
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 மாவட்டம் பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர்: நோய் தீர்க்கும் ஈசனின் சந்நிதி* ....
சிவங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது பரியா மருதுபட்டி என்னும் அற்புதத் தலம்.
மகாசிவராத்திரியின்போது, மூன்றாம் கால பூஜையில் மூலவருக்கு 108 மூலிகைச் சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்தத் திருக்கோயிலில் இரண்டு அம்பாள்களைத் தரிசிக்கலாம். சுத்த பிரும்மமாகப் பரஞ்சோதி அம்பாளும் பர பிரும்மமாக பார்வதி அம்பாளும் இந்தக் கோயிலில் அருள்பாலிப்பது அதிசிறப்பு.
கண்ணபிரான் இங்கே வேடர் உருவத்தில் சங்கு சக்ரபாணியாக, வலது கையில் புஷ்பத்தை ஏந்தி பூஜிக்கும் கோலத்துடன் இருக்கிறார்.
இங்குள்ள நெய் நந்தீஸ்வரரும் வரப்பிரசாதியானவர். இவரிடம் வேண்டிக்கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நடைபெறும் என்று நம்பிக்கை. எப்போதும் நந்திமீது நெய் மூடியே இருந்தாலும், அதை ஈ, எறும்பு எதுவும் அண்டுவதில்லை என்பது ஆச்சர்யம். (இதேபோன்று மற்றொரு நெய்நந்தித் தலமும் அந்த மாவட்டத்தில் உள்ளது)
இந்தக் கோயிலின் தீர்த்தம், சர்வானந்தத் தீர்த்தம். கிருஷ்ணரே உருவாக்கிய தீர்த்தம் இது என்கிறார்கள். உடலில் கட்டிகள் அல்லது தோல் வியாதிகள் இருந்தால், மருதீஸ்வரரை வேண்டிக்கொண்டு, வெல்லம் வாங்கி வந்து இந்தக் குளத்தில் கரைத்தால், உடலில் தோன்றிய கட்டிகள் விரைவில் மறைந்து விடும் என்கிறார்கள்.
இந்தத் தீர்த்தத்தை கர்ப்பிணிகள் அருந்தினால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
😯😟😯😟😯
பிறவிப்பிணிக்கு மட்டுமல்ல வாழும்போது உண்டாகும் சகல பிணிகளுக்கும் மருந்தாகத்திகழ்பவன் ஈசன். ஈசனை வழிபட்டு நோய் அகன்ற அடியார்கள் பலர். ஈசனும் மருத்துவனாக மருந்தீசனாகக் காட்சிகொடுக்கும் தலங்களும் ஏராளம் உள்ளன.
அவ்வகையில் சிவங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது பரியா மருதுபட்டி என்னும் அற்புதத் தலம்.
விசேஷமான மருத விநாயகர், வேண்டுதலை நிறைவேற்றும் நெய் நந்தி, ஈசனுக்கு மூலிகைச்சாறு அபிஷேகம், நோய்களைத் தீர்க்கும் அதிசய தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் திகழும் ஊர் நோய் தீர்க்கும் தலமாகத் திகழ்கிறது.
இங்கு அருளும் ஈசனுக்கு பரியா மருதீஸ்வரர் என்பது திருநாமம். அது என்ன பரியா மருதீஸ்வரர்? இந்த ஈசன் சுயம்பு மூர்த்தி; நான்கு யுகங்கள் கடந்து நிற்பவர். ஒவ்வொரு யுகத்திலும் இவருக்கு ஒவ்வொரு திருப்பெயராம்.
கிருத யுகத்தில் செல்ல நயினார், திரேதா யுகத்தில் நல்ல நாயனார், துவாபர யுகத்தில் பரம்தலை ஆண்டவர் ஆகிய பெயர்களோடு திகழ்ந்த இறைவனுக்கு, இந்தக் கலியுகத்தில் ஆதியில் இவருக்கு, 'பறியா மருந்தீஸ்வரர்' என்பதுவே திருநாமம்.
‘பறியா மருந்து ஈஸ்வரர்’ என்றால், பறியாத மருந்தான ஈஸ்வரர் என்று பொருள். பறித்துப் பயன்படுத்துபவை மருந்து மற்றும் மூலிகைகள். ஆனால், பறிக்க அவசியம் இன்றி, தரிசித்தாலே நம் உடற் பிணியையும் மனப் பிணியையும் நீக்கும் அருமருந்தாக இந்த ஈசன் திகழ்ப்வர்.
எனவே பறியா மருந்தீஸ்வரர் என்று பெரியோர்கள் இவரைப் போற்றியிருக்கிறார்கள். அதுவே காலப்போக்கில் `பரியா மருதீஸ்வரர்' என்ற திருநாமம் நிலைத்துவிட்டது என்கிறார்கள். மேலும் ஸ்தல மரமான மருத மரத்தைக் கருத்தில் கொண்டும் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.
கிராமத்தின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது அருள்மிகு பரியாமருதீஸ்வரர் ஆலயம். முதலில் தரிசிக்கவேண்டியது மருது விநாயகரை. கோயிலின் வெளிப் பிராகாரத்தில், மருத மரத்தடியில் அருள் புரிகிறார் இந்த விநாயகர்.
இவரின் உருவம், வழக்கமாக நாம் பார்க்கும் உருவம்போன்று இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. இந்த மருத கணபதியும் கோயிலுக்குள் இருக்கும் கன்னிமூல கணபதியும் வாதாபி காலத்துத் திருமேனிகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தல விருட்சமான மருதமரம் மருத்துவக் குணம் வாய்ந்தது என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தை எழுப்பும்போது, மண்டபத்தின் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிக்காக இந்த மரத்தை வெட்ட முயறனர். அப்போது மரத்திலிருந்து ரத்தம்போன்ற நீர் வடிந்ததால், வெட்டும் முயற்சி கைவிடப் பட்டது.
பின்னர் தானாகவே அந்த மரம் முறிந்து விழுந்து, கோயில் சுவர் கட்டுவதற்கு உதவியது. இது இறைவனின் திருவிளையாடலே என்கிறார்கள் பக்தர்கள். அதன் பின்னர் மருத மரம் தானாக வளர்ந்ததாம்.
