
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #பக்தி #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #பக்தி #✡️ஜோதிட பரிகாரங்கள் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 கிரிவலப்பாதையில் உள்ள அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள்...*
*இந்திரலிங்கம்:*
கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.
*அக்னிலிங்கம்:*
இது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும். எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.
*எமலிங்கம்:*
கிரிவலப் பாதையில் 3-வது லிங்கம். ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம். கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
#நிருதிலிங்கம்
மலை சுற்றும் பாதை யில் 4-வது லிங்கமாகும். நிருதி லிங்கத் தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக (இயற்கையாக) அமைந்த நந்தி தெரியும். இத்திசைக்கு அதிபதி ராகு. இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
#வருணலிங்கம்
ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது. மேற்கு திசையின் அதிபதி சனி. இங்கு வழிபட்டால் கொடிய நோயி லிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.
#வாயுலிங்கம்
இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, பொறுமை, கண் திருஷ்டி, பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.
#குபேரலிங்கம்
7-வது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மனம் அமைதி அடையும்.
#ஈசான்யலிங்கம்
கிரிவலப் பாதை யில் கடைசி லிங்கம். ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன். இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும்.
👏👏👏🙏🙏🙏
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
ஓம் சிவாய நமஹ
சிவ சிவாய நமஹ.....
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✡️ஜோதிட பரிகாரங்கள் சிறிய வீட்டில் வசித்தால், "அதோ அந்த பங்களா இருக்கிறதே! அதைப்போல பெரிய வீடு ஏதாவது அமையாதா" என ஏங்குகிறார்.வீட்டில் வசதிகள் அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்.
இதோ ஒரு சம்பவம்.
தேவலோக அரசன் இந்திரன், எந்த உலகத்திலும் இல்லாத அளவு ஒரு பெரிய மாளிகை கட்டும்படி தேவலோக சிற்பி விஸ்வகர்மாவுக்கு உத்தரவிட்டான்.
விஸ்வகர்மா ஒரு மாளிகையை கட்ட ஆரம்பித்தார். இந்த சமயத்தில் நாரதர் அங்கு வந்தார் அவரிடம் மாளிகை கட்டுமான பணியை காட்டிய இந்திரன்,"இதைவிட பெரிய மாளிகையை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?"
எனக் கேட்டான்.
"இந்திரா! இந்தக் கேள்விக்கு என்னை விட சிறந்த பதில் தருபவர் ரோமச முனிவர். அவர் வயதில் பெரியவர். பல உலகங்களுக்கும் சென்று வந்தவர் அவரிடம் கேள்"என சொல்லி சென்றுவிட்டார்.
அந்த சமயத்தில் ரோமசர் அங்கு வந்தார். அவரது தலையில் ஒரு சிறிய பாய் மட்டும் இருந்தது.
அவரிடம் இந்திரன், "இந்த பாய் எதற்கு? பெரிய வீடு கட்டி அதில் தங்க வேண்டியதுதானே" என கேட்டான்.
"இந்திரா! இந்த சிறிய உடலை மழை வெயிலில் இருந்து பாதுகாக்க இது போதும் என் உடலில் உள்ள ரோமங்கள் முழுவதும் உதிர்ந்தால்தான் எனக்கு இறப்பு வரும். இதுவரை மார்பில் ஒரு காசு அளவு மட்டுமே ரோமம் உதிர்ந்திருக்கிறது.
16 இந்திரர்கள் வாழும் காலம், பிரம்மாவுக்கு ஒரு நாள். அப்படி 365 பிரம்ம நாட்கள் கழிந்த பிறகு தான் ஒரு ரோமம் உதிரும். அப்படி குறைந்த நாட்கள் வாழப்போகும் எனக்கு எதற்கு வீடு?" என்றார்.
எண்ணிப் பார்க்க முடியாத நாட்கள் வாழ போகிற ஒருவர் கூட, அடக்கமாக தன் வாழ்நாள் பற்றி பேசுகிறார். வீடு தேவை இல்லை என்கிறார்.
