arukanimembers
469 views
3 days ago
சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பாறைகளால் விபத்து அபாயம்! கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே புளிமூடு பகுதியில் கடந்த மாதம் மழை நீர் வடிகால் ஓடை அமைக்கப்பட்டது . அப்போது அங்கிருந்த பாறைகளை சாலையோரத்தில் வைத்து விட்டு மழை நீர் வடிகால் ஓடை கட்டினர். ஆனால் இன்று வரை அந்த சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கற்கள் அகற்றப்படாமல் அங்கேயே உள்ளது. இதனால் கனரக வாகனங்கள், பேருந்துகள் செல்லும் போது இடையூறாக உள்ளது. மேலும் விபத்து ஏற்பட்டுத்தும் வகையில் அமைந்துள்ளது. பல இடங்களில் வடிகால் ஒடை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் இதே நிலைமை உள்ளது. எனவே பாறை கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்