ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
2K views
19 days ago
கோடை வெயிலால் வரக்கூடிய மூன்று முக்கியமான பிரச்சனைகள் உடல் சூடு, மலச்சிக்கல், சூடாக சிறுநீர் கழிப்பது போன்றவை. இவை அனைத்தையும் சரிசெய்யக்கூடிய ஒரு சூப்பரான பொருள் தான் பாதாம் பிசின். இது வெறும் 5 ரூபாயில் கிடைக்கக்கூடியது." என்று கூறினார். பாதாம் பிசினை எப்படி சாப்பிடலாம்? * "ஒரு 5 கிராம் பாதாம் பிசினை எடுத்து இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் இந்த பாதாம் பிசின் ஜெல் போன்று இருக்கும். அதை மற்றொரு டம்ளரில் எடுத்து போட்டு, நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் தேனை சேர்த்து கலந்து குடிக்கலாம். * இல்லாவிட்டால், காலையில் அலுவலகத்திற்கு செல்லும் முன் ஒரு டம்ளர் நீரில் பாதாம் பிசினை சேர்த்து ஊற வைத்து, அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும், ஒரு டம்ளர் மோரில் இந்த பாதாம் பிசினை சேர்த்தும் சேர்க்கலாம். இது இன்னும் அருமையாக இருக்கும்" என்று கூறினார். பாதாம் பிசின் நன்மைகள் 1. மலச்சிக்கல் நீங்கும் பாதாம் பிசினை ஊற வைத்து, காலையில் எழுந்ததும் தேன் சேர்த்து கலந்து குடிக்கும் போது, கோடையில் சந்திக்கும மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் பாதாம் பிசினில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்தால், பாதாம் பிசினை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டு வாருங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும். 2. உடல் சூடு குறையும் கோடையில் உடல் சூடு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பாதாம் பிசினை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, உடல் சூடு தணிந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும். எனவே விலைக் குறைவில் உடல் சூட்டை குறைக்க நினைத்தால், பாதாம் பிசின் சிறந்த தேர்வாகும். 3. செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும் ஊற வைத்த பாதாம் பிசினை மோருடன் சேர்த்து உட்கொள்ளும் போது, இதில் உள்ள புரோபயோடிக் மற்றும் நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்படத் தூண்டி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும். யாரெல்லாம் பாதாம் பிசினை சாப்பிடலாம்? "பாதாம் பிசினை சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் என அனைவருமே சாப்பிடலாம். ஏன் கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு கூட இதை சாப்பிட கொடுக்கலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் பாதாம் பிசினை சாப்பிடும் போது தினமும் தேன் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது." என்று டாக்டர் கூறினார். எனவே நண்பர்களே! பணம் அதிகம் செலவழிக்காமல் உடல் சூட்டைக் குறைக்க அல்லது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நினைத்தால், இந்த பாதாம் பிசினை தினமும் சாப்பிடுங்கள். அதுவும் இதை நீருடன், மோருடன் மட்டுமின்றி, எலுமிச்சை ஜூஸ், சர்பத் என எதில் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடுங்கள். அருமையாக இருக்கும் #🏖️ சம்மர் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🍳Summer ஸ்பெஷல் ரெசிபி #💁‍♀️இயற்கை அழகு குறிப்புகள் #🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ #☀️சம்மர் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்