திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #✨பிரதோஷம்🕉️ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 கருணையை வாரி வாரி கொடுத்துக் கொண்டு இருக்கும்,சிவ சிவா."_*
🖌பக்தி ஓவியம்🎨🙏 - @vinod96429 @vinod96429 - ShareChat
#🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚 #🙏ஓம் முருக சரணம்🙏 #🕉️ஓம் முருகா #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🖌பக்தி ஓவியம்🎨🙏 காத்தருளும் முருகப்பெருமானின் ஆயுதங்கள்!* தேவர்களின் துன்பம் போக்க அவதரித்த சிவபாலன், சிவசக்தி வேலன் ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும், திருக்கரங்களில் பலதரப்பட்ட ஆயுதங்களும் கொண்டு அருட்காட்சி தருகின்றார். தணிகைப் புராணம், குமாரதந்திரம், திருப்புகழ், ஸ்ரீதத்வநிதி, அகத்தியர் அருள்பெறு படலம், தியான ரத்னாவளி போன்ற நூல்கள் முருகப்பெருமானின் ஆயுதங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளன. பன்னிரு கரங்களை உடைய கடவுள் என்பதால் முருகனுக்கே பல்வேறு ஆயுதங்கள் போர்க்கருவிகளாக அமைந்துள்ளது. குறிப்பாக முருகனின் ஆயுதங்களில் வேலுக்குத் தனிச் சிறப்பு உண்டு. முருகப் பெருமானின் திருக்கை வேலே முருகனின் வடிவமாகவும் போற்றித் துதிக்கப்படுகிறது. முருகப் பெருமானின் திருக்கரங்களை அலங்கரிக்கும் ஆயுதங்களைப் பற்றி பார்ப்போம். *சக்தி வேல்* - முருகனின் ஆயுதங்களில் முதன்மையான இடம் வேலுக்குத்தான் உண்டு. காரணம், அன்னை பராசக்தி தன் சக்தி முழுவதையும் ஆவாஹணம் செய்து, முருகப் பெருமானுக்குக் கொடுத்த காரணத்தினால், சக்திவேல் என்று சிறப்பிக்கப்படுகிறது. இன்றைக்கும் கந்த சஷ்டி சூரசம்ஹார வைபவத்தின்போது, அம்பிகை முருகனுக்கு சக்திவேல் வழங்கும் வைபவம் சிக்கலில் நடைபெறுகின்றது. *அங்குசம்* - அங்குசம் என்பது சிறிய ஆயுதம்தான். ஆனால், அந்தச் சிறு ஆயுதமே, மிகப் பெரிய யானையை அடக்கி ஆள்கிறது. அதைப்போல் மும்மலங்களால் (ஆணவம், கண்மம், மாயை) மதம் பிடித்துத் திரியும் நம்மையெல்லாம் அடக்கி ஆள்வதற்கே முருகப் பெருமானின் திருக்கரத்தில் இருக்கும் அங்குசம் உணர்த்துகிறது. *பாசம்* - பகைவர்களின் உடலைக் கட்ட உதவும் கயிறு இது. பகைவர்களின் உடலை மட்டுமல்ல, புலன்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லும் நம் மனதைக் கட்டி அடக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறது. *வில்* - குறிஞ்சி நிலக்கடவுளான முருகப்பெருமான், வேடனாக வந்து வள்ளியை ஆட்கொண்டபோது தாங்கிய வில் ஒரு முக்கிய ஆயுதமாக உள்ளது. தரிசித்தவர் நெஞ்சில் ஆழமாக தைக்கும் அற்புத வில் என்று ஆன்மிகப் பெரியோர்கள் இந்த வில்லைக் குறிப்பிடுவர். *அம்பு* - வில்லிருந்தால் அம்பு இல்லாமலா? கழுகின் இறகினைக் கட்டிய அம்பு முருகப்பெருமானின் கரங்களில் உள்ளது. இது குற்றங்களைத் தைத்து செல்லக்கூடியது. *கத்தி* - தேவசேனாபதியின் கம்பீர அடையாளமாக கத்தி உள்ளது. இடுப்பில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கத்தி வீரபாகுவின் பரிசு