
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨பிரதோஷம்🕉️ #🌺 சிவன் கோவில்கள் 🔱 #✨ மகா சிவராத்திரி விரைவில் 🙏🏻 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
#🙏பெருமாள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #✡️மார்கழி மாத ஜோதிடம்
#📸பக்தி படம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 ragavendra swamigal
#✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️ஓம் முருகா #📸பக்தி படம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#திருமால்நகரம்மதுரை
மதுரையில் ஒரு அபூர்வ நரசிம்மர் தரிசனம் - மன்னாடிமங்கலம் நரசிங்கப்பெருமாள்! 🙏🦁
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயிலின் சிறப்புகளைக் காண்போம்.
✨ இந்தக் கோயிலின் தனிச்சிறப்புகள்:
சாந்தமான நரசிம்மர்: மூலவர் நரசிங்கப்பெருமாள் என்ற திருநாமம் கொண்டிருந்தாலும், சிங்கம் போன்ற முகம் இல்லாமல் பெருமாளைப் போன்றே மிகச் சாந்தமான முகத்துடன், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இரட்டை ஆஞ்சநேயர்: இக்கோயிலின் மிகப்பெரிய சிறப்பு இங்கிருக்கும் இரட்டை ஆஞ்சநேயர் திருவுருவம். நரசிம்ம அவதாரத்தைக் காண ஆஞ்சநேயர் விரும்பியதால், அவருக்குக் காட்சி கொடுக்கும் விதமாக இத்தலத்தின் மகாமண்டபத்தில் ஆஞ்சநேயர் வாசற்காவலராக (துவாரபாலகர்) வீற்றிருக்கிறார்.
அபூர்வ சிற்பங்கள்: ஒரே சிலையில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ள தசாவதாரச் சிலை மற்றும் யானையும் சிங்கமும் தவம் செய்யும் கஜகேசரி கோலம் காணக் கண்கோடி வேண்டும்.
தோஷ நிவர்த்தி: செவ்வாய் கிரகத்தின் அம்சம் கொண்டவராக நரசிம்மர் கருதப்படுவதால், இங்கு வேண்டிக்கொண்டால் செவ்வாய் தோஷம் நீங்கி, தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.
முக்கனி மரங்கள்: மா, பலா, வாழை ஆகிய மூன்று கனிகளும் தரும் மரங்கள் இக்கோயிலின் தலவிருட்சங்களாக அமைந்துள்ளன.
📍 அமைவிடம்: அருள்மிகு நரசிங்கப்பெருமாள் சுவாமி திருக்கோயில், மன்னாடிமங்கலம், சோழவந்தான் வழி, மதுரை மாவட்டம்.
⏰ தரிசன நேரம்: வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8 - 10, மாலை 5 - 7 மணி.
இந்த ஆன்மீகத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து நரசிம்மரின் அருளைப் பெற்றிடுங்கள்! 🌸✨
ஓம்நமோநாராயணா
#🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏பெருமாள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள்
#👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ராசிபலன் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🙏பெருமாள் #✨கடவுள்
*சிவபெருமானின் இந்த அரிய வடிவங்கள்*
மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் எத்தனை எத்தனை அரிய வடிவங்கள்..! அந்த அரிய வடிவங்கள் என்னென்ன?
சிவபெருமானின் இந்த அரிய வடிவங்கள்
பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் எத்தனை எத்தனை அரிய வடிவங்கள்..!
வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரம்பொருள் நம் ஈசன். அந்த அரிய வடிவங்கள் என்னென்ன?
* பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.
* ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.
* தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.
* கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாகக் காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.
* அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.
* கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.
* அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.
* காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.
* மகாராஷ்டிரா மாநில எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.
* பொதுவாகப் பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.
* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.
* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள "அனுமன் காட்"டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.
* பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெய்யாக மாறுகிறது. இந்த வெண்ணெய்யை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.
* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.
* ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார்.
1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.
* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.
* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் "ஜ்வரஹரேஸ்வரர்" என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.
* மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல்கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர். #✡️ஜோதிட பரிகாரங்கள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏🏼ஓம் நமசிவாய #✡️தோஷ பரிகாரங்கள்










