Thangamani
398 views
1 days ago
தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, நான் பாடிக்கீர்த்தனம் பண்ணுவேன், என் மகிமையும் பாடும். சங்கீதம் 108:1 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன். சங்கீதம் 108:2 கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத்துதிப்பேன், ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். சங்கீதம் 108:3 உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. சங்கீதம் 108:4 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும், உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. சங்கீதம் 108:5 உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும். சங்கீதம் 108:6 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன், சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்து கொள்ளுவேன். சங்கீதம் 108:7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன். சங்கீதம் 108:8 மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன், பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன். சங்கீதம் 108:9 அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்? சங்கீதம் 108:10 எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா? சங்கீதம் 108:11 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும், மனுஷனுடைய உதவி விருதா. சங்கீதம் 108:12 தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம், அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார். சங்கீதம் 108:13 Shared from Tamil Bible 8.9 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=108