குறைந்த காலமே வாழப் போகும் தனக்கு எதற்கு பெரிய வீடு என யோசித்த இந்திரன், மாளிகைப் பணியை அத்துடன் நிறுத்தி விட்டான்.
நமது சிறிய உடலுக்கு சிறிய இடமே போதும் என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம். #பக்தி #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
#✡️ஜோதிட பரிகாரங்கள் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✡️தோஷ பரிகாரங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 ஆன அபூர்வ பைரவர்
சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் என்ற ஊரில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சமீபவல்லி.
இக்கோவிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். இந்த காசி பைரவரின் சிறப்பு என்னவென்றால் இவர், பழனிமலை தண்டாயுதபாணியை போல், நவபாஷாணத்தால் ஆனவர். இச்சிலையை போகர், பழனிமலை தண்டாயுதபாணிக்கு முன், பிரதிஷ்டை செய்தார். இந்த பைரவர் சிலையை போகர் தான் செய்தார் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில், பைரவருக்கு பின்புறம் தீபாராதனை காட்டும் சமயத்தில், முன்புறத்தில் பழனி ஆண்டவரின் உருவத்தில் காட்சியளிக்கார் பைரவர்.
நீல நிறமாக மாறும் நைவேத்திய பொருட்கள்
இந்த காசி பைரவர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார் அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி பாலதேவர் இருக்கிறார். இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், பைரவருக்கு அபிஷேகம் செய்யும் நீரிலும், சார்த்தும் வடைமாலையிலும் கூட விஷமேருகிறது. இதனால் நீரும், வடைமாலையும் சில மணி நேரங்களில் நீல நிறமாக மாறி விடுவது அதிசயம். ஆகையால் தீர்த்தமோ,வடைமாலையோ இங்கு பிரசாதமாக தருவது கிடையாது. இதன் மருத்துவ சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள், படைக்கப்படும் வடைமாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் சன்னிதியின் கூரை மீது போடப்படும். வடைகளை, பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் தீர்த்தம் கூட, பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர்
இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது. இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு . பக்தர்கள் பைரவரின்பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தால், வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம். இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். வன்னி மரத்தின் அடியிலிருந்து அவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்கிறார்கள். பௌர்ணமி அன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
"ஓம் ஹ்ரீம் மகாபைரவாய நமஹ
போக நாதர் போற்றிய கால பைரவாய நமஹ
சர்வ சத்ரு நாசய நாசய, சர்வ ரோக நிவாரணாய
மம தன தான்ய விருத்திம் குரு குரு ஸ்வாஹா."
"ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்."
"ஓம் ஐயும் கிலியும் சவ்வும்
ஹ்ரீம் ஐயும் க்ரோம்கார மகாபைரவா
சர்வ சத்ருக்களை வசி வசி, நாசய நாசய
போக நாதர் வாக்குப்படியே ஓம் நமசிவாய ஸ்வாஹா."
"அஞ்சனக் கண்ணன் அனல்தெறிக்கும் சூலத்தன்
வஞ்சகர் நெஞ்சு பிளக்கும் வயிரவன் — நெஞ்சில்
பதித்தாரைக் காக்கும் போக நாதன் பாதம்
துதிப்பாரே எந்நாளும் வாழ்வு."
"ஓம் ஹ்ரீம் மகா காலபைரவாய
'ஹ்ரூம்' பட் ஸ்வாஹா"
"ஓம் ஹ்ரீம் க்ஷாம் க்ஷீம் க்ஷூம்
மகா கால பைரவாய, சர்வ சத்ரு நாசய
அகத்திய மாமுனி வாக்குப்படி
மம வசம் குரு குரு ஸ்வாஹா."
"செக்கச் சிவந்த ஒளிவடிவாய் நின்றவனை
முக்கண்ணன் மைந்தனை முப்புரமும் வென்றவனை
திக்கெட்டும் காக்கும் திருநீல கண்டவனை
நெஞ்சில் நினைப்பாரைக் காப்பான் வயிரவனே."