இந்த மரத்திலிருந்து தானாகவே உதிரும் மருதம் பட்டையைப் பொடி செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆறாத புண், வயிற்று வலி போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு சர்ப்பம் வந்து வழிபட்டதால், ராகு - கேது தோஷம் நிவர்த்தி ஆகும். இங்கே வழிபட்டு, நிவர்த்தி ஆனவர்கள், ராகு கேது உருவங்களை வைத்து வழிபடுகிறார்கள்.
இங்கு ஈசனின் மேல் வடிவம் மற்ற சிவலிங்கங்களைப் போல உருளை வடிவமாக இல்லாமல், சதுர வடிவமாகத் திகழ்கிறது. இதற்குக் கீழே தோண்டத் தோண்ட பெரிய, அகன்ற மலை மாதிரி போய்க்கொண்டே இருந்ததாம். ஆக, அதன் முனைதான் மேலே தெரியும் லிங்கம் என்கிறார்கள்.
திருபுவனத்தில் அவதரித்த சரபேஸ்வரரின் கோபம் தணிந்த திருத்தலமாகவும் இதைச் சொல்கிறார்கள். முற்காலத்தில் மூலிகைகள் நிறைந்திருந்த வனமாக இருந்த நிலம் இது என்பதால் ஈசனுக்கு மூலிகைச் சாறு அபிஷேகம் மிகவும் விசேஷம்.
தெரிந்து கொள்வோம்....
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
#🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥
ஏழரை_சனி இருப்பவர்கள் #ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும்.
அதேபோல் பலவிதமான இன்னல்கள்_துக்கங்கள் வரும் போது ஆஞ்சநேயருக்கு #நெய்_விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்.
அவருக்கு #வடை_மாலை சாத்துதல் செந்தூரக்காப்பு அணிவித்தல் வெண்ணெய்_காப்பு சாத்துதல் ராம்_ராம் என்று எழுதி மாலை சாத்துதல் போன்ற பரிகாரங்களை செய்தால், நன்மை.
அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க #உளுந்து_வடை செய்து கொடுத்ததாக ஐதீகம்.
உளுந்து எலும்பை நல்ல வலுவாக்கும்.
சீதையைச் பல இடங்களில் தேடி காணாது பின் அசோகவனத்தில் அவரை ஆஞ்சநேயர் சந்தித்தார்.
அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக்_கொடி அணிவித்து அவரை வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்கவும் வாழ்த்தினாள் வெற்றிலை வயிறு சம்பந்தமான எல்லா தோஷங்களையும் போக்கும். பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம் வாயு தொல்லை இல்லாமல் இருக்க கொடுப்பார்கள்.
ராம ராவண யுத்தம் நடந்த போது ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் ஆஞ்சநேயர் அப்போது ராவணன் சரமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார். அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் #வெண்ணெய் பூசிக் கொண்டாராம்.
வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது. சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை அவர் நலமா?'' என்று கேட்டாள்.
அதற்கு அனுமான் "எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றார். உடனே சீதை மகிழ்ச்சி தாங்காமல் தரையி லிருந்து #செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்., இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்.
அனுமன்தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம். ராமர் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்குவார். ராம_நாமத்திற்கு அவ்வளவு மகிமை.
அனுமனுக்கு சக்தி முழுவதும் #வாலில் தான் இருப்பதாக கருதப்படுகிறது. இராவணன் முன் தன் வாலையே சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவணனுக்கும் மேல் உயரமாக அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் வாலில் வைத்த நெருப்பினால்தான் அவருக்கு சூடு தெரியாமல் ஆனால் இலங்கையே எரிந்தது.
ஆகையால் வாலிலிருந்து_சந்தனம்_குங்குமம்_பொட்டு வைத்து ஒரு சுற்று முடிவதற்குள் நினைத்த காரியம் நடக்கிறது என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
'ஹனுமதே நம: ஆஞ்சநேயாய நம: '
#ஸ்ரீராமஜயம்
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 *ஆம்பூர் நாகநாதசுவாமி.*🌹
நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.
தோஷங்களை நீக்கும் ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்
அடிமுடி தேடிய தோஷம் நீங்க பிரம்மன் வழிபட்ட தலங்களில் ஒன்று, வழக்கத்திற்கு மாறாக அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்த ஆலயம், நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.
அடிமுடி தேடிய தோஷம் நீங்க, பிரம்ம தேவன் வழிபட்ட ஏழு தலங்களில், ஆறாவது தலமாக விளங்குகின்றது இந்த ஆலயம்.
மன்னன் காலத்தில் ஆம்பூர் வனப்பகுதியில் இறைவன் புற்றினால் மூடி மறைந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.
இப்பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனை மந்தையைச் சேர்ந்த பசு ஒன்று, நாள்தோறும் இந்தப் புற்றின் மீது நின்று கொண்டு, பால் பொழிவதை வழக்கமாக கொண்டிருந்தது.
இதைக் கண்காணித்த இடையன், மன்னனிடம் நடந்த விவரத்தைச் சொன்னான். உடனே மன்னன் அந்தப் புற்றை இடிக்க ஆணையிட்டான்.
மன்னனின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் புற்றை இடித்தபோது, நாகம் காத்து வந்த சிவலிங்கத்தின் மீது அடிபட்டு ரத்தம் பீறிட்டது. இதனால் அனைவரும் பயத்தில் கலைந்து ஓடினர்.
அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், புற்றில் இருந்தது தானே என்றும், தனக்கு தனி ஆலயம் எழுப்பி, நாகம் காத்த என்னை ‘நாகநாதன்’ என்று அழைக்கும்படியும் கூறி மறைந்தார்.
மன்னனும் அதன்படியே அதே இடத்தில் ஒரு ஆலயம் எழுப்பி, குடமுழுக்கு விழாவை நடத்தி முடித்தான். இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வடுவை, இன்றும் இறைவன் திருமேனியில் காணலாம்.
ஆம்பூர் நகரின் மையப்பகுதியில், சுமார் 1½ ஏக்கர் நிலப்பரப்பில், சற்று பள்ளமாக 9 படிகள் கீழிறங்கி செல்லும் விதமாக ஆலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தின் அமைப்பு பிற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.
தென்கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் ஐந்து கலசங்களைத் தாங்கி கம்பீரமாக நிற்கின்றது.
