
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # பல்லியும் காசியில் இல்லை! காரணம் என்ன? சாபமா?*
பாவங்களைப் போக்குகின்ற தலமாக விளங்கும் காசியில் கருடன் பறப்பதும் இல்லை, பல்லி கத்துவதும் இல்லை, இதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஏழேழு ஜென்மத்திற்கும் செய்த பாவங்களைப் போக்குகின்ற தலமாக காசி கருதப்படுகிறது. அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வாரணாசியைச் சுற்றி கருடன் சுற்றுவதை பார்க்க முடியாது. அதேபோல் காசியில் பல்லியை எங்கும் காண முடியாது. அதற்கான காரணத்தை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
பல யுகங்களுக்கு முன்பு, ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்த பின், ஹனுமனிடம் ராமேஸ்வரத்தில் ஒரு சுயம்பு லிங்கத்தை நிறுவ வேண்டும் என்று கூறி காசியிலிருந்து ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு வரும்படி கட்டளையிடுகிறார்.
காசியை நோக்கி ஹனுமான் வரும்பொழுது, அவருடைய கண்களில் பல ஆயிரக்கணக்கான லிங்கங்கள் தென்பட அதைப் பார்த்துக் குழம்பிப் போகிறார்.
சுயம்பு லிங்கத்தின் சக்திப் பிரவாகம் அதிகமாக இருக்கும் என்பதால் அதை காசி முழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் ஹனுமன். ஆனால் கிடைக்கவில்லை.
அப்பொழுது கருடன் அவருக்கு உதவி செய்ய முன்வருகிறார். இதுதான் நீங்கள் தேடுகின்ற சுயம்பு லிங்கம் என்று ஹனுமனுக்குப் புரிய வைப்பதற்காக ஒரு சுயம்பு லிங்கத்துக்கும் மேலாக மேல்நோக்கி, வட்டமடித்து கத்திக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தார்.
அதை ஹனுமன் கண்டுபிடித்துவிட்டார். அதேபோல் பல்லியும் அந்த சுயம்பு லிங்கம் இருக்கின்ற திசையைப் பார்த்து, கத்திக் காட்டிக் கொடுத்தது.
இதையும் படியுங்கள்:
பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?
never see garuda and lizard in Kashi
இவ்வாறு கருடனும் பல்லியும் சுயம்பு லிங்கம் இருப்பதை ஹனுமன் கண்டுபிடிப்பதற்காக உதவி செய்தன. இதன் பின்பு, கருடன், பல்லி இருவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, அந்த சுயம்பு லிங்கத்தை எடுத்துக் கொண்டு புறப்பட ஆரம்பித்தார் ஹனுமன்.
அப்படி கிளம்புகிற பொழுதுதான் அங்கே ஒரு பெரிய பிரச்னை வெடித்தது. காசியில் காவல் தெய்வமாக இருப்பவர் கால பைரவர்.
அந்த கால பைரவரைத் தாண்டி, யாரும் காசியை விட்டு எதுவும் வெளியில் எடுத்துக் கொண்டு செல்ல முடியாது. ஆனால் ஹனுமனோ தன்னுடைய எஜமானர் ஸ்ரீ ராமருடைய கட்டளைப்படி சுயம்பு லிங்கத்தை எப்படியாவது கொண்டு சென்று விட வேண்டும் என்று எடுத்துச் செல்கிறார். அப்போது கால பைரவர் ஹனுமனை தடுத்து நிறுத்த, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற ஆரம்பித்து, சண்டை வலுக்க ஆரம்பிக்கிறது.
இருவருக்குமே கோபமும் ரௌத்திரமும் கட்டுக்கடங்காமல் போக, இதைப் பார்த்த தேவலோகத்தினர் இப்படியே தொடர்ந்தால், இந்த மண்ணுலகில் பிரளயமே வெடிக்குமே என்று பயந்து கொண்டிருக்கிறார்கள்.