"ஓம் ஐம் க்லௌம் ஹ்ரீம்
சொர்ண ஆகர்ஷண பைரவாய
மம தாரித்ரிய வித்வேஷணாய
தன தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா."
ஆதி அந்தம் இல்லாத கால வயிரவனை
சோதிப் பிழம்பாய் சுடர்விடும் முக்கண்ணனை
பாதம் பணிந்து பதினெண் சித்தர்களும்
ஓதி நின்றார் காப்பாய் என்று!"
"ஓம் க்ரௌம் க்ரௌம் நமோ பகவதே
கால நாசகாய, சர்வ பூத பிரேத பந்தனாய
காகபுசுண்டர் போற்றிய மகா பைரவாய
ஹும் பட் ஸ்வாஹா."
ஓம் சிவ சிவ ஓம் 🪷 🙏🏻.
#பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✡️ஜோதிட பரிகாரங்கள் ரகசியம் விஜயாபதி!*
இந்தியாவில் *ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில்* தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.
விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது.
விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது, அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.
அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும், ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள். அப்படி கொன்றதால், இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி...
300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர்.
இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.
விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.
இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது. எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும்.
விஸ்வாமித்திர மகரிஷி, தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார்.
தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர். விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர்.
கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும்.
இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற தகுதி பெற்றார் .
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து . அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும் (காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .
(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )
விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனைஅன்னதானம் நடைபெறுகிறது.
*ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!*
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 ஒரு சிவத்தலம் - 56**
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
அரச குடும்பத்திற்குத் தவறாமல் பால் விநியோகித்து வந்த ஒரு பால்காரர், அரண்மனைக்குச் செல்லும் வழியில் தவறாமல் ஒரு குறிப்பிட்ட கல்லின் மீது தடுக்கி விழுவார்.
ஒவ்வொரு முறையும் அவர் தடுக்கி விழும்போது, பால் பாத்திரம் கவிழ்ந்து, பால் அந்தக் கல்லின் மீது கொட்டிவிடும். இந்த விசித்திரமான நிகழ்வு பல நாட்களாகத் தொடர்ந்தது, இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இந்தத் தொடர்ச்சியான சம்பவத்தால் கலக்கமடைந்த அவர், இறுதியாக அரசரை அணுகி தனது அசாதாரண அனுபவத்தை விவரித்தார்.
பால்காரனின் கூற்றால் ஈர்க்கப்பட்ட அரசன், கல் கிடந்த இடத்திற்குத் தன் பரிவாரங்களுடன் புறப்பட்டான். அரசனுடைய ஆட்கள் தங்கள் கூர்மையான கோடரிகளைப் பயன்படுத்தி அதை அகற்ற முயன்றபோது, முதல் அடியிலேயே கல்லிலிருந்து இரத்தம் வழிந்தோடியதைக் கண்டு திகைத்துப்போனார்கள்.
திகைப்பும் பிரமிப்பும் அடைந்த அரசனையும் அவனது பரிவாரங்களையும் நோக்கி ஒரு தெய்வீகக் குரல் ஒலித்தது; அது, கல் நின்றிருந்த அதே இடத்தைத் தோண்டிப் பார்க்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டது.
கல்லைச் சுற்றியுள்ள நிலத்தைத் தோண்டியபோது, அது உண்மையில் ஒரு புனிதமான சிவலிங்கம் என்பதையும், அதில் கோடரியால் ஏற்பட்ட ஒரு தெளிவான வெட்டுக் குறி இருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.
அது ஒரு சுயம்பு லிங்கம் என்பதை உணர்ந்த மன்னர், அதை மரியாதையுடன் பிரதிஷ்டை செய்து, அதே இடத்தில் ஒரு கோயிலைக் கட்டவும் ஆணையிட்டார். இன்றுவரை, அந்தக் கோடரியால் ஏற்பட்ட தழும்பு, அந்த லிங்கத்தில் தெளிவாகத் தெரிவதோடு, அந்த தெய்வீக வெளிப்பாட்டிற்கு மௌன சாட்சியாகவும் நிற்கிறது.
