Arunachalam
608 views
17 hours ago
இவர்கள் கிறித்துவர்களாக இருந்தாலும் இவர்களை பெரும்பான்மை இந்துக்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு கோவிலுக்குள் சட்டையை கழற்றாமல் அனுமதிக்கிற அந்தப் பண்புதான் பெரியார் மண் தந்தது. இந்துமதம் தனது இறுக்கமான சனாதன பிடிகளை இங்கு தளர்த்தியதற்கான காரணம் அவரின் கடும் விமர்ச்சனங்களே.மதத்தை மறந்து மனிதனை நினைக்கச் சொன்ன அந்த தத்துவத்தின் தாக்கமே ஆகும். தமிழகத்தில் இந்துமதத் தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்த முயன்ற யாரொருவரும் அரசியலில் மக்கள் ஆதரவை பெற்றதில்லை. இராமகோபாலன் தொடங்கி இராம சுப்பு வரை நடுவிலே எச்.ராஜா தொடங்கி இன்னபிற இத்யாதி தலைவர்கள் எல்லாம் வந்து காணாமல் போனார்கள். இங்கே ஜோசப் விஜய்க்கும் சைமன் சீமானுக்கும் இருக்கும் இந்து மக்களின் ஒத்துழைப்பும் அரசியல் ஆதரவும் ஏன் பிற இந்துமத அரசியல் தலைவர்களுக்கு இல்லாமற் போகிறது. என்பதை யோசித்துப்பாருங்கள். இதுதான் பெரியார் மண். இந்த மத நல்லிணக்கம் அவரது கடும் போராட்டங்களால் விளைந்த பண்பு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்! அதனால்தான் இவர்கள் மதவெறுப்பாளர்களால் பாதிக்கப்படாமல் இயங்கி இங்கே சுதந்திரமாக அரசியல் செய்ய முடிகிறது. இது மாதிரி வடநாட்டில் கிறித்துவர்கள் யாராவது மதமாறி இந்துமத தலைவர்களாகி சட்டையை கழற்றாமல் இந்துமதக்கோவிலுக்குள் அப்படியே நுழைந்து விடமுடியுமா? பார்த்துக்கொண்டு விட்டுவிடுவார்களா அவர்கள்? -பாதிரியார் ஹெயின்ஸ்ம் அவரது குழந்தைகளின் அலறல் கேட்கிறதல்லவா...? நீங்கள் பெரியாருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். இவ்விரு கிறித்துவரில் யார் முருகனுக்கு வேண்டப்பட்ட தலைவன் என்று தேர்தல் முடிவில் பார்ப்போம். தமிழ்க்கடவுள் முருகன்,தமிழ்த் தேசியம் பேசும் சைமனின் கொள்கையையா? பெரியாரின் சிந்தனையை ஏற்று 'PLURALISM' பேசும் ஜோசப் விஜயையா யாரை ஆதரிப்பார் என்பதை தேர்தல் முடிவுகளின் மூலம் அறிவிப்பார். இந்த இருவரில் அவர் யாரை கைவிடுகிறாரோ அவர் பொய்யர் என்றாகிவிடுமல்லவா? #👨மோடி அரசாங்கம்