இருவருமே அதிக பலசாலிகளாக இருப்பதால் இருவருக்கும் இடையே இருக்கின்ற சண்டையை எப்படியாவது பெரிதாகாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யோசித்து கால பைரவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். சுயம்பு லிங்கத்தை எடுத்துச் செல்லவும் வழிவகுக்க வேண்டும் என்று கூறினர். ஹனுமானின் விசுவாசத்தைப் புரிந்து கொண்ட காலபைரவர், லிங்கத்தை எடுத்துச் செல்வதற்கான அனுமதியைக் கொடுத்தார்.
தன்னுடைய அனுமதியின்றி எடுத்துச் சென்றதற்காக மட்டுமே தான் சண்டையிட்டதாகத் தெரிவித்தார். அதோடு சுயம்புலிங்கத்தை ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்வதற்காகவும் ஹனுமனை அனுப்பி வைத்தார்.
ஆனால் அதேசமயம் தன்னுடைய அனுமதியின்றி லிங்கத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக கருடனுக்கும் பல்லிக்கும் சாபத்தை வழங்கினார் கால பைரவர். 'இந்த வாராணசியில் (காசியில்) நீங்கள் இருவரும் எங்கும் இருக்கக்கூடாது' என்று சாபம் கொடுத்தார். 'எப்போதும் காசிக்கு வரக்கூடாது' என்றும் சொல்லியிருக்கிறார்.
அதனால் தான் வாரணாசியில் எப்போதும் கருடனும் பல்லியும் இருப்பதில்லை.🌹
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 ஆணவத்தை அடக்கிய பன்றி முக தேவி! சிலிர்க்க வைக்கும் அவதார ரகசியம்!*
தமிழ்நாட்டில் விஜயநகர பேரரசுக்குப் பின் ஸ்ரீ வராகர் வழிபாடும், ஸ்ரீ வராகி வழிபாடும் பிரபலமடைந்தது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஸ்ரீ வராகி (Sri Varahi Devi) வழிபாடு இருந்துள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த வராகி தேவியின் அவதாரம் குறித்து இப்பதிவில் காண்போம்.
முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்ற அசுரன் இருந்து வந்தான். அந்த கொடிய அசுரனின் தோளிலிருந்து விசுக்ரன் என்பவன் தோன்றி கடும் தவம் இருந்து, அதிசய வரத்தினைப் பெற்றான். ஒரு தாயின் வயிற்றில் பிறக்காத பன்றி முகம் கொண்ட பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் பெற்றான்.
தாயின் வயிற்றில் பிறக்காமல் பெண் உருவாக முடியாது எனவும், அழகை விரும்பும் எந்த பெண்ணும் பன்றி முகத்துடன் தோன்ற மாட்டாள் என்பதும் அவனது நம்பிக்கையாக இருந்ததால் இந்த வரத்தினை பெற்றான். மேலும் தனக்கு நிச்சயம் மரணம் ஏற்படாது என்பதும் அவனது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
இதனால் விசுக்ரன் தேவர்களை எல்லாம் அச்சுறுத்தியும், துன்புறுத்தியும் அழித்து வந்ததால் அவனது தொல்லைகளை தாங்க முடியாமல் தேவர்கள் அவனிடம் இருந்து தப்பிக்க பெரிய யாகம் ஒன்று வளர்த்தனர். தேவர்கள் தங்களுடைய கை, கால்களை யாகத்தீயில் வெட்டிப்போட்டு லலிதாம்பிகையிடம் வரத்திற்காக வேண்டி நின்றனர்.
தேவர்களின் அதீத பக்தியை கண்டு மகிழ்ந்த லலிதாம்பிகை யாகத்தில் இருந்து தோன்றி தேவர்களை காப்பதாக அருளினாள். அதோடு ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ வராகியை பன்றி முகத்துடன் தோற்றுவித்து அசுரனை அழித்து தேவர்களை காக்கும் படி கட்டளையிட்டாள்.
