ஆன்மீக
467 Posts • 829K views
A Mohan Raj
1K views 18 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறை பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய மூன்றாம் தந்திரம் - 13. காயசித்தி உபாயம் இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : "மூன்றாம் தந்திரம்" என்பது திருமூலர் அருளிய திருமந்திரம் என்னும் நூலின் ஒரு பகுதியாகும். இதில் அட்டாங்க யோகம், இயமம், நியமம், ஆசனம், பிரத்தியாகாரம், பிராணாயாமம், தியானம், தாரணை, சமாதி போன்ற யோகப் பயிற்சிகள் பற்றிய பாடல்கள் உள்ளன. இந்தத் தந்திரத்தின் பாடல்கள் யோகத்தின் மூலம் ஆன்மீக அறிவைப் பெறவும், இறைவனை அடையவும் வழிகாட்டுவதாக உள்ளன. *காயசித்தி உபாயம் என்பது உடலை அழியாமல் பாதுகாத்து, ஞானம் பெற்று இறைவனை அடையும் வழிமுறையை விளக்கும் திருமூலரின் திருமந்திரப் பாடல் ஆகும். இந்த உபாயத்தின்படி, முதலில் உடலை வளர்த்து பாதுகாப்பது அவசியம், ஏனெனில் உடல்தான் இறைவனை அடையும் கருவி. உடலை வளர்க்கும் உபாயத்தை அறிந்தவர், உடலை வளர்த்து உயிரையும் வளர்ப்பார்* அமைவிடம் : பொது பாடல் வரிகள் : 13. காயசித்தி உபாயம் 724 உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே 1 725 உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே 2 726 1 சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங் கழற்றி மலத்தைக் கமலத்துப் பூரித்து உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே 3 727 அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில் வஞ்சக வாத மறுமத்தி யானத்திற் செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும் நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே 4 728 மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம் நான்றவிம் முட்டை யிரண்டையங் கட்டியிட்டு ஊன்றி யிருக்க உடம்பழி யாதே 5 729 நூறும் அறுபதும் ஆறும் வலம்வர நூறும் அறுபதும் ஆறும் இடம்வர நூறும் அறுபதும் ஆறும் எதிரிட நூறும் அறுபது மாறும் புகுவரே 6 730 சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான் மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாந் தித்தித்த கூத்துஞ் சிவனும் வௌiப்படுஞ் சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே 7 731 திறத்திறம் விந்து திகழு மகார முறப்பெற வேநினைந் தோதுஞ் சகார மறிப்பது மந்திர மன்னிய நாத மறப்பெற யோகிக் கறநெறி யாமே 8 732 உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச் சிந்தித் தெழுப்பிச் சிவமந fதிரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித் தெழுப்பச் சிவனவ நாமே 9 733 மாறா மலக்குதந் தன்மே லிருவிரற் கூறா இலங்கத்தின் கீழே குறிக்கொண்மின் ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் கூறா உபதேசங் கொண்டது காணுமே 10 734 நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவர் பராநந்தி ஆணையே 11 735 அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டங் கறுத்த கபாலியு மாமே 12 736 பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில் வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார் கண்டிச் சிக்குநற் காயமு மாமே 13 737 சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி அழலும் இரத்ததுள் அங்கியுள் ஈசன் கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே 14 738 நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந் தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும் ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக மாங்கன்று நின்று வளர்க்கின்ற வாறே 15 739 ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப் பாகு படுத்திப் பல்கோடி களத்தினால் ஊழ்கொண்ட மந்திரத் தன்னால் ஒடுங்கே 16 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
27 likes
32 shares
A Mohan Raj
2K views 17 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறை பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம் இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : "மூன்றாம் தந்திரம்" என்பது திருமூலர் அருளிய திருமந்திரம் என்னும் நூலின் ஒரு பகுதியாகும். இதில் அட்டாங்க யோகம், இயமம், நியமம், ஆசனம், பிரத்தியாகாரம், பிராணாயாமம், தியானம், தாரணை, சமாதி போன்ற யோகப் பயிற்சிகள் பற்றிய பாடல்கள் உள்ளன. இந்தத் தந்திரத்தின் பாடல்கள் யோகத்தின் மூலம் ஆன்மீக அறிவைப் பெறவும், இறைவனை அடையவும் வழிகாட்டுவதாக உள்ளன. *திருமூலர் அருளிய திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரத்தில் "கால சக்கரம்" என்ற தலைப்பில் காலத்தின் சுழற்சி குறித்து விளக்கப்பட்டுள்ளது. இது காலத்தைப் புரிந்துகொண்டு அதனை விஞ்சி நிற்கும் வழிகளைப் பற்றிக் கூறுகிறது* *இந்து மதத்தில்: கால சக்கரம் என்பது இந்து மதத்தின் முக்கிய கருத்தான யுகங்களின் சுழற்சி, பிரளயம், மற்றும் 14 உலகங்கள் போன்ற கருத்துக்களையும் குறிக்கிறது. இந்த யுகங்களில் கிருத (சத்திய) யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், மற்றும் கலியுகம் ஆகியவை அடங்கும்* அமைவிடம் : பொது பாடல் வரிகள் : 14. கால சக்கரம் 740 மதிவட்ட மாக வரையைந்து நாடி இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற் பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே 1 741 உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங் கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும் பற்றிய