'திருநெல்வேலி' என்ற பெயரின் தோற்றம்
திருநெல்வேலி என்ற பெயரின் தோற்றம், சிவபெருமானின் தீவிர பக்தரான வேத பட்டரை மையமாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான புராணக்கதையுடன் தொடர்புடையது.
அசைக்க முடியாத பக்தியுடன், பட்டர் அந்த ஊரில் உள்ள வீடுகளில் இருந்து விடாமுயற்சியுடன் நெல்லைச் சேகரித்து, ஒரு புனித சேவையாக சிவபெருமானுக்கு அர்ப்பணிப்பார்.
ஒரு நாள், பட்டர் சேகரித்த நெல்லை வெயிலில் காய வைப்பதற்காகத் திறந்த வெளியில் பரப்பிவிட்டு, அருகிலிருந்த ஆற்றில் குளிக்கச் சென்றார்.
அவர் குளித்துக் கொண்டிருந்தபோது, கருமேகங்கள் திரண்டு திடீரெனப் பெருமழை பெய்யத் தொடங்கியதும், அது நெல்லை அடித்துச் சென்றுவிடும் என்று அச்சுறுத்தியதால் அவர் பதற்றமடைந்தார். இறைவனிடம் இறைஞ்சினார்
எல்லா இடங்களிலும் மழை கொட்டிக்கொண்டிருந்த வேளையில், சூரிய ஒளியின் ஒரு பிரகாசமான வட்டம் அந்த நெல்லின் மீது பட்டு, அதை முற்றிலும் உலர்ந்த நிலையில் வைத்திருந்தது.
இந்த தெய்வீக அற்புதத்தைக் கண்டு திகைத்துப்போன வேதபட்டர், ராமபாண்டியன் மன்னரிடம் விரைந்து சென்று, தான் கண்டதை விவரித்தார்.
மன்னர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து, அந்த அசாதாரணக் காட்சியைக் கண்டார் — சுற்றிலும் மழை பெய்துகொண்டிருந்தபோதிலும், அது நெற்பயிரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வேலி போல அமைந்து, அதைச் சற்றும் தீண்டாமல் விட்டிருந்தது.
தனது பக்தனின் காணிக்கையைப் பாதுகாத்துக்கொண்டே, உலகின் மீது மழையைப் பொழிந்த இறைவனின் எல்லையற்ற கருணையால் பெரிதும் நெகிழ்ந்த, அங்குள்ள மூலவர், நெல்வேலிநாதர் — அதாவது நெற்பயிரைக் காக்கும் இறைவன் — என்று போற்றப்பட்டார்.
அந்தப் புனித நாள் முதல், முன்னர் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட அந்தப் பகுதி, நெல்வேலி என்றும், பின்னர் திருநெல்வேலி என்றும் கொண்டாடப்பட்டது.
இவ்விடம் ஒரு காலத்தில் வேணுவனம் (மூங்கில் காடு) என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றன. சிவபெருமான் இங்கு சிவலிங்கமாகத் தோன்றியதாகவும், நான்கு வேதங்களும் மூங்கில் மரங்களைப் போல அவரைச் சுற்றி நின்று தெய்வீக நிழலையும் பாதுகாப்பையும் வழங்கியதாகவும் நம்பப்படுகிறது.
இதன் நினைவாக, இங்குள்ள மூலவர் வேணுவனநாதர் என்று வழிபடப்பட்டார்.
அனவரத கான் சன்னிதி
பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான வரலாற்றுப் பாரம்பரியத்துடன் தொடர்புடைய அனவரத கான் லிங்கம் என்றழைக்கப்படும் ஒரு சிவலிங்கம் உள்ளது.
நவாபின் மனைவி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டபோது, நெல்லையப்பரின் அருளை நாடும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவுரையின்படி, ராணி கோயில் அர்ச்சகர்கள் மூலம் சிறப்புச் சடங்குகளைச் செய்தார்.
தெய்வீக அருளால், அவர் அற்புதமாகக் குணமடைந்து, பின்னர் அனவரத கான் என்ற மகனைப் பெற்றெடுத்தார்.