என்பார்கள். *கேடயம்* - எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவுவது கேடயம். தன்னை நம்பிச் சரணடைந்தவர்களைக் காப்பாற்றும் கேடயமாகத் திகழும் முருகப் பெருமானின் திருக்கரங்களில் கேடயம் இருப்பது பொருத்தம்தானே! *வாள்* - முருகப் பெருமானின் வீரத்தின் வெளிப்பாடாகத் திகழும் நீண்ட வாளுக்குக் கட்டுவாங்கம் என்று பெயர். இந்த வாள் அனைத்துத் துயரங்களையும் அறுக்கவல்லது. *சூலம்* - சிவனாரின் ஆயுதமான சூலத்தை முருகனும் தங்கியுள்ளார். ஆணவம், கன்மம், மாயை என்னும் தீயவைகளைச் சாய்க்க சூலத்தின் மூன்று கூர்முனைகளும் தயாராக இருக்கின்றன என்பதை சூலம் உணர்த்துகிறது. *கரும்பு*_வில் - மன்மதனைப்போலவும், அன்னை காமாட்சியைப்போலவும் முருகப்பெருமான் கரும்பு வில்லைத் தாங்கியுள்ளார். போகசக்தியின் வடிவாகவே இதைத் தாங்கியுள்ளார். *மலரம்பு* - கரும்பு வில்லுக்குத் துணை இது. மலரம்பு கொண்டு மனம் கவர்ந்தவர்களைத் தாக்கித் தன்வசப்படுத்திக் கொள்பவர் முருகப்பெருமான். *கதை* - திருமால் தாங்கும் கதை, முருகப்பெருமானின் கையில் திகிரி என்ற பெயரில் உள்ளது. எதையும் சுக்குநூறாக உடைக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது. *சங்கு* - வெற்றி நாதம் எழுப்பும் சங்கு முருகப்பெருமானின் அவசியமான ஆயுதமாக உள்ளது. *சக்கரம் -* விஷ்ணுவின் சக்கராயுதத்தை முருகப்பெருமான் ஏந்தியுள்ளார். உண்மையில் விஷ்ணுவுக்கு முன்பே முருகன்தான் சக்கரம் கொண்டிருந்தார் என்று திருத்தணிகை புராணம் கூறுகிறது. கும்பகோணம் அருகேயுள்ள அரிசிற்கரைபுத்தூர் தலத்திலுள்ள முருகப் பெருமான் சக்கரம் ஏந்தியுள்ளார். *வஜ்ரம்* - இந்திரனின் வஜ்ராயுதத்தையும் முருகப்பெருமான் தாங்கியுள்ளார். ஆயிரம் கூர் முனைகளைக் கொண்ட இது எதையும் குத்திக் கிழிக்க வல்லது. *தண்டம்* - நீளமான இந்தக் கைத்தடி எதையும் தாக்கும் திறன் கொண்டது. தண்டாயுதபாணி வடிவமே அற்புதமானது அல்லவா! *உலக்கை* - தோமரம் என்ற உலக்கையைத் தாங்கிய கோலத்தை சூரபத்மனை சம்ஹரித்த தாரகாரி வடிவத்தில் காணலாம். தீமைகளை அழிக்க இத்தனை படைக்கலன்களை முருகப்பெருமான் தாங்கினாலும், அவன் பக்தர்களை அன்பு செய்து அடைக்கலம் தருவது அபய, வரக் கரங்களினால்தான். எனவே 'யாமிருக்க பயமேன்' என்று சொன்ன முருகன் உள்ளவரை நமக்கென்ன கவலை? *🦚ஓம் ஸூப்ரமண்யாய நமஹ:✍🏼🌹*
🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚 - { பறராம்ஜயம் { பறராம்ஜயம் - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏 #🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚 திருமண வரன் அமைய வேண்டுமா? சிறுவாபுரி வள்ளல் முருகனின் திருமணக் கோலத்தை தரிசியுங்கள் ! திருமணத் தடைகளால் கவலைப்படுபவரா நீங்கள்? உங்கள் வீட்டில் பிள்ளைகளுக்கு நீண்ட நாட்களாக வரன் அமையவில்லையா? கவலையை விடுங்கள், வினை தீர்க்கும் வேலவன் இருக்கிறான் சிறுவாபுரியில் ! எங்கும் காணக் கிடைக்காத அரிய கோலம்: பொதுவாக முருகப்பெருமான் கோயில்களில் வள்ளி, தெய்வானை சமேதராகக் காட்சியளிப்பார். ஆனால், சென்னைக்கு அருகே உள்ள சிறுவாபுரி (சின்னம்பேடு) திருத்தலத்தில் ஒரு