பக்தியுடன் பதிகங்கள் பல பாடி பாவியேன் வினை களைய பாதங்கள் பணிந்து
குறைமதியை நிறைமதியை போல என்றும் ஒளிர செய்த நின் கருணை செயலை கூறி
அரவு சூடிய அய்யன் அன்புக்கு இணங்கி ஒரு பாகம் கூடிய உம் காதலை புகழ்ந்து கூறி
பெருமழைபோல் கனகமழை பொழிந்த நின் கருணையை வேண்டி கைதொழும்
இவ் சிறியேனுக்கு அருள்வாயே சிந்தாமணியே என் அம்மை ஆச்சியே
( S.ஜெயவீரபத்திரன்)
#🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்