ராஜகோபுரம் முழுவதுமே கலை நயமிக்க சுதைச் சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகின்றன. பிட்டுக்கு மண் சுமத்தல், அனுமன் சிவலிங்கத்தை ராமருக்குக் கொண்டு வருதல், அஷ்டதிக்குப் பாலகர்கள், கால சம்ஹாரம், திருஞான சம்பந்தரின் அற்புதங்கள் முதலான புராண வரலாறுகள் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
ராஜகோபுர நுழைவுவாசலில் வல்லப கணபதியின் புடைப்புச் சிற்பமும், அவரின் வாகனமும் காட்சி தருகின்றன. கோபுர வாசலைக் கடந்ததும், அக்னி மூலையில் உள்ள குருவின் பார்வை நம் மீது படுகிறது.
எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி, காட்சி தர, மேல் மண்டப விளம்பில் எம்பெருமானின் திருமணக் கோலமும், தெய்வ வடிவங்களும் சுதைச் சிற்பங்களாக அழகுற காட்சி தருகின்றன. நந்திதேவர் நவ துவாரக் கல் ஜன்னல் வழியே நாகநாதசுவாமியை தரிசிக்கின்றார்.
தெற்குப் பிரகாரத்தில் மார்க்கபந்தீசுவரர் சன்னிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அன்னை மரகதாம்பிகை, விநாயகர், நந்திதேவர் காட்சிதர, அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது.
சப்த மாதர் சன்னிதி வடக்கு நோக்கி உள்ளது. தென்மேற்கில் அறுபத்துமூவர் சன்னிதியும், அடுத்ததாக வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியும் அமைந்துள்ளன. அருகே தலமரமான வில்வம் பசுமையாகக் காட்சி தருகிறது.
நாகநாத சுவாமி
ஆலயத்தில் நடுநாயகமாக நாகநாதசுவாமி வீற்றிருக் கிறார். துவாரபாலகர்கள் காவல் நிற்க, கருவறைச் சுற்றில் விநாயகர், பச்சைக் கல்லினால் ஆன தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, எழிலான துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சிலா வடிவங்கள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.
தட்சிணாமூர்த்தியின் பின்புறம் ஆஞ்சநேயர் சிவலிங்கத் திருமேனியை வழி படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
ஈசான்ய பகுதியில் காளத்தீசுவரர், ஞான பிரசன்னாம்பிகை, பலிபீடம், நந்தி ஆகியவை சிவப்பு கருங்கல் மேனியராக அமர்ந்து திருமண வரம் தருவது குறிப்பிடத்தக்கது.
இறைவன் நாகநாதசுவாமி சதுர வடிவ ஆவுடையாரில் சுயம்பு மூர்த்தியாக எளிய வடிவில், ஒளி வீசும் தோற்றத்துடன் அருள்காட்சி வழங்குகின்றார்.
இவரைக் கண்டறிய புற்றை அகற்றியபோது ஏற்பட்ட வடுவை, இன்றும் இவரின் திருமேனியின் பின்பகுதியில் கண்டு மெய் சிலிர்க்கலாம்.
வடமேற்குப் பிரகாரத்தில் அன்னை சமயவல்லி சன்னிதி அமைந்துள்ளது. இதற்குள் சுக்ர வார அம்மன், பள்ளியறை அமைந்திருக்க, அன்னையை தரிசித்தபடி சிம்ம வாகனம் காணப்படுகிறது.
அன்னை சமயவல்லி எளியவளாக கலைநயம் கொண்டு, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடு, மேல் இரு கரங்களில் பாச அங்குசம் தாங்கி, கிழக்கு முகமாய்க் காட்சி தருகிறாள்.
அன்னை, சுவாமியின் உயரத்தை விட, ஒரு படி மேலாக காட்சியளிப்பது, வழக்கத்திற்கு மாறான அமைப்பாக உள்ளது.
கன்னி மூலையில் நவக்கிரகங்கள்
பொதுவாக, நவக்கிரக சன்னிதி வடகிழக்குப் பகுதியான ஈசான்ய மூலையில் அமைந்திருப்பது இயல்பான ஒன்று.
ஆனால் இங்கு தென்கிழக்குப் பகுதியான கன்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. இதன் மூலம் ராஜகோபுரத்தை கடந்து ஆலயத்திற்குள் நுழையும் போதே குருவின் பார்வை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, சனி பகவானின் இடதுபுறம் காக வாகனம் இருப்பது தனிச் சிறப்பாகும்.
இவ்வாலயத்தில், இரண்டு பைரவர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.
இவ்வாலயம் நாக தோஷங்கள் அனைத்திற்கும், ஏற்ற தலமாக அமைந்துள்ளது. இது தவிர திருமணப்பேறு, குழந்தைப்பேறு இவற்றிற்கு உகந்த தலமாகவும் இது அமைந்துள்ளது.
திங்கட்கிழமைகளில் உண்ணா நோன்பிருந்து வழிபடுவது குழந்தைப்பேறு தரும். குடும்ப பிரச்சினைகள், நோய்கள் தீரவும், சிறந்த வேண்டுதல் தலமாக இது திகழ்கின்றது.
இந்தக் கோவிலில் பங்குனி கிருத்திகையில் தொடங்கி பங்குனி உத்திரம் வரை பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இது தவிர, தமிழ்ப்புத்தாண்டு லட்ச தீபம், சித்திராப் பவுர்ணமி, சித்திரை விஷு, கிருத்திகை, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கார்த்திகை கடைசி சோமவாரம் சங்காபிஷேகம், மார்கழி ஆருத்ரா, தைப் பொங்கல், கிருத்திகை, மகா சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து சிவாலய வழிபாடுகளும், கிருஷ்ணன், ஐயப்பனுக்கும் விழாக்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.
இவ்வூர் பல்லவர், சோழர், விஜயநகர மன்னர், ஒய்சாலர் என பல்வேறு மன்னர்கள் காலங்களிலும், முக்கியத்துவம் பெற்ற ஊராக விளங்கியதை, இவ்வூரில் கிடைத்த நான்கு கல்வெட்டுகள் சான்றாக அமைந்துள்ளன.
கி.பி. 1896-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையின்படி, இவ்வூரில் மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இரண்டு கல்வெட்டுகள் ஆம்பூரின் கங்கா ரெட்டிக்காரத் தெருவில் கண்டறியப்பட்டன. அவை இரண்டுமே கி.பி. 895-ம் ஆண்டைச் சார்ந்தவையாகும்.
இவை நிருபதுங்க வர்ம பல்லவன் கால, வீரக்கல் எனும் நடுகற்களாகும். இன்றைய ஆம்பூர், பழங்காலத்தில் ‘ஆமையூர்’ என அழைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இவ்வூரில் ஆண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் இது ‘ஆண்மை ஊர்’ என்பதே பிற்காலத்தில் ‘ஆமையூராக’ மாறி, தற்போது ஆம்பூர் என்று சொல்வழக்கில் உள்ளது.