பத்தும் பலவகை நாழிகை அற்ற தறியா தழிகின்ற வாறே 2 742 அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங் கழிகின்ற காலறு பத்திரண் டென்ப தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே 3 743 திருந்து தினமத் தினத்தி நொடுநின் றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி வருந்துத லின்றி மனைபுக லாமே 4 744 மனைபுகு வீரும் மகத்திடை நீராடி எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால் தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு வினையறி யாறு விளங்கிய நாலே 5 745 நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து பாலங் கடந்தது பத்துப் பதினைந்து கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண் டாலங் கடந்ததொன் றாரறி வாரே 6 746 ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந் தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு வேறு பதியங்க ணாள்விதித் தானே 7 747 விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத் தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின் பதித்தறி பத்தெட்டும் பாரா திகணால் உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே 8 748 முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில் இறையிறை யார்க்கும் இருக்க அரிது மறையது காரண மற்றொன்று மில்லை பறையறை யாது பணிந்து முடியே 9 749 முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர் இட்ஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு கடிந்தனன் மூளக் கதுவவல் லார்க்கு நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே 10 750 நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும் பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ் சென்னியின் மூன்றுக்குன்ய் சேரவே நின்றிடும் உன்னி யுணர்ந்திடும் ஓவியந் தானே 11 751 ஓவிய மான வுணர்வை அறிமின்கள் பாவிக ளித்தின் பயனறி வாரில்லை தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே 12 752 தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு மண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங் கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே 13 753 பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ அணங்குட னாதித்த னாறு விரியின் வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே 14 754 சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான் தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற் கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக் குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே 15 755 கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர் சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள் பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில் ஆத்தனு மாகி யலர்ந்திரு மொன்றே 16 756 ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ் சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற் குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே 17 757 கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப் பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற் சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே 18 758 சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர் காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள் சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர் மூத்துடன் கோடி யுகமது வாமே 19 759 உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று அகங்கோடி கண்டு ளயலறக் காண்பர்கள் சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங் குகங்கோடி கண்டல் குயருறு வாரே 20 760 உயருறு வாருல கத்தொடுங் கூடிப் பயனுறு வார்பலர் தாமறி யாமற் செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற் கயலுறு கண்ணியைக் காணகி லாரே 21 761 காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள் நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள் காணகி லாதார் கழிந்த பொருளெலாங் காணகி லாமற் கழிகின்ற வாறே 22 762 கழிகின்ற அப்பொருள் காணகி லாதார் கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங் கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற் கழியாத அப்பொருள் காணலு மாமே 23 763 கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந் திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும் நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே 24 764 நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர் தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது கூடவல் லார்கட்குக் கூறலு மாமே 25 765 கூறும் பொருளி தகார வுகாரங்கள் தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக் கூறு மகாரங் குழல்வழி யோடிட ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே 26 766 அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக் கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே 27 767 அவனிவ நாகும் பரிசறி வாரில்லை அவனிவ நாகும் பரிசது கேள்நீ அவனிவ நோசை ஔiயினுள் ஒன்றிடும் அவனிவன் வட்டம தாகிநின் றானே 28 768 வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர் ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக் கட்டி இருப்பிடங் காணலு மாகுமே 29 769 காணலு மாகும் பிரமன் அரியென்று காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக் காணலு மாகுஞ் சதாசிவ சத்தியங் காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே 30 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
