கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அசம்புரோடு சிபிஎச் ரோடு,ஆராட்டு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது இரவு வேளையில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சம்- மேலும் மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டி சண்டையிட்டு வருவதால் மாடுகளால் பேராபத்து ஏற்படும் முன்பு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மாடுகள் சாலைகளில் திரிவதை தடுக்க வேண்டும் எனவும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து,மாடுகள் வீதி சாலைகளில் சுற்றி திரிவதை ஒடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
பேருந்தை தடுத்து நிறுத்தி, ஓட்டுனரை தாக்க முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட எஸ் ஹெச் மண்டபம் அருகாமையில் அரசு பேருந்து ஓட்டுனர், சாலையின் குறுக்கே நின்றவர்களை ஒதுங்கி செல்ல ஒலி எழுப்பியதால், பேருந்தை தடுத்து நிறுத்தி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி பயணிகளை தவிக்க விட்ட நபர்கள்! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
குமரி மாவட்டம் தோட்டியோடு பகுதியில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஒரு ஆட்டோ அருகிலிருந்த குளத்தில் கவிந்தது.
கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என தகவல். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை
கனிமவள டாரஸ் வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது
* சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்களின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
* சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறையினர் செய்துள்ளனர்.
* இதில் ஒவ்வொரு 2 கி.மீ. தூரத்திற்கும் இருசக்கர வாகன ரோந்து (Two Wheeler Patrol) என மொத்தம் 44 இரு சக்கர வாகன ரோந்தில் 88 போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
* போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பார்க்கிங் வசதிகளுக்காக தனி போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்.
* முக்கியமான இடங்களில் பக்தர்களுக்கு உதவ "May I Help You" சாவடிகள் நிறுவப்படும்.
* பக்தர்களின் பாதுகாப்பிற்கு அவர்களின் பைகளில் reflective strickers பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஓட்டப்படும்.
* பக்தர்களுக்கு வழிகாட்ட 12 இடங்களில் திசைமற்றும் தூரம் காட்டும் வரைபடங்கள் நிறுவப்படும்.
* பெண் பக்தர்களுக்கு உதவ பெண் காவலர்கள் நியமிக்கபடுவார்கள்
* 🚫 சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கனிமவள டாரஸ் கனரக வாகனங்கள் இரண்டு நாட்களுக்கு மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது . #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
சாலை அலட்சியம்: “மரணக் குழி” விபத்து தவிர்ப்பு – பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
ராஜாகமங்கலம்–ஈத்தாமொழி சாலையில் ஆபத்தான குழி; ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மக்கள் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை சுமார் 7.30 மணியளவில் ராஜாகமங்கலம் ஊராட்சி தர்மபுரம் – ஈத்தாமொழி – ராஜாகமங்கலம் சாலையில் ஏற்பட்ட ஆழமான பள்ளம் காரணமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சாலை பணியாளர்களின் அலட்சியத்தால் உருவான இந்த “மரணக் குழி” வழியாக சென்ற வாகனங்கள் கடைசி நொடியிலேயே தப்பியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த பாதிப்பு காரணமாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் நீண்ட நேரம் சிக்கியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தரமற்ற முறையில் சாலை பணிகள் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல் கண்காணிப்புத் துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
குளச்சல் நகராட்சி குப்பை வண்டி மோதி காவலாளி உயிரிழப்பு
குளச்சல் பகுதியைச் சேர்ந்த கபீர் (66) என்பவர், தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2-ம் தேதி, பணியில் இருந்தபோது குப்பைகளைச் சேகரிக்க வந்த நகராட்சி குப்பை வண்டி அவர் மீது மோதி படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி நசீமா அளித்த புகாரின் பேரில், குளச்சல் போலீசார் குப்பை வண்டி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
*இறப்பிலும் இணை பிரியாத தம்பதி*
40 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த கணவன் மனைவி. இறப்பிலும் இருவரும் இணைந்த தம்பதியினர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன்.