மூன்றாவது கல்வெட்டு, நாகநாத சுவாமி திருக்கோவில் சுவற்றில் உள்ள கி.பி. 1193-ம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 15-ம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும்.
இதில் இக்கோவில் நிர்வாகம் செய்த சித்திரமேழி பெரியநாட்டார் என்ற குழுவினர் இக்கோவிலின் ஸ்ரீபலி எனும் வழிபாடு மேற்கொள்ள அரங்கம் அமைத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. இதில் இறைவன் திருப்பெயர் நாகேசுவரர் என்றும், ஊரின் பெயர் ஆமையூர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரின் மையப்பகுதியில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது.
வேலூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து மேற்கே சுமார் 50 கி.மீ.
தொலைவில் ஆம்பூர் இருக்கிறது. இவ்வூருக்கு ஏராளமான பேருந்து வசதியும், குறிப்பிட்ட நேரத்தில் ரெயில் வசதியும் உண்டு.
ரெயில் நிலையத்தில் இருந்தும், பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், சுமார் ஒரு கி.மீ. தொலைவில் மார்க்கெட் அருகே இத்திருக்கோவில் அமைந்துள்ளது. #🖌பக்தி ஓவியம்🎨🙏
#🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #ஆலங்குடி குரு பகவான் கும்பகோணத்தை சுற்றினால்.,வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும்!! எந்த கோயிலில், என்ன பலன்
கோவில் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான்.
இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம்.
அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர்.
இதனால் தான் இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்பதை தெரிந்து கொண்டு எளிதாக பயணிக்க நாங்கள் உதவுகிறோம்.
கும்பகோணம் திருக்கோயில்கள் கருமுதல் சதாபிஷேகம் வரை பலனடைய இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.
கரு உருவாக (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி,
கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்,
நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - வைத்தீஸ்வரன் கோவில்,
ஞானம் பெற - சுவாமிமலை,
கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்,
எடுத்த காரியம் வெற்றி பெற,
மனதைரியம் கிடைக்க. - பட்டீஸ்வரம்,
உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோயில்,
செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோவில்,
கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்,
இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி,
பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீரவும் - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை),
திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி,
நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை,
மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம்,
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - திருவலஞ்சுழி,
பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி,
கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்,
பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,
எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம்,
நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்.
ஐந்து முகங்களுடன் பஞ்சமுக சண்டிகேஸ்வரர்!
சிவபெருமானின் அருளைப் பெற்ற அடியார்களில் முதன்மையானவர் சண்டிகேஸ்வரர்.
பொதுவாகச் சிவாலயங்களில் ஒரு முகத்துடன் தியான நிலையில் அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வரரை நாம் பார்த்திருப்போம்.
ஆனால், செங்கல்பட்டு அருகே உள்ள திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் (கச்சபேஸ்வரர்) ஆலயத்தில் அவர் மிகவும் விசேஷமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்!
ஏன் இந்தத் தலம் இவ்வளவு சிறப்பு?
ஐந்து முகங்கள்: சிவபெருமானுக்குரிய சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களுடன் சண்டிகேஸ்வரர் இங்கே வீற்றிருக்கிறார். இது 'சிவ-சண்டிகேஸ்வர' தத்துவத்தை உணர்த்துகிறது.
நிர்மால்யக் காப்பாளர்: ஈசனுக்குச் சூட்டப்படும் மாலைகள் மற்றும் நைவேத்தியங்களின் புனிதத்தைக் காப்பவர் இவரே. இவரை வணங்கினால் நாம் செய்த பூஜையின் முழுப்பலனும் நமக்குக் கிட்டும் என்பது நம்பிக்கை.
பஞ்சபூத தோஷ நிவர்த்தி: ஐந்து முகங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை குறிப்பதால், இவரை வழிபடுவதன் மூலம் பஞ்சபூதங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
அமைதியான வழிபாடு: சண்டிகேஸ்வரர் தியானத்தில் இருப்பவர். எனவே, இவரைத் தரிசிக்கும்போது சத்தம் போடாமல், மெதுவாகக் கைகளைத் தட்டி அல்லது சொடுக்கிட்டு நமது வருகையைத் தெரிவித்து மனமுருகப் பிரார்த்தனை செய்வது சிறந்தது.
பலன்கள்:
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான புத்தி கிடைக்கச் செய்யும் அற்புதமான தலம் இது. செங்கல்பட்டு செல்பவர்கள் தவறாமல் இந்தத் திருக்கச்சூர் ஆலக்கோயிலுக்குச் சென்று மருந்தீஸ்வரரையும், இந்த அபூர்வ பஞ்சமுக சண்டிகேஸ்வரரையும் தரிசித்து அருள் பெறுங்கள்!
இடம்: அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சூர், செங்கல்பட்டு மாவட்டம்.🌹 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🔍ஜோதிட உலகம் 🌍 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥
#🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🔍ஜோதிட உலகம் 🌍
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #🙏குரு பகவான்🙏 #ஆலங்குடி குரு பகவான் கோலங்களில் காட்சி தரும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருத்தலங்கள்!*
காஞ்சிபுரம் மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில் அருளும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி இடது சிகை கொண்டையில் பாம்பு சீறிப்பாய, உச்சியில் கங்கையை தரித்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார்.
கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ஸ்ரீ கங்காதீஸ்வரர் கோயிலில் இரட்டை தட்சிணாமூர்த்தி அருகருகே அமர்ந்து அருள்புரியும் கோலத்தை தரிசிக்கலாம்.
மதுரை அருகில் உள்ள திடியன்மலை திருத்தலத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயிலில், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்த கோலத்தில், பதினான்கு சித்தர்களுடன் காட்சி தருகிறார்.
திருவையாறு, ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் கோயிலில் அருளும் தட்சிணாமூர்த்திக்கு, ‘சுரகுரு தட்சிணாமூர்த்தி’ என்று பெயர். மேல் நோக்கி உள்ள வலக்கையில் சின் முத்திரையும், இடது கையில் சிவஞான போதத்துடனும், திருவடியின் கீழ் ஆமையுடனும் காட்சி தருகிறார்.
அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் திருஊரல் மகாதேவர் கோயிலில் அருளும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியில் ஒரு காலை மடித்து பீடத்தில் இருத்தி, வலக்காலை கீழே தரையில் வைத்து, ருத்ராட்ச மாலை, தாமரை மொட்டு ஏந்தி, இடதுபுறம் சாய்ந்தபடி, அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் கீழ் சுவரில் தட்சிணாமூர்த்தி வெள்ளை தாடியுடன், மரத்தடியில் மான் தோல் மீது காலை மடித்து வைத்து, யோக நிலையில் அமர்ந்தவாறு காட்சி தருகிறார்.
திருச்சோபுரம் மங்களேஸ்வரர் திருக்கோயில் தட்சிணாமூர்த்தியின் சிலையைத் தட்டினால் சப்தஸ்வர ஓசை கேட்கிறது.
கழுகுமலை கோயில் கோபுரத்தில் மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
லால்குடி, ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோயிலில் அருளும் தட்சிணாமூர்த்தியை வீணை வாசிக்கும் அருட்கோலத்தில் தரிசிக்கலாம்.
தமிழக எல்லையில் உள்ள சுருட்டபள்ளியில் (ஆந்நிர மாநிலம்) உமையுடன் அருளும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
வாணியம்பாடி சிவன் கோயிலில், செப்புத் திருமேனியில் யோக மூர்த்தியாய் அம்பிகையை இடது தொடையில் அமர்த்தியபடி தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கருவறை உட்சுவரின் தென்பாகத்தில் 'யோக வீணாதர அர்த்தநாரி தட்சிணாமூர்த்தி' காட்சி தருகிறார்.
கழுகுமலை வெட்டுவான்கோயிலில் தட்சிணாமூர்த்தி மிருதங்கத்துடன் காட்சி தருவது விசேஷம்.
திருநாவலூர் கோயிலில் அருளும் தட்சிணாமூர்த்தி காளையுடன், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
திருப்பூந்துருத்தியில் அருளும் தட்சிணாமூர்த்தி வீணை வாசித்தவாறு, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் மண்டபத்தில் ஆறு அடி உயரத்தில், நின்ற கோலத்தில், அபய முத்திரையுடன் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் வேதநாராயணர் கோயில் விமானத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தி வடிவம் உள்ளது.
ஆலங்குடியில் குரு தட்சிணாமூர்த்தி உத்ஸவர் கலை வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறார். சித்திரை பிரம்மோத்ஸவத்தின்போது, இவர் தேரில் பவனி வருகிறார். ஆறு கால நடராஜ பூஜைகளும் இங்கு இவருக்கே நடைபெறுவது சிறப்பு.🌹
இதனால்தான் பெரியாழ்வார் என்று பெயர் வந்தது! - முனைவர் ஶ்ரீராம்
பெரியாழ்வார். என்ன ஒரு அற்புதமான பெயர்! வேறு எந்த ஆழ்வாருக்கும் கிடைக்காத இந்தப் பெயர் இவருக்கு எப்படிக் கிடைத்தது?
அதற்கு ஒரே வரியிலே பெரியவர்கள் பதில் சொல்லி விட்டார்கள். வேறு ஆழ்வார்களுக்கு இல்லாத பரிவு இவருக்கு இருந்ததால் பட்டர் பிரான், விஷ்ணு சித்தர் என்கின்ற பெயர் பெரியாழ்வார் என்னும் பெயராக மாறி நிலைத்தது. எல்லா ஆழ்வார்களுக்கும் தானே பரிவு? அதில் என்ன இவருக்கு ஒரு சிறப்பு இருக்க முடியும்? என்ற கேள்வி எழும். அதற்கு அருமையான விளக்கம் அளித்தார்கள், பெரியவர்கள்.
99 மதிப்பெண் எடுத்தவர் உயர்ந்த நிலையில் கொண்டாடப்படுவர். ஆனால், அதைவிட ஒரு மதிப்பெண் கூடுதலாக நூற்றுக்கு நூறு வாங்கியவருக்கு அதைவிட ஒரு சிறப்பு உண்டு அல்லவா.
எல்லா ஆழ்வார்களுக்கும் எம்பெருமான் மீது பரிவுதான். கொண்டாட்டம்தான். மங்கல வாழ்த்துக்களால் அவனை வாயாரப் பாடியவர்கள்தான்.
ஆனால், பெரியாழ்வாருக்கு இந்தப் பரிவு சற்று கூடுதலாக இருந்தது.அடுப்பில் பால் வைத்தால் சூடு பொறுக்காமல் பொங்குகிறதே, அதைப்போல இவருடைய மனதில் அன்பு எனும் பால் பொங்கியது. மற்ற ஆழ்வார்களுக்கு, எம்பெருமானுடைய மேன்மையிலும் மற்ற பிற குணங்களிலும் ஆழங்கால் பட்டு பாசுரம் பாடிக் கொண்டிருந்த பொழுது, ஒரு தாய் தன் குழந்தையை நினைத்து பாசத்தால் பொங்குவதுபோல, அன்பால் பொங்கினார். அந்தத் தாய்மை குணம் விஞ்சி நின்றதால் இவருக்கு பெரியாழ்வார் என்னும் பெயர்.
இவர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி.மதுரை பாண்டியன் அவையிலே யார் பரத்துவம் என்பதை நிரூபிக்க வேண்டிய சூழல் இருந்தது. பலரும் முயன்றனர். இவர் இறைவன் ஆணைக்கு இணங்க நிரூபித்து விட்டார். அவையில் கூடியிருந்த அத்தனை புலவர்களுக்கும் மறு மொழி தந்தார். ஐயம் திரிபற அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார். பரிசுக்காகக் கட்டி வைத்திருந்த பொற்கிழி தானே ஆழ்வார் மடிமீது விழுந்தது. எல்லோரும் செல்வத்தை இரு கையால் பற்றிக் கொள்வர். ஆனால், அந்தச் செல்வமே இவரை பற்றிக் கொண்டது.
மன்னன் மகிழ்ந்தான். மக்கள் மகிழ்ந்தனர். தன்னை திறம்பட வெளிப்படுத்திய ஞானத்தைக் கண்டு எம்பெருமானும் மகிழ்ந்தான். வைணவ சமய நெறியில் ஒரு அற்புதமான விஷயம் சொல்லப்படும். நீங்கள் ஆண்டவனைப் பார்ப்பது என்பது இருக்கட்டும். உங்கள் செயல் அவனுக்கு உகப்பாய் இருந்தால் அவன் உங்களைப் பார்க்க விரும்புவான். இது பெரியாழ்வார் விஷயத்தில் உண்மையாகியது.