நன்றியுணர்வின் அடையாளமாகவும் மரியாதையின் வெளிப்பாடாகவும், பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் அனவரத கான் பெயரில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒரு தனி சன்னதி நிறுவப்பட்டது.
மேலும், நவாபும் அவரது மகனும் உள் பிரகாரங்களுக்குள் நுழையாமல் வழிபட ஏதுவாக, கோயிலின் வெளிச்சுவரில் ஒரு திறப்பும் ஏற்படுத்தப்பட்டது.
கோயில் அமைப்பு மற்றும் கட்டிடக்கலை
இங்குள்ள தெய்வங்களான நெல்லையப்பர் பெருமான் மற்றும் காந்திமதி தேவிக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இவை ஒரு பிரம்மாண்டமான கல் மண்டபத்தால் நேர்த்தியாக இணைக்கப்பட்டுள்ளன.
கோயிலுக்குள் நுழையும் பக்தர்களை, 10 அடிக்கும் மேல் உயர்ந்து நிற்கும் பிரம்மாண்டமான வெள்ளை நந்தி வரவேற்கிறது. நந்திக்கு அருகில் அமைந்துள்ள துஜஸ்தம்பத்தை வலம் வந்து, மேலும் உள்ளே சென்றால், மூலவரின் கருவறையை அடையலாம். வழியில், ஏறக்குறைய 9 அடி உயரம் கொண்ட கம்பீரமான விநாயகர் சிலை, கருவறைக்குள் நுழைவதற்கு முன்பு ஒரு பிரம்மாண்டமான மற்றும் மங்களகரமான காட்சியை அளித்து பக்தர்களைக் கவர்கிறது.
கருவறையைச் சுற்றி மூன்று மையவட்டப் பிரகாரங்கள் அமைந்துள்ளன: இத்திருத்தலத்தின் மூலஸ்தானத்திற்கு அருகாமையில் ஒரு தனி சன்னிதியில் திருமால் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். திருமால் சிவலிங்கத்தை பூஜை செய்வது போன்ற காட்சி இங்கு உள்ளது. அருகில் இருக்கும் உற்சவரான விஷ்ணு பகவானின் மார்பில் சிவலிங்கம் இருக்கின்றது. திருமாலை இந்த கோலத்தில் காண்பது மிகவும் அரிதானது
வெளிப் பிரகாரத்திலிருந்து, 'அம்மா மண்டபம்' என்று அழைக்கப்படும் மண்டபத்தின் வழியாக பக்தர்கள் அம்மன் சன்னதிக்குள் நுழையலாம்.
இந்த பரந்த பிரகாரத்தில், இங்கு ஆறுமுக நாயனராகப் போற்றப்படும் முருகனின் கம்பீரமான, தெற்கு நோக்கிய சன்னதியும் அமைந்துள்ளது. ஆறு முகங்கள் மற்றும் பன்னிரண்டு கைகளுடன், மயிலின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் தெய்வம், இருபுறமும் வள்ளியும் தெய்வானையும் நிற்க, காட்சியளிக்கிறது.
இக்கோயில், அதன் பிரம்மாண்டமான ஆயிரம் தூண் மண்டபத்திற்காகப் புகழ் பெற்றது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஐப்பசியின் போது காந்திமதி அம்மை மற்றும் நெல்லையப்பருக்கான புனித கல்யாண உற்சவம் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம், இரண்டு புனித சபைகளைக் கொண்டிருப்பதால் தனிச்சிறப்பு வாய்ந்தது. இங்கு சிவபெருமான், நடராஜர் என்னும் தனது பிரபஞ்ச வடிவத்தில் தெய்வீக நடனம் ஆடுகிறார். காந்திமதி-நெல்லையப்பர் கோயில் தாமிர சபை என்றும், குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோயில் சித்திர சபை என்றும் போற்றப்படுகின்றன.
நடராஜர் தனது பிரபஞ்ச நடனத்தை ஆடிய புகழ்பெற்ற பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபை, கோயிலின் ஒரு தனி வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இந்தப் புனித மண்டபத்தில், நடராஜர் தாமிர சபாபதியாகப் போற்றப்படுகிறார்.
