திருநீற்றுச் சுவடு
753 views
14 days ago
#🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💥ஓம் ந ம சி வா ய💥 சடையப்பர்* (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில் திருச்சென்னம்பூண்டி (கோயிலடி அருகில்) தஞ்சாவூர் மாவட்டம். மூலவர்:திருக்கடையுடைய மகாதேவர் அம்மன் :சித்தாம்பிகா இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். சிவலிங்க வடிவில் உள்ள இறைவனின் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனால் தான் இவர் சடையார் என்ற காரணப் பெயருடன் அழைக்கப்படுகிறார் என தலவரலாறு கூறுகிறது. திருக்கடைமுடி மகாதேவர் கோயில் என முன்பு அழைக்கப்பட்ட இந்த ஆலயம் தற்போது சடையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் மாதிரியான ஆலயம் இது எனச் சொல்லப்படுகிறது. இக்கோயிலில் ராமாயண காலச் சிற்பங்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தட்சிணாமூர்த்தியும், பிரம்மாவும் கோஷ்ட மூர்த்திகளாக அருள்பாலிக்கின்றனர். அம்பாள் சன்னதி தென்திசை நோக்கி தனியாக அமைந்துள்ளது. அம்மன் தனது மேல் வலது கரத்தில் சங்கு, மேல் இடது கரத்தில் கதை தாங்கி அருள்புரிகிறாள். முன்னிரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கிறாள்.ஈசன் சன்னதி கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியின் இங்கு 21 கல்வெட்டுகளை தொல்பொருள் துறை கண்டுபிடித்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இக்கோயிலுக்கு பொன் அளித்தோர் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது. #ஈசனைதேடிகுழு2026-- இறைவன் சன்னதி முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது. திருச்சென்னம்பூண்டி எனும் இத்தலம் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளியிலிருந்து கோவிலடி வழியாக கல்லணை செல்லும் பாதையில் அமைந்துள்ளது. தற்போது தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. #🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #