#innraya SINTHANAY சிந்தனை.*.( 24.04.2026.)
...........................................
*"இல்லறம் சிறக்க..''*
..........................................
எல்லாருமே இல்வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்று தான் விரும்புவோம்.
ஆனால், யார் யாரெல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை சரியாக கடந்து போகிறார்களோ அவர்கள் மட்டும் தான் இல்லறத்தை அடுத்த கட்டத்திற்குக் எடுத்து செல்கின்றனர்.
இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது...
அதுபோல,பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..
ஆனால்,இருவரும் வேலைக்குச் செல்லும் இந்த காலத்தில்,இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம் பிரிக்க இயலாதபடி வாழ்க்கைச் சமத்துவம் ஆகி விட்டது..
இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், கணவன் மீது மனைவியோ,மனைவி மீது கணவனோ, ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க வேண்டும்.
அன்பால் சாதிக்கும் மனநிலையைக் கொண்டு இருந்தால் தான் குடும்பத்தில் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியாக எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்..,
*ஆம்.,நண்பர்களே.,*
கடைசி வரை துணையாக இருக்கப் போவது குடும்பம். அதற்கு முதலிடம் கொடுங்கள்.,
உங்கள் வாழ்க்கைத் துணைவரை/துணைவியரை உலகின் முக்கிய மனிதராய் நடத்துங்கள்.,
குழந்தைகளுடன் கூடுதல் நேரத்தைச் செலவிடுங்கள்.,
பசுமையான நினைவுகளைக் குடும்பத்துக்குள்
உருவாக்குங்கள்..,........🌹🙏🏻💐