இந்த வளாகத்தின் கூரை செப்புத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, அதே சமயம் தரை நேர்த்தியாக மரத்தாலான ஓடுகளால் பதிக்கப்பட்டுள்ளது. நடராஜரைச் சுற்றி ருத்ரன், விஷ்ணு, நான்கு வேதங்கள் மற்றும் போற்றப்படும் ரிஷிகளின் தெய்வீக உருவங்கள் அமைந்து, மண்டபத்தின் புனிதத்தன்மையை மேலும் மெருகூட்டும் ஒரு தெய்வீக சபையை உருவாக்குகின்றன.
இக்கோயிலில் தனித்துவமாக எழுந்தருளியுள்ள ஜுரதேவர், மூன்று தலைகள், மூன்று கால்கள் மற்றும் மூன்று கைகளுடன், ஒரு கோல், ஒரு மணி மற்றும் ஒரு திரிசூலத்தை ஏந்தியபடி சித்தரிக்கப்படுகிறார்.
அரைத்த மிளகு மற்றும் சுடுநீர் கலவையை ஜுரதேவருக்கு அபிஷேகம் செய்தால் காய்ச்சல் குணமாகும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்;
பெரும்பாலான கோயில்களைப் போலல்லாமல், இந்தக் கோயில் மார்கழி மாதத்தில் அதிகாலையில் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், கார்த்திகை மாதத்தில், அதிகாலை 4:00 மணிக்கே கோயில் திறக்கப்பட்டு, பக்தர்கள் அதிகாலை சடங்குகளைக் காண வழிவகை செய்யப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. இவ்வேளைகளில், அதிதேவதைகளின் ஆசிகளைப் பெறுவதற்காக பக்தர்கள் திரண்டு வருகின்றனர்
பொதுவாக எல்லா கோவில்களிலும் நவகிரக சந்நிதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கித்தான் காட்சி தருகின்றார். இந்த கோவிலில் மட்டும் தனிச்சிறப்பாக வடக்கு பக்கம் காட்சி தருகின்றார். கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு பக்கம் நோக்கி இருப்பதால், மாணவர்கள் இந்த தலத்தில் புதனை வழிபட்டால், உயர்ந்த நிலைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
அதாவது அந்த மாணவர்களுக்கு நல்ல உயர்ந்த சம்பளத்தில், நல்ல வேலை கிடைக்கும். சொந்தத் தொழிலாக இருந்தால் நல்ல வருமானம் கொண்ட தொழிலாக அமையும் என்பது இந்த கோவிலின் நம்பிக்கையாக இருக்கின்றது.
காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் "தங்கப் பாவாடை" அலங்காரம் செய்யப்படுகிறது.
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #✡️ஜோதிட பரிகாரங்கள் பிச்சீஸ்வரர் திருக்கோவில்- திருவண்ணாமலை*
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது, தச்சூர் என்ற ஊர். இங்கு எல்லாவித சர்ப்ப தோஷங்களில் இருந்தும் விடுதலைத் தருகின்ற பிச்சீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த பிரபஞ்சத்தை, அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு நாகங்கள் தாங்கிக் கொண்டிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த எட்டு பேரும்தான், அனைத்து நாகங்களுக்கும் தலைமையானவர்கள்.
இந்த எட்டு சர்ப்ப ராஜாக்களும், வலிமை, தலைமைப்பதவி, தீர்க்காயுள் ஆகிய வரங்கள் வேண்டி, பூமியில் இருந்த சிவாலயங்கள் பலவற்றுக்குச் சென்று சிவலிங்க பூஜை செய்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த எட்டு சர்ப்பங்களும் ஒன்றாக சேர்ந்து, தன் இனத்தவர்களான சர்ப்பங்கள், மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் செய்த பாவங்களுக்காக விமோசனம் வேண்டி வழிபட்டது இந்த ஆலயம் என்கிறது, ஆலய தல வரலாறு.