ஒரு பெரிய மைதானத்தில் யானையின் மீது ஆழ்வாரை உட்கார வைத்து, இருபுறமும் கவரி வீச, விழா எடுத்தான், பாண்டிய மன்னன். இந்த விழாவைக் காண எல்லோரும் ஆசைப்பட்டு கூடல் நகரத்தில் கூடினர். பகவானும் ஆசைப்பட்டான். வைகுந்தத்தில் கருடனை விளித்து, ‘‘கருடா, நம் விஷ்ணு சித்தருக்கு விரிவான விழாவை பாண்டியன் கொண்டாடுகிறான். அதைக் காணுவதற்குப் புறப்பட வேண்டும். தயாராக இரு” என்றான். பக்கத்தில் இருந்த தேவிமார்கள், ‘‘நீங்கள் மட்டும் போனால் எப்படி? நம்முடைய பிள்ளையின் விழாவைக் காண நாங்களும் வருவோம்” என்று கேட்க, எம்பெருமான் கருடன் மீதேறி வந்து, ஆழ்வாருக்குக் காட்சி தந்தான்.
இப்படி ஆழ்வாருக்குக் கூடல் மாநகரில் எம்பெருமான் காட்சி தந்த இடம் “மெய் காட்டும் பொட்டல்” என்று வழங்கப்படுகிறது. இப்பொழுதும் ஆண்டுதோறும் கூடலழகர் ஆலயத்திற்கு அருகே இந்த வைபவம் நடைபெறுகிறது.
ஆழ்வார் பகவானைப் பார்க்கிறார். பகவான் ஆழ்வாரைப் பார்க்கிறான். பகவானுக்கு ஆனந்தமோ ஆனந்தம். அந்த ஆனந்தம் அவனுடைய அழகை இன்னும் கூட்டுகிறது. ஒரு நொடி எம்பெருமானுடைய ஒளிமயமான ஆனந்த மயமான அற்புத வடிவழகைச் சேவித்த ஆழ்வார், அடுத்த கணம் யானையின் கழுத்தில் இருந்த மணியை எடுத்து, அவனுக்குத் தமிழால் பாசுரம் பாடிக் காப்பிடுகின்றார்.
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
பல்லாண்டு என்று தொடங்கும் இந்தக் காப்பு தான் மங்கல வாழ்த்துகளுக்கு எல்லாம் மகத்தான மணிமகுடமாகக் கொண்டாடப்படுகிறது. அழகான குழந்தையை தாய் பார்த்து அனுபவிப்பாள். ஆனால், அதே தாய்க்கு ஒரு அச்சமும் வந்துவிடும். “ஐயோ, இந்த குழந்தை இவ்வளவு அழகாக இருக்கிறதே, என்னுடைய கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறதே, என்னுடைய கண்ணே பட்டுவிடும் படி இருந்தால், மற்றவர் கண் எச்சில் இந்தக் குழந்தைக்குச் சங்கடத்தைத் தருமே” என்று நினைப்பாள்.
மனம் பதைப்ப, கருப்பு மை இட்டு, சுற்றிப்போட்டு கண் எச்சிலைக் கழிப்பாள். இவைகள் எல்லாம் சடங்குகளாக இருக்கலாம். ஆனால் இவற்றின் இடையே இருப்பது பரிவு. விஞ்சிய பரிவு.
அந்த விஞ்சிய பரிவு தாய்மை உணர்வு கொண்ட ஆழ்வாரிடம் இருந்து தமிழ்ப் பாசுரமாக விரிந்து மங்கல வாழ்த்து செய்ததால், இவருடைய விஷ்ணு சித்தர் என்ற பெயர் மாறி பெரியாழ்வார் என்ற பெயர் நிலைத்தது. இதை மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலை என்ற பாசுரத்தில் உணர்ச்சிகரமாக எடுத்துரைக்கிறார்.
மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு தானன்றி - பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்
எல்லா ஆழ்வார்களுக்கும் பரிவு தான். எல்லா ஆழ்வார்களுக்கும் எம்பெருமானைத் துதிப்பதில் ஆர்வம் தான். ஆனால் இவருக்கு இவர் அறியாமலேயே அந்தப் பரிவு விஞ்சி வெளிப்பட்டதால் வில்லிபுத்தூர் பட்டர்பிரான் என்ற திருநாமம் பெரியாழ்வார் என்கிற பெயராக மலர்ந்தது. இன்றளவும் நிலைத்தது. அந்தப் பெரியாழ்வார் அவதார உற்ஸவம் பத்து நாள் திருவிழாவாக அவர் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்திலே, ஆனி மாதம் ஜோதி நட்சத்திரம் என்று சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி கொண்டாடப்படுகிறது.
தாய்மை உணர்வு கொண்ட ஆழ்வார் அவதார இடம் என்பதால் பூமித்தாயே ஆழ்வாருக்கு திருமகளாய் அவதரித்தார். இன்னொரு விசேஷம். 12 ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமை உடையது ஸ்ரீவில்லிபுத்தூர்.
தந்தையும் மகளும் என இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமையுடையது. அதுவும் ஆனி, ஆடி என அடுத்தடுத்த மாதங்களில் அவதரித்த பெருமை உடையது. முதலில் வருவது ஆனி மாதம் என்பதால் திருத்தந்தையாக பெரியாழ்வாரும், அடுத்த மாதம் ஆடி என்பதால் திருமகளான ஆண்டாள் நாச்சியாரும் அவதரித்த பெருமை உடையது. அதனால் பகவானே இவர்களுக்குப் பின்னால்தான் நான் என்று காட்டுவது போல ஆவணி மாதத்திலே தன் அவதாரத்தை எடுத்துக்கொண்டார்.
தாய்மை உணர்வு விஞ்சியதால், பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக்கி, தான் தாயாகி, கன்னித்தமிழில் அவருக்குப் பிள்ளைத்தமிழ் பாடினார். பின்னால் தமிழில் எத்தனையோ பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டாலும் பெரியாழ்வாரின் பிள்ளைத் தமிழுக்கு சீரும் சிறப்பும் வந்தது.
என்ன சிறப்பு என்று கேட்கலாம்?
இன்றைக்கும் இந்தப் பிள்ளைத்தமிழ் எல்லா திருமால் ஆலயங்களிலும், திருமால் அடியார் இல்லங்களிலும், ஓதப்படும் சிறப்பைப் பெற்றது. இந்தச் சிறப்பு மற்ற பிள்ளைத் தமிழ் நூல்களுக்கு இல்லை அல்லவா?
எந்தப் பாசுரம் தொடங்கும் போதும், பிரணவத்தைப்போல, திருப்பல்லாண்டு ஓதப்படுகிறது. சரி திருமஞ்சன காலம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே மற்ற ஆழ்வார்கள் பாசுரங்கள் எல்லாம் பிறகுதான்.பெரியாழ்வாரின் நீராட்ட பாசுரம் கம்பீரமாக ஒலிக்கும்.
வெண்ணெ யளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத்
தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டு
இங்குஎத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே.
நாரணா நீராட வாராய்.
சரி அடுத்து பெருமாளுக்குப் பூச்சூடல். இதோ பெரியாழ்வார் பாசுரம். ஒவ்வொரு பாசுரமாகச் சொல்லிச் பூச்சூட்டுவார்கள்.
ஆனிரை மேய்க்க நீ போதி அருமருந் தாவதறியாய்
கானக மெல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப
தேனி லினிய பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய்.
மாலையாகி விட்டது. திருக் காப்பிடல் செய்யவேண்டும். அங்கும் பெரியாழ்வார் தான்.
இந்திர னோடு பிரமன் ஈசன் இமைய வரெல்லாம்
மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போது இது வாகும் அழகனே காப்பிட வாராய்.
கடைசி பூஜை அர்த்தஜாம பூஜை. சுவாமிக்கு பால் நிவேதனம் செய்து, பள்ளியறைப் பாசுரம் பாட வேண்டுமே. ஊஞ்சலில் போட்டுத் தாலாட்ட வேண்டுமே. தமிழ் கேட்டால் தானே அந்த தலைவனுக்கு கூட தூக்கம் வரும்.
அதற்கும் பெரியாழ்வார் தான் வருவார்.
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!
சரி எல்லாம் முடிந்துவிட்டது. பட்டர் சந்நதி கதவை அடைத்து விட்டு கோயிலுக்கு வெளியே வர வேண்டும். நம்மையெல்லாம் காக்கின்ற இறைவனுக்குப் பாதுகாப்பு வேண்டும் அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், என்ற பரிவால் ஏற்படும் பாச உணர்வு. இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்று நினைப்பது ஞான பாவம். இறைவனை நாம் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பது பிரேம பாவம். ஞானபாவ முதிர்ச்சிதான் பிரேம பாவம் என்று சொன்னார்களே தவிர பிரேம பாவத்தின் முதிர்ச்சி ஞான பாவம் என்று சொல்ல மாட்டார்கள். அளவுக்கு விஞ்சிய பிரேம பாவம் வந்து விட்டால் அவனை விஞ்சிய பாகவதன் கிடையாது. பக்தனும் கிடையாது.
இதைத்தான், ஸ்ரீமத் பாகவதத்தில் கோபியர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள். அப்படி எளிமையானவர்கள் வாழும் இடம் தான் பகவானுக்கு பிருந்தாவனம் ஆகியது. அதனால்தான் ஆண்டாள் கண்ணன் பிருந்தாவனத்தில் இருக்கிறான் என்று கண்டு பிருந்தாவனத்தில் கண்டோமே என்று பாசுரம் விடுகிறாள்.
ராமாயணத்தில் ஒரு காட்சி. குகனைத் தேடி ராம லட்சுமணர்கள் சீதையோடு வந்து விட்டார்கள். குசலம் விசாரித்து முடித்து அவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்துவிட்டு, குகன் தன் சேனைகளோடு நிற்கிறான். ராமபிரான் சீதையோடு உறங்குவதற்கு செல்லுகின்றான்.
ஒரு துளி கூட உறக்கம் இல்லாத லட்சுமணன், வில்லும் அம்புமாக இரவு முழுவதும் காவல் காக்கிறான். அவன்தான் காவல் இருக்கிறானே, குகன் தன்னுடைய பரிவாரங்களோடு போய் வேறு வேலைகளைப் பார்க்கலாமே? தம்பி பரதனை முன்னிட்டுக் கொண்டு ராமனை நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்று கேட்டதிலிருந்து தன்னுடைய தலைவனான ராமனுக்கு, அயோத்தி படைகளாலோ, அல்லது வேறு ஏதாவது ஒருவராலோ ஆபத்து வந்து விட்டால் என்ன செய்வது என்று நினைக்கின்றான்.
அவன் அங்கே ராமனோடு துணைக்கு வந்த லட்சுமணனைக் கூட நம்புவதற்கு தயாராக இல்லை.ஏன், தன்னுடைய படைவீரர்களைக் கூட அவன் நம்புவதற்குத் தயாராக இல்லை. அதனால் தானே இரவு முழுக்க பல்வேறு ஆயுதங்களோடு காவல் காத்தான் என்று வரும். இந்த இடத்திலே உரையாசிரியர்கள் நுட்பமான ஒரு விஷயத்தை சொல்வார்கள். இவர்கள் எம்பெருமானைக் காப்பதாக நினைத்துக்கொண்டு காவல் இருக்கின்றார்கள். உண்மையில் எம்பெருமான் இவர்களுக்கு ஏதாவது வந்து விடுமே என்று காவல் காத்துக் கொண்டிருக்கிறான். அது இவர்களுக்குப் புரியவில்லை. புரியாததற்குக் காரணம் ஞானக் குறைவு அல்ல, பரிவின் நிறைவு என்பார்கள்.
இந்த நிறைவு பெரியாழ்வாரிடம் இருந்ததால், பெருமாளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்று பதறுகிறார். ஒரு குழந்தை கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது, விழுந்து விடுமோ, பூச்சிகள் கடிக்குமோ என்று ஒரு தாய் தூங்காமல் அந்தக் கட்டிலின் மீதும், குழந்தையின் மீதும் கண் வைத்திருப்பது போல பெரியாழ்வார் இருக்கிறார். அந்த பரிவு நிலை பாசுரமாக வெளிப்படுகிறது.
