#ஆன்மீக #🚹உளவியல் சிந்தனை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்பது விதி._*
நீங்கள் இப்போது மனதில் என்ன என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்களோ அவை அனைத்தையும் இப்போது நீங்கள் ஈர்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும் ஒவ்வொரு செயலையும் நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு விசயத்தையும் இவ்விதி தான் நிர்ணயிக்கிறது.
நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு என்ன தேவையோ அது குறித்த எண்ணங்களை நம் மனதில் விடாபிடியாக பிடித்து கொண்டிருப்பதோடு> அவை குறித்த முழுமையான தெளிவையும் நம் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது நீங்கள் எதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகி விடுவீர்கள்.
நீ என்ன நினைக்கிறாயோஅதுவாகவே ஆகிவிடுவாய் – சுவாமி விவேகானந்தர்.
“உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்கமுடிந்தால் அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும்.” -பாப் பிராக்டர்
உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால்> உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால்> கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி.
எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை. நம்மால் எண்ணத்தை அளவிட முடியும்.
நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணிகொண்டே இருக்க வேண்டும். நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும். பெரிய வீடு வாங்க வேண்டும்.
கார் வாங்க வேண்டும் நீங்கள் இது போல தொடர்ந்து எண்ணிகொண்டே இருக்கும்போது> நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கறீர்கள்.எண்ணங்கள் அந்த காந்த சமிக்கைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இணையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன.
மனிதன் ஒரு ஒளிபரப்பு கோபுரம். நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது. ஏன் என்றால் நம்மிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும்.
உங்களது வாழ்வில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் உங்களிடம் இருந்து வெளியே போன எண்ணங்கள் கவர்ந்து இழுத்தவையே.
உங்கள் வாழ்கையில் நீங்கள் எதாவது மாற்ற விரும்பினால் முதலில் நீங்கள் வெளிப்படுத்தி கொண்டிருக்கும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்ற வேண்டும்.
எப்போதும் நல்ல எண்ணங்களையேசிந்தியுங்கள்.
நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது. பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம். பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்.
இறைவன் மனிதனைப் படைக்கும் போதே அவனிடம் சகலவிதமான சக்திகளையும் வைத்தே படைத்திருக்கிறான். ஆனால் நாம்தான் நம்மிடமுள்ள சக்திகளைப் பற்றி தெரியாமலும், அதன் ஆற்றல்களை எப்படி வெளிக் கொணர்ந்து இயக்குவது என தெரிந்துகொள்ளாமலும் வாழ்க்கையில் பலவித ஏமாற்றங்களுக்கும், கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நம்மிடம் தேங்கிக் கிடக்கும் மகா சக்திகளை கண்டுபிடித்து அவைகளை நாம் உபயோகப்படுத்தி நமக்கு வேண்டிய செல்வங்கள், தொழில்கள், படிப்பு ஆகிய வசதிகளை மேம்படுத்திக்கொண்டு இன்பமாக வாழலாம்.
இதற்குத் தேவை திட நம்பிக்கையும், தைரியமுமே. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். நம்மேல் நமக்கே ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் ஆத்ம சக்தியை (will power) வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆத்ம சக்தி என்பது நம்மிடம் உள்ளது தான். அதன் ஆற்றல் அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாதது. உருவம் அற்றது தான். ஆனால் அதன் சக்தியை, மகிமையை உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் மட்டுமே அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.
நம்மால் முடியும் என செயல்படுத்தினால் ஆகாய சக்தியையும்கூட நம் உதவிக்கு எடுத்துக்கொண்டு நாம் வெற்றி பெறலாம்.
ஆம்! நம் வெற்றிக்கு பின்வரும் 3 விதிமுறைகளை நாம் கடைப்பிடித்தால் வெற்றி நமக்குதான்.
1. நம்முடைய மனதில் முதலில் நமக்குத் தேவை என்ன என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
2. நம் மனதில் எடுத்த காரியம் நிச்சயம் முடியும் என திடமான அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட வேண்டும்.
3. நாம் என்ன செய்ய வேண்டி இருக்கிறதோ அதை எப்படி செயல்படுத்தலாம் என திட்டம் போட்டு அதை செயல்படுத்த ஆயத்தப் படுத்திக்கொண்டு மனதில் போட்ட திட்டப் படி செயல்பட்டால் வெற்றி நிச்சயம் நம்முடையதே.
நன்றி வாழ்க வளமுடன்.🙏🌹