பழங்காலத்தில் தச்சூர் என்ற இந்த இடம், வாசனை மிகுந்த முல்லை வகையைச் சேர்ந்த பிச்சி மரங்கள் நிறைந்த பிச்சி வனமாக இருந்தது. இந்த வனத்திற்குள்தான் சுயம்புவாக தோன்றிய பிச்சீஸ்வரர் இருந்தார். அவரை அனுதினமும், எட்டு சர்ப்பங்களும் பிச்சி மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தனர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், அந்த எட்டு சர்ப்பங்களின் முன்பாகவும் தோன்றி, உலகில் உள்ள அனைத்து சர்ப்பங்களின் பாவங்களையும், சாபங்களையும் போக்கி, அவர்களுக்கு என்று தனி உலகத்தை (நாகலோகம்) ஏற்படுத்திக் கொடுத்து அருளினார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அந்த எட்டு நாகங்களும் இன்றும், இத்தல ஈசனை வழிபாடு செய்து வருவதாக நம்பப்படுகிறது. பல நாகங்கள் இந்தப் பகுதியில் உலாவுவதை, இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் அதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர்.
சதா சர்வ காலமும் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டிருக்கும் சித்தர்களில் ஒருவர், அகப்பேய் சித்தர். இவர் தினமும் அருவமாக இத்தலத்திற்கு வந்து, அரவங்கள் (பாம்புகள்) வழிபட்ட இவ்வாலய சிவனை வழிபட்டுச் செல்வதாக அகத்தியர் நாடி சொல்கிறது. அப்படி அகப்பேய்ச் சித்தர் வழிபடும் சமயம், சில அபூர்வ நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளதாக இந்த ஊர் மக்கள் சிலாகித்துக் கூறுகின்றனர்.
சோழர் காலத்திற்கு முன்பு இந்த ஆலயத்தின் சிவலிங்கம் புற்றுக்குள் மறைந்திருந்தது. ஒருவரின் கனவில் இங்கு சிவலிங்கம் இருப்பதாக தெரியவர, இந்த புற்று அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது கடப்பாரை, புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்தின் மேற்பகுதியில் பட்டு ரத்தம் வந்ததாகவும், ஈச்சம் கீற்றுகளைக் கொண்டு சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் தைத்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தையலூர் என்று அறியப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது 'தச்சூர்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தை முதலாம் பராந்தகச் சோழன் கட்டியிருக்கிறார். ஆனால் அந்தக் கட்டிடம் பல்வேறு காரணங்களால் வழிபாடு இல்லாமல் சிதைவை சந்தித்தது. இதனால் ஊர் மக்கள் நன்கொடையால் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது.
தச்சூர் ஊரின் வடகிழக்கு திசையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
ஆலய கருவறைக்குள் சதுர வடிவ ஆவுடையாருடன் சுயம்பு மூர்த்தமாக பேரருள் பொழிகின்றார், பிச்சீஸ்வரர். சிவலிங்கத்தின் இடப்பக்கம் கடப்பாரையால் வெட்டுப்பட்டத் தழும்பு பள்ளமாக உள்ளது. தினந்தோறும் அகப்பேய் சித்தரால் வழிபடப்படும் இறைவன் ஆவார். அவ்வப்போது நாகங்களும் இவரை பூஜிக்கின்றன.
ஆலயத்தை வலம் வரும் போது, வாமபாகத்தில் தனியாக சன்னிதி கொண்டு வீற்றிருந்து அருள்புரிகிறார், அன்னை பிரகன்நாயகி.
ஆலயத்தின் ஈசான திசையில் நவக்கிரகங்களும், காலபைரவரும் வீற்றிருக்கின்றனர்.
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக பிச்சி மரமும், தீர்த்தமாக, கார்கோடக தீர்த்தம் இருக்கிறது.
சர்ப்ப சாபம், சர்ப்ப தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆலயத் திற்கு வருகை தந்து, பிச்சீஸ்வரரையும், பிரகன்நாயகி அம்மனையும் வழிபாடு செய்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், ஆரணியில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தச்சூர். #✡️தோஷ பரிகாரங்கள்
#🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #பக்தி
🌹விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி... #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃










