#🌎பொது அறிவு
பாரதிதாசன்
(கனக சுப்புரத்தினம்
29 ஏப்ரல் 1891-
*21 ஏப்ரல் 1964*)
பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார்.
தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.