18 likes
21 shares
A Mohan Raj
791 views 2 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் -*நான்காம் தந்திரம் - சித்த ஆகமம் - 6. வயிரவி மந்திரம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் நான்காம் தந்திரம், ஆகமம், யோகப் பயிற்சிகளான "சக்கரம்" போன்ற நுட்பமான விஷயங்களைப் பற்றியும், சித்த மருத்துவம் மற்றும் ஆன்மிக நடைமுறைகளைப் பற்றி விவரிக்கிறது*. வயிரவி மந்திரம் என்பது பைரவரின் சக்தி மற்றும் தெய்வீக வடிவமான வயிரவியைப் போற்றி, அவளது மந்திரங்கள் மற்றும் சக்திகளைப் பற்றிய ஒரு விளக்கமாகும். இந்தக் குறிப்பிட்ட பாடல், பன்னிரண்டு கலைகளாக இருக்கும் வயிரவி, அகாரக் கலை (படைத்தல்) மற்றும் மாயைக் கலையை (மறைத்தல்) சேர்த்து பதினான்கு கலைகளாகவும், அதனுடன் ஆதி மற்றும் அந்தம் சேரும்போது பதினாறு கலைகளாகவும் மாறுவதைக் குறிப்பிடுகிறது. அமைவிடம் : பொது பாடல் வரிகள் : *சித்த ஆகமம் - 6. வயிரவி மந்திரம்* 1075 பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி தன்னில் ஆகாரமும் மாயையும் கற்பித்துப் பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும் சொல்நிலை சோடம் அந்தம் என்று ஓதிடே. 1 1076 அந்தம் பதினாலும் அதுவே வயிரவி முந்து நடுவும் முடிவும் முதலாகச் சிந்தை கமலத்து எழுகின்ற மாசத்தி அந்தமும் ஆதியும் ஆகின்றாளே. 2 1077 ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் போகின்ற பூதம் பொருந்து புராதரர் சார்கின்ற சாரவுழிச் சாரார் கதிர்பெறப் போகுந் திரிபுரை புண்ணியத் தோரே. 3 1078 புண்ணிய நந்தி புனிதன் திருவாகும் எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி பண்ணிய வன்னி பகலோன் மதியீறு திண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே. 4 1079 தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும் பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும் பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே. 5 1080 ஓதிய நந்தி உணரும் திருவருள் நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும் போதம் இருபத்து எழுநாள் புணர்மதி சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே. 6 1081 சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு நாலாங் கரமுள நாகபா சாங்குச மாலங் லயனறி யாத வடிவுக்கு மேல்அங்க மாய்நின்ற மெல்லிய லாளே. 7 1082 மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை கல்லியல் ஒப்fபது காணும் திருமேனி பல்லியல் ஆடையும் பன்மணி தானே. 8 1083 பன்மணி சந்திர கோடி திருமுடி சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி நன்மணி சூரிய சோம நயனத்தள் பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே. 9 1084 பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர் ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர் பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும் சாரித்துத் சத்தியைத் தாங்கள் கண்டாரே. 10 1085 கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம் எண்டிசை யோகி இறைவி பராசக்தி அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி புண்டரி கத்தினுள் பூசனை யாளே. 11 1086 பூசனை கெந்தம் புனைமலர் மாகொடி யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும் வாசம்இ லாத மணிமந் திரயோகம் தேசம் திகழும் திரிபுரை காணே. 12 1087 காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும் பேணும் சிவனும் பிரமனும் மாயனும் காணும் தலைவிநற் காரணி காணே. 13 1088 காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப் பூரண கும்ப விரேசம் பொருந்திய நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த ஆரண வேதநூல் அந்தமும் ஆமே. 14 1089 அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி உரை செய்யும் செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு நந்தி இதனை நவம் உரைத்தானே. 15 1090 உரைத்த நவசத்தி ஒன்று முடிய நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப் பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமம்செய் தானே. 16 1091 தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற ஏமத்து இருளற வீசும் இளங்கொடி ஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை மேவித்து அழுதொடு மீண்டது காணே. 17 1092 காணும் இருதய மந்திர முங்கண்டு பேணும் நமஎன்று பேசும் தலைமேலே வேணு நடுவு மிகநின்ற ஆகுதி பூணு நடுஎன்ற அந்தம் சிகையே. 18 1093 சிகைநின்ற அந்தக் கவசங்கொண்டு ஆதிப் பகைநின்ற அங்கத்தைப் பாரென்று மாறித் தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம் வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே. 19 1094 வருத்தம் இரண்டும் சிறுவிரன் மாறிப் பொருந்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே பெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே. 20 1095 பேசிய மந்திரம் இராகம் பிரித்துரை கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக் கூசியவிந்து வுடன் கொண்டு கூவே. 21 1096 கூவிய சீவன் பிராணன் முதலாகப் பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை மேவிய மாயை விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே. 