பன்றி முகத்துடன் பெண் தோன்ற மாட்டாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்த விசுக்ரன் பன்றி முகத்துடன் தன்னை எதிர்க்க தோன்றிய ஸ்ரீ வராகி தேவியைக் கண்டு அஞ்சினான். ஆனால் அவனுள் இருந்த அசுர குணம் ஸ்ரீவராகியை எதிர்க்கத் தூண்டியது. கோடி சூரியனின் பிரகாசத்தை உடைய அவனது தந்தையான பண்டாசுரனுடைய மந்திரிகள் விசுக்ரனுக்கு துணை நின்றனர்.
அவர்களுடைய ஒளிமயமான உடலை கண்ட தேவர்களின் படை நடுங்கி செய்வதறியாது திகைத்தது. அச்சமயத்தில் ஸ்ரீ வராகி ஒரு கணையை ஏவ பண்டாசுரனின் அமைச்சர்களின் கண்கள் குருடாகின. அவர்களுடைய தலைகளை எல்லாம் வெட்டி எடுத்து மாலையாக அணிந்து கொண்ட ஸ்ரீவராகி விசுக்ரனையும் கொன்று தேவர்களை காத்தாள்.
தேவர்களைக் காக்க ஸ்ரீ லலிதாம்பிகையால் தோற்றுவிக்கப்பட்டு அவதாரம் எடுத்த ஸ்ரீ வராகியை பெருமாளுக்கு உகந்த புதன், சனிக்கிழமைகளிலும், ஏகாதசி திரயோதசி திதி நாட்களிலும், திருவோண நட்சத்திர நாளிலும் மனதார வழிபட்டால் பயம் நீங்குவதோடு மனச்சுமையை அகற்றி நம்மைக் காத்து அருள் புரிவாள்.🌹
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # குலதெய்வம் கோவிலுக்குப் போக முடியவில்லை? - இதோ ஒரு திடுக்கிடும் உண்மை!
நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைந்ததா? அவர்களின் ஆசிர்வாதம் (Ancestors blessing) நமக்கு இருக்கிறதா? என்பதைச் சில முக்கிய அறிகுறிகள் மூலம் நாம் கண்டறியலாம்.
குலதெய்வ வழிபாடு
ஒரு குடும்பத்தைக் காக்கக்கூடிய முதன்மைத் தெய்வங்களாக அந்த வீட்டில் வாழ்ந்த பெரியவர் களையும், அதற்கடுத்ததாகக் குலதெய்வத்தையும் கருதுகிறோம். நீங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்து, குறிப்பிட்ட அந்த நாளுக்குள்ளோ அல்லது அதற்கு முன்னரோ தடையின்றிச் சென்று தரிசனம் செய்துவிட்டால், உங்கள் முன்னோர்களின் அருள் உங்களுக்குப் பரிபூரணமாக இருக்கிறது என்று அர்த்தம். மாறாக, குலதெய்வக் கோவிலுக்குச் செல்லும் திட்டம் ஏதோ ஒரு காரணத்தால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தால், அவர்களின் ஆன்மா இன்னும் சாந்தியடையவில்லை அல்லது உங்கள் மீது ஏதோ ஒரு வருத்தத்தில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
நிம்மதியான உறக்கம்
இரவில் எந்தவித அச்சமும் இன்றி நிம்மதியாகத் தூங்க முடிந்தால், பித்ருக்களின் ஆன்மா சாந்தியடைந்து உங்களை ஆசிர்வதிக்கிறது என்று பொருள். ஒருவேளை சரியாகத் தூங்க முடியாமல் கெட்ட கனவுகள் தோன்றுவதும், மனக்கலக்கமும் ஏற்படுகிறதென்றால், அவர்களின் ஆன்மா இன்னும் அமைதியடையவில்லை என்பதற்கான சமிக்ஞையாகக் கருதலாம்.
செடிகளும் உயிரினங்களும்
நமது சாஸ்திரத்தில் காகத்தைப் பித்ருக்களின் மறு உருவமாகவும், பல்லியை மகாவிஷ்ணுவின் அம்சம் பொருந்தியதாகவும் கருதுகிறோம். துளசி, வாழை, மருதாணி போன்ற புனிதமான செடிகள் உங்கள் வீட்டில் செழிப்பாக வளர்ந்தால், முன்னோர்களின் ஆசி உங்களுக்கு உண்டு. மாறாக, பராமரித்தும் துளசி போன்ற புனிதமான செடிகள் காய்ந்து போய்க்கொண்டே இருந்தால், பித்ருக்களின் ஆன்மா சாந்தியடையவில்லை என்று சொல்லப்படுகிறது.
உடல்நலம் மற்றும் செல்வம்
பித்ருக்களின் சாபம் இருந்தால், வீட்டில் உள்ளவர்களுக்குத் தொடர்ச்சியாக உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்; அவை எளிதில் குணமாகாது. மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதோடு, வீணான பண நஷ்டங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
குழந்தைப்பேறு
திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தைப்பேறு தள்ளிப்போவது அல்லது அதற்கான முயற்சிகளில் தடை ஏற்படுவது முன்னோர்களின் ஆசிர்வாதம் குறைவாக இருப்பதைக் குறிக்கும். இத்தகைய சூழலில் முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய திதி மற்றும் சடங்குகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
பரிகாரங்கள்
பித்ருக்களின் ஆன்மா சாந்தியடைந்து அவர்களின் ஆசியைப்பெற கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்:
அவர்களின் பெயரில் ஏழைகளுக்குத் தயிர் சாதம் தானமாக வழங்கலாம்.
தினமும் காலையில் காகம் மற்றும் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
அவர்களுக்கான வருடாந்திரத் திதி மற்றும் அமாவாசை தர்ப்பணங்களைச் சரியாகச் செய்ய வேண்டும்.
நம் முன்னோர்கள் தெய்வங்களுக்குச் சமமானவர்கள். அவர்கள் காட்டிய வழியில் தர்மத்தோடு வாழ்வதும், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை (தர்ப்பணம், தானம்) முறையாகச் செய்வதும் நமது தலையாய கடமையாகும். மேலே சொன்ன அறிகுறிகள் ஏதேனும் உங்கள் வாழ்வில் தென்பட்டால், பயப்படத் தேவையில்லை.
மனதார அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, உங்களால் முடிந்த எளிய தான தர்மங்களைச் செய்தாலே அவர்கள் குளிர்ந்து போவார்கள். அவர்கள் குளிர்ந்து ஆசி வழங்கினால், உங்கள் குடும்பத்தில் தடைகள் நீங்கி, செல்வமும் நிம்மதியும் தானாகவே வந்து சேரும்.🌹
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 சான்றோர் ஏன் அனைவர் வீட்டிலும் சாப்பிடுவதில்லை தெரியுமா?*
துரியோதனன் சபையில், துச்சாதனன் பாஞ்சாலியை மானபங்கம் செய்ய துகில் உரித்த பொழுது அந்த சபையில் இருந்த பீஷ்மர் உள்ளிட்ட பெரியவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, யாரும் துரியோதனையோ, துச்சாதனனையோ எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களுடைய செயல் தர்மம் அற்றது என்று யாரும் எடுத்துக் கூறவில்லை.
போருக்குப் பிறகு பீஷ்மர் அன்புப் படுக்கையில் படுத்தவாறு புண்ணிய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும்பொழுது அவரிடம் பஞ்சபாண்டவர்கள் அரசியல் தர்மம், நீதி, நேர்மை ஆகியவற்றை பற்றிக் கேட்டு தெரிந்துகொள்ள வந்தனர். அவர்களுடன் பாஞ்சாலியும் வந்திருந்தாள். பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி அவரிடம் கேட்க, பாஞ்சாலி பலமாக சிரித்து விட்டாள். அத்துடன் பீஷ்மரை நோக்கி, "அன்று கண்ணன் மட்டும் வந்து என்னை காத்திருக்காவிட்டால் என்னுடைய கதி என்னவாகி இருக்கும்? தர்மம் அறிந்த நீங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள்" என்று கேட்டாள்.
இதற்கு பிதாமகர் பீஷ்மர் பதிலளித்தார். “பாஞ்சாலி கூறுவது முற்றிலும் உண்மை. துரியோதனன் அன்னம் இடுவதில் மிகவும் உயர்ந்தவன். யார் எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களுக்கு வயிறு நிறைய உணவளித்து உபசரிப்பான். ஆனால், அந்த அன்னதானம் செய்வதில் அவனுக்கு பரிசுத்தமான மனது கிடையாது. சுயநலத்துக்காகத் தான் உணவிட்டு அவர்களை தன்னுடைய காரியங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வான்.
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேறு வழி இல்லாமல் அவன் இட்ட உணவை உண்ட மற்றவர்களும் வேறு வழி இல்லாமல் அவன் சொற்படி நடப்பார்கள். தூய எண்ணத்துடன் அன்னமிடாததால் அவனுடைய அந்த எண்ணம் உண்ட மற்றவர்களின் இரத்தத்திலும் கலந்து விடும். பீஷ்மராகிய நானும் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்கும் அவனுடைய தீய குணங்கள் குடியேறிவிட்டது. ஆதலால்தான் பாஞ்சாலியை துச்சாதனன் மானபங்கம் செய்தபொழுது எதுவும் செய்ய இயலாது அமர்ந்திருந்தேன்.
ஆனால், இப்பொழுது அர்ஜுனன் ஏற்படுத்திக் கொடுத்த இந்த அம்புப் படுக்கையில் படுத்தபின் எனது உடலில் இருந்த கெட்ட இரத்தமும்,, தீய எண்ணங்களும் வெளியேறிவிட்டன. எனவே, இப்பொழுது அரசியல் தர்மத்தைப் பற்றி பேச நான் தகுதி உள்ளவன் ஆகிவிட்டேன்” என்று பதில் அளித்தார்.
பகிர்வுஸ்ரீராஜ்
மேலும், “இப்பொழுது என்னால் அரசியல் தர்மத்தை பற்றி பேச முடியும். தாராளமாக உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்” என்று சொல்ல பாண்டவர்களும் பிதாமகர் பீஷ்மரிடம் அரசியல் தர்மம் குறித்து அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை கேட்டனர். பிதாமகர் பீஷ்மரும் பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தையும், நீதி, நேர்மையைப் பற்றியும் உபதேசித்து அவர்களை தெளிவுபடுத்தினார்.
அதனால்தான் அந்தக் காலத்தில் பெரியோர்கள், சான்றோர்கள், சாதுக்கள், பெரிய பண்டிதர்கள் போன்றோர் வெளியில் சாப்பிடுவதை விரும்புவதில்லை. அன்னமிட்டவரின் எண்ணங்கள் அவை நல்ல எண்ணங்களோ, தீய எண்ணங்களோ சாப்பிட்டவரின் உணர்வில் கலந்து விடும். ஆகையால், நல்லவர்கள் இல்லத்திலும், தூய உள்ளம் படைத்தவர்களின் இல்லத்திலும், தூய மனம் படைத்தவர்கள் கையால் இடும் உணவையும்தான் உண்ண வேண்டும்.🌹
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # ஔவைக்கு அறிவு புகட்டிய ஞானச் சோலை! 🌳 ஆறாம் படை வீட்டின் கனிவான தரிசனம்! ✨
மதுரை அழகர் மலையில், நாவல் மர நிழலில் கந்தன் நிகழ்த்திய அற்புதத் திருவிளையாடல்! இதோ இத்தலத்தின் சிறப்புகள்... 👇
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று அறிவின் சிகரமான ஔவைப்பாட்டியிடமே விவாதம் செய்து, "மண்ணில் விழுந்த பழத்தில் மண் ஒட்டியிருப்பதால் அது சுட்ட பழம்" என்று நுட்பமாக விளக்கிய அந்தச் சிறுவன் முருகனின் ஞானம் வியக்கத்தக்கது!
அறிவு என்பது வெறும் புத்தகத்தில் இல்லை, அனுபவத்தில் இருக்கிறது என்பதை உணர்த்திய தலம்.
அறுபடை வீடுகளில் மற்ற ஐந்து தலங்களிலும் முருகன் தனித்தோ அல்லது ஒரு தேவியுடனோ காட்சி தருவார். ஆனால், இங்கு மட்டும் அன்னை வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய இருவருடனும் இணைந்து மணக்கோலத்தில் காட்சி தருகிறார். வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் வீற்றிருக்கும் இத்தலம், குடும்ப ஒற்றுமைக்கும் மங்கல வாழ்விற்கும் மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாகும்.
மலை உச்சியில் இருந்து விழும் இந்தத் தீர்த்தம் மிகவும் புனிதமானது. இதில் நீராடுவது உடல் மற்றும் மன பிணிகளைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை.
அழகர் மலையின் அடர்ந்த காடுகள், ஓடும் அருவிகள், பாடும் பறவைகள் என இயற்கையே முருகனை வணங்கும் இந்தச் சோலை, மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும்.
"அறிவு என்பது கற்றுக் கொள்வதில் மட்டுமல்ல, அதைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது - இதுவே பழமுதிர்சோலை தரும் பாடம்!" 🙏
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 ###motivationalquotes *நம்முடைய வேண்டுதல் நிறைவேறுமா இல்லையா?' - கனவில் வந்து சொல்லும் முருகன்!*
நாம் கடவுளிடம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறுமா இல்லையா? என்பது நமக்கு தெரியாது. இருப்பினும் கோவிலுக்கு சென்று கடவுளிடம் கோரிக்கைகளை வைத்து வழிப்படுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், இந்த ஒரு கோவிலில் நாம் முருகனிடம் வைக்கும் கோரிக்கைகள், நிறைவேறுமா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலமும், கனவில் வந்தும் நமக்கு முருகனே உணர்த்துவார் என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
கோடைக்கானல் அருகே வில்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது வெற்றி வேலப்பர் முருகன் கோவில். இக்கோவிலை பாண்டிய மன்னர்கள் கட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது. இக்கோவில் 1000 வருடம் பழமையானதாகும்.
சிவலிங்கத்தின் மீது முருகன் நின்றிருப்பதுப் போல கோவில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே முருகப்பெருமானும், சிவபெருமானும் சேர்ந்ததுப்போல சிலை அமைக்கப்பட்ட கோவில் இங்கு தான் உள்ளது என்று சொல்லப்படுகிறது.
இக்கோவிலின் வலதுப்புற மண்டபத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரும் இருக்கும் வகையில் மும்மூர்த்திகளின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சூரபத்மனை முருகன் வதம் செய்த பிறகு இங்குள்ள மூவரையும் வழிப்பட்டதாகவும் அதனால் தான் இக்கோவிலுக்கு ‘வெற்றி வேலப்பர்’ என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இக்கோவிலின் சுவர்களில் விநாயகர், காலபைரவர் ஆகியோரின் சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் வெளிப்புறத்தில் வடக்கே விநாயகர் அமர்ந்துக் காட்சியளிக்கிறார்.
இக்கோவிலில் நாம் வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுமானால் அதற்கான அறிகுறிகள் காட்டும் வகையில் வேல், சேவல் போன்ற முருகனின் ஆபரணங்களோ அல்லது வாகனமோ கனவில் வருவதாக சொல்லப்படுகிறது. பங்குனி மாதத்தில் வேலப்பர் ஊர்வலமாக கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மேலும் பழனி தண்டாயுதபாணி கோவில், கொடைக்கானலில் உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் மற்றும் கொடைக்கானலில் உள்ள வெற்றி வேலப்பர் கோவில் ஆகிய மூன்று கோலில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
இத்தகைய தனித்துவம் வாய்ந்த கோவிலிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவது நன்மைத் தரும்.🌹
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏 ஓம் நமசிவாய #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - இந்தப் பெயர் வந்த காரணங்கள் தெரியுமா? 🛕✨
அன்பு வாசகர்களே! "நகரேஷு காஞ்சி" - நகரங்களிலேயே சிறந்தது காஞ்சி என்று போற்றப்படும் நமது காஞ்சிபுரத்திற்கு அந்தப் பெயர் வந்ததற்குப் பின்னால் எத்தனை சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன என்று பாருங்கள்.
'கா' + 'அஞ்சி' (பிரம்மன் வழிபட்ட ஊர்):
'கா' என்றால் படைப்புக் கடவுளான பிரம்மன் என்று பொருள். 'அஞ்சி' என்றால் பூஜித்தல். பிரம்மன் சிவபெருமானை அஞ்சலி செய்து வழிபட்ட தலம் என்பதால் இது 'காஞ்சி' எனப் பெயர் பெற்றது.
ஒட்டியாணம் (ஆபரணப் பெயர்):
உலக உருண்டையை ஒரு பெண்ணாக உருவகித்தால், அந்தப் பெண்ணின் இடுப்பில் அணியும் 'காஞ்சி' என்னும் ஒட்டியாணம் போன்ற அழகிய இடத்தில்தான் இந்த நகரம் அமைந்துள்ளதாம். பூமிக்கு அழகூட்டும் ஆபரணம் இந்த நகரம்!
காஞ்சி மரம்:
பண்டைய காலத்தில் இப்பகுதியில் 'காஞ்சி' மரங்கள் (ஆற்றுப்பூவரசு போன்ற ஒரு வகை மரம்) அடர்த்தியாக நிறைந்திருந்தன. சங்க இலக்கியங்களில் மருத நிலத்திற்குரிய மரமாக காஞ்சி குறிப்பிடப்படுகிறது. இந்த மரங்கள் நிறைந்த ஊர் என்பதால் காஞ்சிபுரம் ஆனது.
இலக்கியப் பெயர் 'கச்சி':
தேவாரப் பாடல்களில் இது 'கச்சி' என்றே அழைக்கப்படுகிறது. கச்சபேஸ்வரர் கோவிலும் இதற்கு ஒரு சிறந்த சான்று. காலப்போக்கில் 'கச்சி' என்பது மருவி 'காஞ்சி' என்றானது.
தர்மத்தின் தலம்:
மோட்சம் தரும் ஏழு நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் காஞ்சி, அறிவும் அறமும் தழைத்தோங்கிய இடம். அதனால்தான் இன்றும் இது ஆன்மீகத்தின் தலைநகராகத் திகழ்கிறது.
"கச்சி ஏகம்பன் கழலடி போற்றுவார்..." என்று நாயன்மார்களும், சித்தர்களும் போற்றிய இந்தத் திருத்தலத்தின் மகிமையை இன்னும் பல பதிவுகளில் காண்போம்.
#சீமான் #அரசியல் ###motivationalquotes #motivational #MOTIVATIONAL QUOTES
###motivationalquotes #அரசியல் மீம்ஸ் #அரசியல் #சீமான் #🔍ஜோதிட உலகம் 🌍
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏 ஓம் நமசிவாய #🔍ஜோதிட உலகம் 🌍 நினைவில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்:
தனியாக இருக்கும்போது உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள், மக்களுடன் இருக்கும்போது உங்கள் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
நல்லதைச் செய்வோம்.
நல்லதே நினைப்போம்.
ஆசியுடன் (அருளுடன்)
வாழ்வோம்.
ஜெய் ஸ்ரீ ராம்.
ஜெய் ஸ்ரீ ஹனுமான்.
வாழ்க வளமுடன்🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏












