திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
இன்றைய இராசிபலன் #📅பஞ்சாங்கம்✨ #காலை வணக்கம் #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #💎ராசிக்கற்கள் #✨தினசரி ராசிபலன்✡️
📅பஞ்சாங்கம்✨ - நித்ரா நித்ரா காலண்டர் 2026 காலன்டர் விசுவாவசு உத்தராயணம் 22-02-2026 10, ஞாயிறு மாசி Bo%l பஸ்ட் ஸன்டே உலக சிந்தனைதினம் வளர்பிறை  நோக்கு சம நாள் ன்றைய ராசிபலன் ५0 மேஷம் ரிஷபம் மிதுனம் நட்பு லாபம் சுகம் சிம்மம் 860T60f கடகம் போட்டி  வெற்றி கவனம் விருச்சிகம் துலாம் 56018 மறதி  தளிவு வரவு L6TLD மகரம் GlLILD ஆர்வம் சிக்கல் நலம் யோசிப்பது பேசிய பிறகு வருந்துவதைவிட பேசுவதற்கு (D6UT' நன்று. நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது நித்ரா நித்ரா காலண்டர் 2026 காலன்டர் விசுவாவசு உத்தராயணம் 22-02-2026 10, ஞாயிறு மாசி Bo%l பஸ்ட் ஸன்டே உலக சிந்தனைதினம் வளர்பிறை  நோக்கு சம நாள் ன்றைய ராசிபலன் ५0 மேஷம் ரிஷபம் மிதுனம் நட்பு லாபம் சுகம் சிம்மம் 860T60f கடகம் போட்டி  வெற்றி கவனம் விருச்சிகம் துலாம் 56018 மறதி  தளிவு வரவு L6TLD மகரம் GlLILD ஆர்வம் சிக்கல் நலம் யோசிப்பது பேசிய பிறகு வருந்துவதைவிட பேசுவதற்கு (D6UT' நன்று. நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது - ShareChat
இன்றைய நாள்காட்டி #காலை வணக்கம் #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #✡️ஜோதிட பரிகாரங்கள்
காலை வணக்கம் - நதரம நித்ரா காலண்டர் 2026 கால்ட உத்தராயணம் - விசுவாவசு 22-02-2026 மாசி - 10 ஞாயிறு சஷ்டி பஸ்ட் ஸன்டே உலக சிந்தனைதினம் வளர்பிறை நோக்கு நாள் சம நல்லநேரம் காலை IIT606u 07.30 - 08.30 01.30 02.30 ளிகை எமகண்டம் ராகு 12.00 PM - 1.30 4.30 PM - 6.00 PM 3.00 PM 4.30 PM PM சூலம் - மேற்கு பரிகாரம் வெல்லம் கரணன் சூரியஉதயம் 10.30 - 12.00 6.32 நட்சத்திரம் திதி ன்று காலை 1217 வரை ன்று மாலை 06.55 வரை பஞ்சமி பின்பு சஷ்டி  அஸ்வினி பின்பு பரணி நாமயோகம் கரணம் ன்று அதிகாலை 01.14 பின்பு பிற்பகல் வரை பவம் ன்று பிற்பகல் 0210 வரை 12.17 வரை பாலவம் பின்பு சுப்பிரம் பின்பு பிராம்யம் இரவு 1112 வரை கௌலவம் பின்பு தைதுலம் அமிர்தாதி யோகம் சந்திராஷ்டமம் ன்று முழுவதும்  ன்று மாலை 06.55 வரை த்திரம் பின்பு அஸ்தம் சித்தயோகம் ஜீவன் நேத்திரம் ன்று முழுவதும் ன்று முழுவதும் ஒரு க ரைவாழ்க்கை பேசிய பிறகு வருந்துவதைவிட பேசுவதற்கு முன் யோசிப்பது நன்று நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது நதரம நித்ரா காலண்டர் 2026 கால்ட உத்தராயணம் - விசுவாவசு 22-02-2026 மாசி - 10 ஞாயிறு சஷ்டி பஸ்ட் ஸன்டே உலக சிந்தனைதினம் வளர்பிறை நோக்கு நாள் சம நல்லநேரம் காலை IIT606u 07.30 - 08.30 01.30 02.30 ளிகை எமகண்டம் ராகு 12.00 PM - 1.30 4.30 PM - 6.00 PM 3.00 PM 4.30 PM PM சூலம் - மேற்கு பரிகாரம் வெல்லம் கரணன் சூரியஉதயம் 10.30 - 12.00 6.32 நட்சத்திரம் திதி ன்று காலை 1217 வரை ன்று மாலை 06.55 வரை பஞ்சமி பின்பு சஷ்டி  அஸ்வினி பின்பு பரணி நாமயோகம் கரணம் ன்று அதிகாலை 01.14 பின்பு பிற்பகல் வரை பவம் ன்று பிற்பகல் 0210 வரை 12.17 வரை பாலவம் பின்பு சுப்பிரம் பின்பு பிராம்யம் இரவு 1112 வரை கௌலவம் பின்பு தைதுலம் அமிர்தாதி யோகம் சந்திராஷ்டமம் ன்று முழுவதும்  ன்று மாலை 06.55 வரை த்திரம் பின்பு அஸ்தம் சித்தயோகம் ஜீவன் நேத்திரம் ன்று முழுவதும் ன்று முழுவதும் ஒரு க ரைவாழ்க்கை பேசிய பிறகு வருந்துவதைவிட பேசுவதற்கு முன் யோசிப்பது நன்று நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 குறைபாடு போக்கும் பகலவன்* ..... சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் *ஞாயிறு என்னும் திருத்தலம்* அமைந்துள்ளது. ஜோதிடத்தில் ஜாதகப் படி.... சூரியதோஷம் உள்ளவர்களும், சூரிய தசை, சூரிய புத்தி நடக்கிறவர்களும், பார்வைக் குறைபாடு, பிணிகள், களத்திர தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து புஷ்பரதேஸ்வரரையும் சூரிய பகவானையும் வழிபட்டால் நற்பேறு அடையலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்வது கூடுதல் சிறப்பு. சித்திரை, தை மாதப்பிறப்பு, ரதசப்தமி முதலான நாளில் இங்கு சூரியபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சித்திரை வருடப் பிறப்பின் போது முதல் ஏழு நாள்கள் சுவாமி, அம்பாள் மீது சூரிய கதிர்கள் விழுகிறது. இந்த ஏழு நாள்களுக்கும் சிவனுக்கான பூஜையை சூரியனை வந்து செய்வதாக ஐதீகம். 😯😟😯😟😯😟 சூரியனை மையமாகக் கொண்ட பஞ்ச பாஸ்கரத் தலங்களுள், சென்னைக்கு அருகில், திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஞாயிறும் ஒன்று. சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான தலமாகக் கருதப்படுகிறது. சோழர்காலத்தில் தொண்டை நாடு 24 கோட்டங்களாகப் பிரித்து ஆளப்பட்டது. அதில் புழல் கோட்டத்தில் ஞாயிறு தலைசிறந்த நாடாக இருந்தது என்று சோழர்கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இறைவன் புஷ்பரதேஸ்வரர் என்றும், இறைவி சொர்ணாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகை சுவாமியின் வலதுபுறத்தில் சந்நிதி கொண்டிருப்பதால், இது திருமண பாக்யம் அருளும் தலம் என்றும் கூறுகிறார்கள். ஒரு சமயம், பிரம்ம தேவனின் சாபத்தால் நோயுற்ற சூரிய பகவான், தன் நோய் நீங்க நீராடி சிவ பூஜை செய்ய வேண்டி இத்தலம் வந்தார். அங்குள்ள தாமரைக் குளம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. காரணம், குளத்தில் ஓராயிரம் இதழ் கொண்ட அழகிய தாமரைகள் பூத்திருந்தன. அதில் இறங்கி நீராடி மானசீகமாக வழிபட்ட போது தாமரை மலர் ஒன்றில் லிங்க ரூபமாக சிவபெருமான் எழுந்தருளினார். அவரை எடுத்து ஆசனத்தில் இருத்தி, வணங்கி சாபத்தால் உண்டான நோய் நீங்கப் பெற்றார் பகலவன். இறைவன் புஷ்பத்தின் இடையே தோன்றியதால் புஷ்பரதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வணங்கி நோய் நீங்கப்பெற்ற சூரிய பகவான் இங்கு சிறப்பு தெய்வமாக வழிபடப்படுகிறார். பார்வைக் குறைபாடுடைய சோழ மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் தாமரையின் மேல் இறைவன் பேரொளியுடன் ஞாயிறாகத் தோன்றி, காட்சிதந்து, அவனுக்கு முழுப்பார்வையையும் தந்ததாகவும், அதனால் இத்தலம் "ஞாயிறு' என அழைக்கப்படுவதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. மன்னன் இப்பகுதிக்கு