#நல்லதே பேசு நல்லதே நினை முஸ்லிம் மக்கள் கழக நிறுவன தலைவர் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை பகுதியில் உள்ள டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள் மாலை அணிவித்தார் இந்த நிகழ்வின் பொழுது ரோஷனைப் பகுதி வி.சி.க என். ஆளவந்தான். சான்று உறுதி வழக்கறிஞர் பி. சக்கரவர்த்தி. முஸ்லிம் மக்கள் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட பொருளாளர் மு. அப்துல் ஹக்கீம். திண்டிவனம் நகரத் தலைவர் அ. முஹம்மத் சாதிக். வேணுகோபால் எக்ஸ். எம் .சி. எம். ஆனந்தன். எம். மோகன் விசிக கொல்லார். வி. தனசேகர். ஏழுமலை. நல்லதம்பி. சுப்பிரமணி. ராமமூர்த்தி. ஜான் பாஷா . பாலசுந்தரம். வினோத் குமார். ராம்குமார்.ஆகியோர் பங்குபெற்று கீழ்க்கண்ட வரலாற்று துளிகள்
சமத்துவத்தை தீயாக ஏற்றிய புரட்சியின் பெரும் நாயகன் உலக சட்ட மாமேதை பாபாசாகேப் அம்பேத்கர்கருக்கு பிறந்தநாள் முன்னிட்டு
இந்த மண்ணில் ஆயிரம் ஆண்டுகள்
மனிதன் மனிதனை அடிமையாக்கினான்…
சாதி என்ற சங்கிலியால் கட்டி வைத்து
உயிரை நசுக்கியான்!
அந்த சங்கிலியை உடைக்க 1891 ஏப்ரல் 14 ல் மனித குழந்தையாய் அடிமை சங்கிலியை உடைத்து அனைவரையும் இருளிள் இருந்து மீட்க ஒரு சூரியன் பிறந்தது அவர் தான் நம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்!
அவர் ஒரு புரட்சி புரட்சி மனிதர் . தனது வாழ்க்கையை ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்த ஒப்பற்ற புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
தண்ணீர் குடிக்க கூட உரிமை இல்லாத நிலையில் இருந்து
உலகின் மிக உயர்ந்த பல்கலைக்கழகங்களில் படித்து
இந்த நாட்டின் சட்டத்தை எழுதும் உயரத்திற்கு வந்தவர்! டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள்.
இது சாதாரண வெற்றி இல்ல…
அது அடிமைத்தனத்துக்கு எதிரான பழி தீர்ப்பு!
அவரை தாழ்த்த நினைத்த சமூகம் அவர் முன்னால் தாழ்ந்து போனது
அவரை மௌனப்படுத்த நினைத்த அதிகார குரல் அவர் முன்னால் ஊமையாகி போனது
“கற்பி கிளர்ந்தெழு போராடு ” —
இது ஒரு வார்த்தை இல்லை
இது அடிமை சங்கிலியை உடைக்க கொடுத்த ஆயுதம்!
அவர் எழுதிய அரசியலமைப்பு —
ஒரு புத்தகம் இல்லை…
ஒடுக்கப்பட்ட மக்களின் இரத்தத்தால எழுதப்பட்ட உரிமை சாசனம்!
அவர் வாழ்ந்த வாழ்க்கை —
சுக வாழ்க்கை இல்ல…
சுதந்திரம் சமத்துவத்தும் சகோதரதுவத்திற்காக அவரின் வாழ்வுக்கும் . சாவுக்கும் சண்டையிட்ட போராளியின் பாதை!
இன்று நாம் சும்மா நின்று பேசினா கூட
அதுக்கு காரணம் —
ஒரு காலத்தில் அவர் தனியா நின்று போராடினதால்தான்!
இன்று இந்த நாளில்
நாம் மலர் வைப்பது மட்டும் போதாது!
நமது டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நினைவு கூறும் விழாவாக உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற நாள்
அக்காலத்துக்கு டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் இக்காலத்தில் அம்பேத்கர் தன்னலம் ஏற்ற பதவிகளுக்கு ஆசைப்படாத ஒரு மாமனிதர் மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் அனைத்து மக்களால் பாராட்டப்படக்கூடிய ஒரு தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தான் அனைத்து பெருமையும் சேரும்