அதிசயம் காத்திருக்கிறது. இங்கு முருகப்பெருமானும் வள்ளி நாயகியும் ஒருவரை ஒருவர் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். இத்தகைய அரிய மற்றும் அழகான திருக்கோலத்தை வேறு எங்கும் காண்பது மிக அபூர்வம் ! திருமண வரம் தரும் தலம் : வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் பூச நட்சத்திரத்தன்று நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே, சிறுவாபுரிக்கு வந்து இந்த "வள்ளி மணவாளனை" பூச நட்சத்திரத்தன்று தரிசிப்பது மிக விசேஷம். திருமணத் தடை நீங்கும்: ராகு-கேது தோஷம் அல்லது செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகிறவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் கெட்டிமேளம் கொட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. தம்பதியர் ஒற்றுமை: கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருப்பவர்கள் இங்கு வந்து இந்த அன்யோன்யமான கோலத்தை தரிசித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தலத்தின் பிற சிறப்புகள்: இங்கு முருகனைத் தவிர மற்ற அனைத்து சிலைகளும் (மயில் வாகனம் உட்பட) விலைமதிப்பற்ற மரகதக் கல்லால் ஆனவை. சொந்த வீடு அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் செங்கல் வைத்துப் பூஜிக்கும் அற்புதத் தலம் இது. 🙏🪷🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - Bakihi 19 சிறுவாபுரி முருகனின் மிக அரிய திருமணத் திருக்கோலம் ! இன்று இந்த முருகன் உங்கள் கண்ணில் படுவதே உங்களது பெரும் பாக்கியம் !! சரவண பவாய நமஹ ஓம் READ CAPTION Bakihi 19 சிறுவாபுரி முருகனின் மிக அரிய திருமணத் திருக்கோலம் ! இன்று இந்த முருகன் உங்கள் கண்ணில் படுவதே உங்களது பெரும் பாக்கியம் !! சரவண பவாய நமஹ ஓம் READ CAPTION - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🙏ஆன்மீகம் #✨பிரதோஷம்🕉️ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் மாவட்டம், மதுரமாணிக்கம் திரியம்பகேஸ்வரர்: ஜோதிர்லிங்கங்களுக்கு இணையான திரியம்பகபுரம்....* ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான திரியம்பகம் சென்று வழிபட்ட பலனை அருளக்கூடியது இந்தத் திரியம்பகபுரம். மூன்று கண்களை உடையவர் என்ற பொருளில் சிவனாருக்கு இந்தத் திருப்பெயர் அமைந்தது. தமிழகத்தில் திரியம்பகபுரம் என்ற பெயரில் அமைந்திருக்கும் தலம் இது ஒன்றுதான் என்கிறார்கள். கும்பகோணம் - திருவாரூர் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவில், பெரும்பண்ணையூரிலிருந்து ஒரு கி.மீ. தூரத்திலும் சேங்காலிபுரத்திலிருந்து ஒரு ஒரு கி.மீ. தூரத்திலும் திரியம்பகபுரம் கோயில் அமைந்துள்ளது. நாச்சியார் கோயில், நன்னிலம் வழியில் திருவிடைச்சேரி எனும் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ. பயணித்தால் திரியம்பகபுரத்தை அடையலாம். 