22 1097 நின்ற வயிரவி நீலி நிசாசரி ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச் சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே. 23. 1098 சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம் நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே. 24 1099 ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம் பேதை உலகிற் பிறவிகள் நாசமாம் ஓத உலவாக் கோலம் ஒன்று ஆகுமே. 25 1100 கோலக் குழவி குலாய புருவத்துள் நீலக் குவளை மலரன்ன கண்ணினாள் ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே . 26 1101 வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத் தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி ஒளிப்படு வித்துஎன்னை உய்ய்க்கொண்டாளே. 27 1102 கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள் கண்டனள் எண்ணென் கலையின் கண் மாலைகள் விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும் தண்டலை மேல்நின்ற தையல் நல் லாளே. 28 1103 தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப் பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின் வெய்ய பவம்இனி மேவகி லாவே. 29 1104 வேயன தோளி விரையுறு மென்மலர் ஏய குழலி இளம்பிறை ஏந்திழை தூய கடைமுடிச் சூலினி சுந்தரி ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே. 30 1105 இனியதென் மூலை இருக்குங் குமரி தனியொரு நாயகி தானே தலைவி தனிப்படு வித்தனள் சார்வு படுத்து நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே. 31 1106 நாடிகள் மூன்று நடுஎழ ஞானத்துக் கூடி யிருந்த குமரி குலக்கன்னி பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி ஊடக மேவி உறங்குகின் றாளே. 32 1107 உறங்கும் அளவில் மனோன்மணி வந்து கறங்கும் வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப் பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு உறங்கல்ஐ யாஎன்று உபாயம்செய் தாளே. 33 1108 உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச் சுவாவை விளக்கும் சுழியாகத் துள்ளே அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே. 34 1109 அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. 35 1110 ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை காரியல் கோதையுள் காரணி நாரணி ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே. 36 1111 குலாவிய கோலக் குமரியென் னுள்ளம் நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும் உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளே கலாவி இருந்த கலைத்தலை யாளே. 37 1112 கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள் முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும் சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே. 38 1113 இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப் பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித் திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்fறி அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே. 39 1114 ஆதி அனாதி அகாரணி காரணி சோதிய சோதி சுகபர சந்தரி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதிஎன் உள்ளத்து உடன்இயைந் தாளே. 40 1115 இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேலி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் அயன்தனை ஓரும் பதமது பற்றும் பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறுத் தாளே. 41 1116 பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின் முற்றி அருளும் முதல்வி கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய் முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே. 42 1117 உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள் பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே. 43 1118 கன்னியுங் கன்னி அழிந்தனள் காதலி துன்னியங fகைவரைப் பெற்றனள் தூய்மொழி பன்னிய நன்னூற் பகவரும் அங்குள என்னேஇம் மாயை இருளது தானே. 44 1119 இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல் பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம் தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில் அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே. 45 1120 ஆதி அனாதியும் ஆய பராசக்தி பாதிபராபரை மேலுறை பைந்தொடி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே. 46 1121 ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர் சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பன் ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே. 47 1122 ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும் தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை மேவும் கிழத்தி வினைகடிந் தாளே. 48 1123 வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித் தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள் எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன் கணவனைக் காண அனாதியும் ஆமே. 49 1124 ஆதி அனாதி அகாரணி காரணி வேதமது ஆய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும் பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே. 50 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
24 likes
12 shares