்கும் காத்து ] வாராஹி போற்றிற &0 என்று ஒருமுறை வணங்கி பதிவிடு - ShareChat 🤔 ஆன்மீக சிந்தனைகள் - உன்னை வீழ்த்தகாத்திருக்கும் விரோதிகளின் வியூகத்தை துநத்றிறிணீதீ ர ஜயராகவண் உன் வம்சத்தையே நினைத்தது நடக்கும் காத்து ] வாராஹி போற்றிற &0 என்று ஒருமுறை வணங்கி பதிவிடு உன்னை வீழ்த்தகாத்திருக்கும் விரோதிகளின் வியூகத்தை துநத்றிறிணீதீ ர ஜயராகவண் உன் வம்சத்தையே நினைத்தது நடக்கும் காத்து ] வாராஹி போற்றிற &0 என்று ஒருமுறை வணங்கி பதிவிடு - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_990599_78f163_1775607988638_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=638_sc.jpg)