சக்கரத்தாழ்வாரே கவனம்! சங்காழ்வாரே கவனம்! நாந்தகம் என்னும் வாளே, ஜாக்கிரதை! சார்ங்கம் என்னும் வில்லே கவனம்! கௌமோதகி என்கிற கதையே,கவனம்! இந்திரன் அக்னி, எமன், நைருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானனன் எனும் அஷ்டதிக்குப் பாலகர்களே!அதிக கவனம்! எப்பொழுதும் கூடவே இருக்கக்கூடிய அனந்தனே, பகவான்படுத்துக் கொண்டிருக்கிறான் கவனம்! வேத வித்தகனான கருடனே! பகவான் பள்ளி கொண்டிருக்கிறான் கவனம்.
உங்கள் கவனம் எல்லாம் நீங்கள் இந்தப் பள்ளி அறையைக் கவனமாகப் பாதுகாத்து வாருங்கள்.
இப்படி ஏதாவது ஒரு தமிழ் பாசுரம் இருக்கிறதா என்றால் இல்லை. இந்தப் பாசுரம் தான் ஒவ்வொருவரும் இரவில் தங்கள் பூஜை அறையில் திருத்தாள் இடும் போதும், கோயில் சந்நதியில் எல்லாம் முடித்து திருத்தாள் இடும் போதும் பாடுவார்கள்.
உறக லுறக லுறகல் ஒண்சுட ராழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே
அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாம லிருந்த எண்மர் உலோகபா லீர்காள்
பறவை யரையா உறகல் பள்ளி யறைக்குறிக் கொண்மின்.
உறகல்... உறகல்... உறகல்... என்று மூன்று தரம் ஆணையிட்டு பேசுகின்றார்.. உறங்காது இருங்கள், உறங்காது இருங்கள், உறங்காது இருங்கள் என்பது இதன் பொருள்.
பெரியாழ்வார் என்ற பெயருக்கு, இதைவிடச் சிறந்த பாசுரத்தைச் சான்றாக எடுத்துக்காட்ட முடியுமா என்ன?.
நன்றி - தினகரன் ஆன்மிகம் 25.6.2025 #🔍ஜோதிட உலகம் 🌍 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏கோவில் பற்றிய இந்த சுவாரஸ்யத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?*
பகவான் மகாவிஷ்ணுவின் வாகனமாகத் திகழும் கருடனை கருடாழ்வார், விஷ்ணுப்பிரியன், விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி, கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், மோதகாமோதர், மங்களாலயர், சோமகாரீ, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். கருடன் குறித்த சில சுவாரசியமான தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்.
* குப்தர்களுடைய நாட்டு நாணயத்தில் கருடனின் உருவத்தைப் பதித்திருந்தார்கள்.
* மௌரியர்கள் கருடனை அதிர்ஷ்டம் நிறைந்த கடவுளாகக் கருதி வழிபட்டனர்.
* தேவகிரி யாதவர்களின் கொடியும் சின்னமும் கருடன்தான்.
* ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோயிலில் கருடாழ்வாருக்கு தனிச் சன்னிதி உண்டு. 5 அடி உயர பீடத்தில், 12 அடி உயரத்தில், இங்கு இவர் அமர்ந்த கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
* விண்ணுலகில் இருந்து கருடன் கொண்டு வந்த அமிர்த கலசத்தில் சூட்டப்பட்டிருந்த தேவலோகப் புல்லே தர்ப்பை ஆகும்.
* அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 16 கருட சேவை புகழ் பெற்றது.
* திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கையில் கருடாழ்வார் பெரிய உருவில் காட்சி தருகிறார். இவர் பாம்பையே ஆடையாக அணிந்துள்ளதாக ஐதீகம். 9 கெஜ புடைவைதான் இவருக்கு அணிவிக்கப்படுகிறது.
* கருடன் வேதங்கள் அறிந்த பண்டிதன் என்று பத்ம புராணம் இவரைப் புகழ்கிறது.
* கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில் திருத்தலத்தில் 684 அடி நீளமும் 225 அடி அகலமும் கொண்ட ஒரு திருக்குளம் உள்ளது. இதில் உள்ள தீர்த்தம் மிகவும் புனிதமானது. இத்தலத்தில் அருளும் நம்பி எம்பெருமான் அனுபவிப்பதற்காக திருப்பாற்கடலில் இருந்து வைர முடியை கருடாழ்வார் எடுத்து வரும்போது, அதில் இருந்த ஒரு மணி கழன்று இந்தக் குளத்தில் விழுந்ததாக ஐதீகம். எனவே, இந்தக் குளம் மணிமுத்தாறு என்று அழைக்கப்படுகிறது.
* ஸ்ரீவைகுண்டம் கோயிலில் கருட பகவான் தனது சிறகுகளை உயரே தூக்கி, பறக்கும் நிலையில் பறவையாகக் காட்சி தருகிறார்.
* ஆழ்வார்திருநகரி அருகில் பெருங்குளம் என்னும் ஊரில் உள்ள கருடாழ்வார் உத்ஸவ பெருமாளுக்கு அருகிலேயே காட்சி தருகிறார்.
* கருடன் தகர்த்த மேருமலையின் ஒரு பகுதிதான் இலங்கை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் சன்னிதியில், ஸ்ரீரங்கமன்னாருடன் ஆண்டாள் மற்றும் கருடாழ்வார் அருகருகே காட்சி தருவது விசேஷம்.
* சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள பைராகி மடம் திருவேங்கடம் ஏழுமலையான் ஆலயத்தில், பெண் வடிவிலான கருடனை தரிசிக்கலாம். கார்த்திகை மாத உத்ஸவத்தின்போது, அலர்மேலுமங்கை தாயார் இந்த பெண் கருட வாகனத்தில்தான் வீதி உலா வருகிறார்.
* திருக்கண்ணங்குடி தலத்தில் கருடாழ்வார் கைகளை காட்டிய கோலத்தில் தரிசனம் தருகிறார்.
* தஞ்சை - திருவாரூர் சாலையில் உள்ள எண்கண் தலத்தில் ஆதிநாராயண பெருமாள் கருடன் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
* மன்னார்குடி, ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள ஒற்றைக் கல்லால் ஆன கருட கம்பம் அபூர்வமானது.
* கும்பகோணம், நாச்சியார்கோவில் கல் கருடனுக்கு, பயத்தம் பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்த்த அமிர்த கலசம் எனும் பிரசாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
* தஞ்சை, நீலமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று 18 கருட சேவை விமரிசையாக நடைபெறுகிறது.🌹
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #ஸ்ரீ விநாயகா ஜோதிட நிலையம் #விநாயகர்