😯😟😯😟😯 அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை. காலவெள்ளத்தில் எதிர்கொண்டு நிலைத்து நின்றவை 1307 பாடல்களே. அருணகிரிநாதர் முருகப்பெருமான் கோயில்கொண்டுள்ள தலங்களுக்கு எல்லாம் சென்று முருகப்பெருமானைத் தரிசித்துப் பாடியுள்ளார். அவற்றுள் பல தலங்களின் பெயர் இருந்தாலும் அவை எங்கிருக்கிறது என்கிற தகவல்கள் இல்லாமல் இருந்தன. திருப்புகழைப் பாடுவதிலும் திருப்புகழைப் பதிப்பிப்பதிலும் ஆர்வம் கொண்ட திருப்புகழ் அமுதன் என்று போற்றப்படும் வலையப்பேட்டை கிருஷ்ணன் திருப்புகழ் தலங்களைத் தேடிப் பதிவு செய்யும் ஆய்வைத் தொடங்கினார். அப்படி அவர் திருப்புகழ் தலங்களைத் தேடி அலைந்த அனுபவங்களை சக்தி விகடனில், 'கண்டுகொண்டேன் கந்தனை' என்கிற தலைப்பில் தொடராகவும் எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட அன்பர் சுட்டிக்காட்டிய ஒரு அற்புதத் திருப்புகழ் தலமே திரியம்பகபுரம். இந்தத் தலத்தில் அருளும் முருகப்பெருமானை, ‘கனமுறும் த்ரியம்பகபுர மருவிய கவுரிதந்த (அ)றுமுக என இரு கழல் பணிந்து நின்றமரர்கள் தொழவல பெருமாளே’ என்று அருணகிரிநாதர் தம் திருப்புகழில் போற்றிப் பாடியிருக்கிறார். முன்னொரு காலத்தில் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களைத் தரிசிக்க ஆவல் கொண்டு மகாலிங்கம் என்ற அன்பர் மகாராஷ்டிரத்தில் உள்ள ‘திரியம்பகம்’ எனும் தலத்துக்குச் சென்றார். தாம் செய்து வந்த தொழிலுக்காக வாங்கிய கடன் தொல்லையும், வர வேண்டிய பாக்கியும் அவரை மனநிம்மதியில்லாமல் சஞ்சலப்பட வைத்தது. இந்நிலையில் திரியம்பகம் சென்று திரியம்பகேச்வரரைத் தரிசித்துவிட்டு வரும் போது அங்கே முகலிங்கம் ஒன்றை வாங்கி வந்து வீட்டில் வைத்து பூஜை செய்யத் தொடங்கினார். நாளாக ஆக ஏதோ ஒரு வகையில் அவருக்கு மன நிம்மதி கிடைத்தது. ஒருநாள் இரவு அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றி, ‘`திருவாரூர் பக்கத்தில் ‘முக்கண்ணன் ஊர்’ என்று சிவபிரானை தரிசித்து விட்டு வா. உனது பிரச்னைகள் தீரும்” என்று தெரிவித்தாராம். அது முதல் தாம் சந்தித்த நண்பர்கள், கோயில் குருக்கள் என்று பலரிடமும், ‘முக்கண்ணன் ஊர் என்பது எது?' என்று விசாரித்துக் கொண்டிருந்தார். இதனிடையே ஒருநாள் அவர் நண்பருடன் திருப்புகழ் பஜனை ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு முதியவரிடம் இதைப்பற்றிக் கேட்டபோது அவர் சற்றும் யோசிக்காமல், ‘முக்கண்ணன் ஊர் என்றால் அது திரியம்பகபுரம்தான். அம்பகம் என்றால் கண். திரியம்பகம் என்றால் முக்கண்' என்று கூறி திரியம்பகபுரம் தலக்குறிப்பை திருப்புகழ்ப் புத்தகத்தில் காட்டியுள்ளார். ஆனால் அந்தத் தலத்தில் சென்று பார்த்தால் ஆலயம் முழுவதும் சிதிலமடைந்து, திரியம்பகேஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்ட இறைவனின் சிவலிங்க மூர்த்தம் மட்டும் சதுர வடிவ ஆவுடையாருடன் முட்புதர் ஒன்றின் மேட்டின் மீது இருந்தது. மற்றபடி வேறு எந்த தெய்வ மூர்த்தங்களும் காணப்படவில்லை. அதன்பின் அந்தத் தலம் மீண்டும் புதுப்பொலிவு பெறவேண்டும் என்ற ஐயனின் திருவுள்ளப்படி, அன்பர்களின் பெரும் முயற்சியால் புனரமைக்கப்பட்டது. ஆலயத்தில் ஐயன் திரியம்பகேஸ்வரருடன், அம்பிகை அருள்மிகு சௌபாக்ய கௌரி ஆகியோர் பிரதான தெய்வங்களாக எழுந்தருளினர். விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், அருணகிரிநாதர் ஆகியோருக்கும் சந்நிதிகள் ஏற்படுத்தப்பட்டு மகா மண்டபத்துடன் கோயில் அழகுற அமைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தன்னை நாடிவந்து தரிசிக்கும் அனைவரின் வாழ்விலும் நல்ல மாற்றங்களைத் தருகிறார் திரியம்பகேஸ்வரர். அன்னை சௌபாக்ய கௌரியைத் தரிசனம் செய்தாலே மனத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கூடிவிடும். வீட்டில் மங்கலங்கள் தொடர்ந்து நிகழும் என்கிறார்கள் பக்தர்கள். அதற்கேற்ப திருப்புகழ் பஜனையில் முதியவரின் வழிகாட்டுதலின்படி, இத்தலத்துக்கு வந்து திரியம்பகேஸ்வரரை மனமுருக வழிபட்ட, அன்பர் மகாலிங்கத்தின் வாழ்விலும் பல நன்மைகள் விளைந்தன. அவருக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் கிடைக்கப் பெற்று, மிகுந்த மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அடைந்தார். இப்படிப்பட்ட அருணகிரிநாதர் பாடிப்பரவிய இந்தத் தலத்துக்கு வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை வந்து வழிபட்டுச் செல்லுங்கள். திரியம்பகேஸ்வரர் உங்கள் வாழ்விலும் அற்புதம் நிகழ்த்துவார். தற்போது அந்த ஊருக்கு, 'எருமைத்தலை' என்கிற பெயரும் வழங்கப்படுகிறது. தெரிந்து கொள்வோம்.... 🙏🙏🙏🙏🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #konnaiyur #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் முதல் ஆரம்பம் 🙏 இரண்டாம் வாரம் எங்கள் பூ நடைபெறும் 🙏பச்சைபட்டினி விரதம் சமயபுரத்தில் அருள் புரிந்து கொண்டிருக்கும்  தாய்மகமாயிக்கு  வருகிற 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா ( பச்சைபட்டினி விரதம்) ஆரம்பம். நாடோங்கச் செய்பவளே நன்மாரி பெய்பவளே வீடோங்க வைப்பவளே வேப்பிலையை யணிந்தவளே மாடோங்கப் பார்ப்பவளே மந்திரமா மணியவளே ஏடோங்கும் சமயபுர என்தாயே, காத்தருளே. தீயவரை சண்டையிட்டு தான் பிறரை வெற்றி பெறவேண்டும் என அவசியமில்லை மனதார தாய்மகமாயிடம் வேண்டுதல் வைத்தலே எதிரியின் சரிவு ஆரம்பம் ஆகும்.
🖌பக்தி ஓவியம்🎨🙏 - பக்தர்களுக்காக விரதம் ருக்கும் அம்மன் சமயபுரம் மாரியம்மனின் பச்சைப் பட்டினி விரதம்! பக்தர்களுக்காக விரதம் ருக்கும் அம்மன் சமயபுரம் மாரியம்மனின் பச்சைப் பட்டினி விரதம்! - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ஆகர்ஷண விதி sub contious) மனது நம் நினைத்தால் 6160ర வேண்டுமான ஈலும் நமக்கு கொடுத்து விட முடியும்  அதே மனதிற்கு நம்மிடம்  உள்ள எதையும் பறிக்கும் சக்தியும் உண்டு ஆழ்மனதை சரியாக எனவே பயன் படுத்த வேண்டும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் . -lion Gupta ஆகர்ஷண விதி sub contious) மனது நம் நினைத்தால் 6160ర வேண்டுமான ஈலும் நமக்கு கொடுத்து விட முடியும்  அதே மனதிற்கு நம்மிடம்  உள்ள எதையும் பறிக்கும் சக்தியும் உண்டு ஆழ்மனதை சரியாக எனவே பயன் படுத்த வேண்டும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் . -lion Gupta - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #பக்தி