கண்ணக்கோடு பகுதியை சேர்ந்த கருணாகரன்(79) நகராட்சி ஊழியராக பணியாற்றி வந்த இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பணக்காடு
பகுதியை சேர்ந்த ஓமனா (74) என்பவரை திருமணம் செய்து கண்ணக்கோடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் 52 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் ஓமனா புற்றுநோய் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு ஓமனா உயிர் இழந்தார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து ஓமனா உடலை கண்ணக்கோடு வீட்டிற்கு கொண்டுவந்து சற்று நேரத்தில் கருணாகரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவரும் உயிர் இழந்தார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
"நகையை திரும்ப கேட்டு பெண் உறவினர்களுடன் நகை கடை முன்பு தர்ணா போராட்டம்"
* மார்த்தாண்டம் (பிப்- 11) : தொலையாவட்டம் அருகே மாங்கரை பகுதியை சேர்ந்தவர் அனிதா,
* இவர் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தனது மகளுக்கு திருமணத்திற்கான நகைகளை செய்வதற்கு மார்த்தாண்டம் அருகே ஞாறம்விளை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு நகைக்கடையில் 26 பவுன் மதிப்பிலான நகை செய்வதற்கான முழு பணத்தையும் செலுத்தி உள்ளதாகவும்,
* முழு பணத்தையும் செலுத்தி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் கடையின் உரிமையாளர்களான சுஜித் மற்றும் சுதர் ஆகியோர் இதுவரையில் வெறும் 3 பவுன் நகையை மட்டுமே அனிதாவிற்கு திரும்ப அளித்துள்ளதாகவும்,
* மீதமுள்ள 23 பவுன் நகையை கொடுக்காமல் சாக்குப் போக்கு சொல்லி காலம் கடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
* இதுகுறித்து பாதிக்கப்பட்டவரான அனிதா காவல்துறையில் புகார் அளித்தும் எந்த ஒரு பலனும் இல்லை எனவே,
* அனிதா தனது உறவினர்களுடன் இன்று நகையை திருப்பி அளிக்காமல் ஏமாற்றி வரும் நகைக்கடையின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறதாக கூறுகின்றனர்
* இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
கும்பிச்சல் கடவு பாலம்: கேரளா முதலமைச்சர் திறந்து வைத்தார்!
* குமரி கேரள எல்லையான ஆறுகாணி அருகே அம்பூரி பகுதியில் இருந்து புரவிமலை, புறத்தி, தென்மலை ஆகிய பகுதிகளுக்கு செல்ல கடந்த 5 தலைமுறையாக பாலம் வசதி இல்லாமல் இருந்தது.
* இதனால் அப்பகுதி மக்கள் நெய்யாற்றில் படகு மூலம் கடந்து வந்தனர்.
* பழங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்ற கேரளா முதலமைச்சர் திரு. பினராய் விஜயன் அவர்கள் 235 மீட்டர் தூர அளவில் பாலம் அமைக்க உத்தரவிட்டார்.
* இந்நிலையில் இன்று(பிப்.11) மாலை 5.30 மணி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் பாலத்தை திறந்து வைத்தார்.
* மேலும் களியக்காவிளை, நெய்யாறறின்கரை, காட்டாகட ஆகிய பகுதிகளுக்கு செல்ல கும்பிச்சல் கடவு பகுதியில் இருந்து 4 பேருந்துகளின் சேவைகளும் துவக்கி வைக்கப்பட்டது.
* இதனால் பழங்குடி மக்கள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
* மேலும் இப்பகுதி ஓர் சுற்றுலா தலமாக மாறி வருகிறது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
*கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டி பாதிப்பால் செயல் இழந்த வாலிபரின் கையை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பல மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி மருத்துவர்கள்நோபிள் தலைமையிலான மருத்துவர்கள் சாதனை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்








![📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - HEL STE] '೦tl D EL 02=010-52 HEL STE] '೦tl D EL 02=010-52 - ShareChat 📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - HEL STE] '೦tl D EL 02=010-52 HEL STE] '೦tl D EL 02=010-52 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_475006_34d3d02f_1770887473303_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=303_sc.jpg)