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - மூன்று குணங்களால் ஆன வஸ்துக்களால் அவ்வுலகமெல்லாம் மயங்கிப்போய் உள்ளதால் இவைகளுக்கு மேலாகிய என்னை அறிவதில்லை இனிய காலை வணக்கம் மூன்று குணங்களால் ஆன வஸ்துக்களால் அவ்வுலகமெல்லாம் மயங்கிப்போய் உள்ளதால் இவைகளுக்கு மேலாகிய என்னை அறிவதில்லை இனிய காலை வணக்கம் - ShareChat
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன்🔥🔱🔥🔱 #konnaiyur சிவ தரிசனம்* ஶ்ரீ சிவ துதி கரசரண கிருதம் வாக் காயஜம் கர்மஜம் வா ச்ரவண நயனஜம் வா மானஸம்வாபராதம் விஹிதம் அவிஹிதம் வா ஸர்வமே தத்க்ஷமஸ்வ ஜெய ஜெய கருணாப்தே ஸ்ரீ மகாதேவ ஷம்போ! என்னுடைய கைகளாலும் கால்களாலும் உடலாலும் பேச்சினாலும் காதுகளாலும் கண்களாலும் மனதாலும் செய்து போய செயல்களில் உள்ள செய்யக்கூடாத அனைத்து பாவங்களையும் மன்னிக்க வேண்டி கருணையின் கடலாகிய உன்னை சரணடைகிறேன் மஹாதேவா! என்றும் உம் புகழ் ஓங்குக !! இன்று, *சோமவாரம்* திங்கள் கிழமை ! #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - [ca] [ca] - ShareChat
#காலை வணக்கம் #பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏ஏகாதசி🕉️ எழுந்து கண் திறக்கும் முன், நாராயணனின் திருநாமம் உச்சரிப்போம்; அவன் அருளால் இந்நாள் மலரட்டும், வாழ்வில் ஒளி பெருகட்டும். 🙏 *காலை வணக்கம்*🙏 *ஸ்ரீமன் நாராயணாய நம: 🙏🪷*
காலை வணக்கம் - ShareChat
#🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ #காலை வணக்கம் #பக்தி #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
🔍ஜோதிட உலகம் 🌍 - தினம் ஒரு திருமந்திரம் 2033 அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை  அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே 3 பொருள் ஐம்பொறிகளையும் அடக்குதல் என்பதற்கு Orulgly 0৮0556' பொருள் அவற்றைக் 6TCTLI மாணாக்கரக்கு  அடக்கு  அடக்கு அவற்றை எனன வலியுறுத்திக் கூறும் ஆசிரியா ஞானாசிரியர் உண்மை அவ்வாறு உயர்நிலை  ஏனெனில் ஆகார்  அடக்கி வானுலகத்திலும் பெற்றவர் அதற்குக் 606716u . கெடுத்தொழித்தால்  ஐம்பொறிகளைக் காரணம் அவற்றால் அறிந்து வருகின்ற ஆன்மா அறிவற்ற சடம் போல் ஆகிவிடும் அதனையறிந்து  யான் அவற்றைக் செயற்பட கெடுத்திடாது வைத்தே பெறுகின்ற ஞானத்தை அறிந்தேன்  சிவ கோநடம் வண்முகம்  தினம் ஒரு திருமந்திரம் 2033 அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை  அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே 3 பொருள் ஐம்பொறிகளையும் அடக்குதல் என்பதற்கு Orulgly 0৮0556' பொருள் அவற்றைக் 6TCTLI மாணாக்கரக்கு  அடக்கு  அடக்கு அவற்றை எனன வலியுறுத்திக் கூறும் ஆசிரியா ஞானாசிரியர் உண்மை அவ்வாறு உயர்நிலை  ஏனெனில் ஆகார்  அடக்கி வானுலகத்திலும் பெற்றவர் அதற்குக் 606716u . கெடுத்தொழித்தால்  ஐம்பொறிகளைக் காரணம் அவற்றால் அறிந்து வருகின்ற ஆன்மா அறிவற்ற சடம் போல் ஆகிவிடும் அதனையறிந்து  யான் அவற்றைக் செயற்பட கெடுத்திடாது வைத்தே பெறுகின்ற ஞானத்தை அறிந்தேன்  சிவ கோநடம் வண்முகம் - ShareChat