வந்தபோது அருகில் உள்ள ஓரிடத்தில் தங்கினானாம். அந்த இடமே "சோழவரம்' என அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சங்கிலி நாச்சியாரோடு தொடர்புடைய தலம், ஞாயிறு. திருவொற்றியூரில் சிவனுக்கு மாலை தொடுத்துத் தந்த சங்கிலி நாச்சியாரை அங்கு வந்த சுந்தரர் கண்டு காதல் கொண்டு சிவனையே உதவிக்கு அழைக்கிறார். சிவனும் உதவிட, அவர்கள் திருமணம் நடந்தது. அந்தத் தெய்வப்பெண் அவதரித்தது இந்தத் தலத்தில் தான். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் ஞாயிறு நாட்டின் பெருமைகளையும் சங்கிலியாரின் சிறப்புகளையும் கூறியுள்ளார். சங்கிலி நாச்சியாருக்கும் இங்கு தனி சந்நிதி உள்ளது. மாசிமக திருநாளில்தான் சங்கிலிநாச்சியாருக்கும் சுந்தரருக்கும் திருமணம் நடைபெற்றதாம். அதனால் இங்கு அன்று விளக்கு பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. கண்வ மகரிஷி இவ்வூர் அருகே ஆசிரமம் அமைத்து சிவபெருமானையும் சூரிய பகவானையும் வழிபட்டு முக்தி அடைந்ததாக புராண வரலாறு கூறுகிறது. அவருக்கும் இங்கு தனி சந்நிதி உள்ளது. தலவிருட்சம் நாகலிங்க மரம். சூரியன் வழிபட்ட தடாகம் சூரிய தீர்த்தம் எனப்படுகிறது. அகத்தியரால் அருளப்பட்ட ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை இத்தலத்தில் பாராயணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு பலன் தரும் என்று கூறுகிறார்கள். மூலவர் புஷ்பரதேஸ்வரருக்கு எதிரே சூரிய பகவான் தரிசனமளிக்கிறார். சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு முன்புள்ள முகமண்டபத்தை கலையம்சமுள்ள தூண்கள் தாங்குகின்றன. அதில் சூரியன், கோணர், கோணங்கி, மோகினி, ரிஷிகள், சிற்றரசர்கள், யாளி சிவ பூஜை செய்யும் ரிஷிகள், காமாட்சி சிவபெருமானை வழிபடும் காட்சி, கிருஷ்ண காளிங்க நர்த்தனம் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை ஆகியோரை தரிசிக்கலாம். பிரகாரத்தில் உற்சவர் கமல விநாயகர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், சங்கிலி நாச்சியார் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன. தெரிந்து கொள்வோம்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
கோலங்களில் காட்சி தரும் சனி பகவான் ஆலயங்கள்!* 🦋 சென்னை, ஆதம்பாக்கம் விஸ்வரூப ஸ்ரீ சர்வ மங்கள சனீஸ்வர பகவான் கோயிலில் சனீஸ்வரர் ஆறடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இது, ‘வட திருநள்ளாறு’ என்று போற்றப்படுகிறது. வேலூர் மாவட்டம், வாலாஜா அருகே உள்ள வன்னிவேடு எனும் ஊரில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில், சனீஸ்வரர் ஒற்றைக்காலில் நின்று காட்சி தருகிறார். இதுபோல, சனீஸ்வரரை தரிசிப்பது மிகவும் அபூர்வம். சனி பகவான் பொதுவாக காகத்தின் மீது அமர்ந்து காட்சி தருவது வழக்கம். ஆனால், ஆலங்குடி தலத்தில் அவர் கருட வாகனத்தில் காட்சி தருகிறார். சனி பகவான் கருட வாகனத்தில் அமர்ந்து காட்சி தருவது மிகவும் அரிதான காட்சியாகும். இது ஆலங்குடி தலத்தில் மட்டுமே காணப்படுகிறது. மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கூறைநாடு எனும் இடத்தில் அருள்மிகு புனுகீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். எல்லா ஆலயங்களிலும் கருப்பு நிறக் கல்லில் காட்சி தரும் சனி பகவான், இங்கு மட்டும் சிவப்பு நிறக் கல்லில் காட்சி தருவது விநோதம். திருக்கொள்ளிக்காடு என்ற திருத்தலத்தில் சனீஸ்வரர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவரது வலது கரங்களில் கலப்பையும், அபய ஹஸ்தமும் தாங்கியுள்ளார். அதேபோல் இடது கரங்களில் காக்கையும், ஊரு ஹஸ்தமும் தாங்கி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கலப்பையுடன் வீற்றிருக்கும் வித்தியாசமான சனி பகவானின் தோற்றத்தை இந்த ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருநாரையூர் தலத்தில், நவகிரக நாயகரான சனி பகவான், தனது குடும்ப சகிதமாக அருள்பாலிக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம். இங்குள்ள அருள்மிகு ராமநாத சுவாமி கோயிலில், கருவறைக்கு எதிரில், தனிச் சன்னிதியில் ஸ்ரீ சனீஸ்வரர் தனது இரு மனைவியரான, மந்தா தேவி, ஜேஷ்டா தேவி ஆகியோருடனும், குளிகன், மாந்தி என்ற இரு மகன்களுடனும் குடும்ப சமேதரராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். ஜெய்ப்பூர் செல்லும் வழியில் வேன்வீட்டா எனும் ஊரில் சனி பகவான் கோயில் உள்ளது. எட்டு கிரகங்கள் வரிசையாக இரண்டு பாகங்களாகக் காட்சி தருகின்றன‌. சனீஸ்வரர் மிகப்பெரிய உருவில் எருமை வாகனத்தில், கிரகங்களுக்கு முன்னால் அமர்ந்து காட்சி தருகிறார்.🍀 #🙏🏾சனி பகவான் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம்
🙏🏾சனி பகவான் - வித்தியாசமான கோலங்களில் காட்சி தரும் சனி பகவான் ஆலயங்கள்! வித்தியாசமான கோலங்களில் காட்சி தரும் சனி பகவான் ஆலயங்கள்! - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #காலை வணக்கம் *நவநாரிகுஞ்சரம்' சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்!* இந்தியாவில் பலவிதமான கோயில்களையும், சிற்பக் கலைகளையும் நாம் பார்த்து, ரசித்து, வியந்திருப்போம். அதில் சில சிற்பங்களை நுணுக்கமாக கவனிக்கும்போதுதான் அதில் உள்ள உண்மையான அர்த்தத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். அப்படியிருக்கும் சிற்பங்கள் நமக்கு அதன் வரலாற்றையும், வாழ்க்கைப் பாடத்தையும் கற்பிக்கும். அத்தகைய வியப்பான ஒரு சிற்பக்கலை குறித்து இந்தப் பதிவில் காண்போம். ‘நவநாரிகுஞ்சரம்’ என்றால் என்னவென்று தெரியுமா? நவநாரிகுஞ்சரம் என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். இதில் ‘நவ’ என்றால் ஒன்பது, நாரி என்றால் பெண், குஞ்சரம் என்றால் யானை. இந்த சிற்பத்தில் ஒன்பது பெண்கள் வெவ்வேறு முகபாவனையை கொண்டு யானை போன்ற வடிவத்திற்குள் காட்சியளிப்பார்கள். இந்த அரிய வகை சிற்பத்தை தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்தில் உள்ள ஸ்ரீ கனககிரீஸ்வரர் ஆலயத்தில் காணலாம். ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாத சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி பெருமாள் கோயில் ஆகிய இடங்களிலும் இந்தச் சிற்பம் உள்ளது. இந்த சிற்பத்தில் முதலில் நம் கண்களுக்குத் தெரிவது யானை உருவமே! கொஞ்சம் சற்று உற்றுப் பார்த்தால் ஒன்பது பெண்களின் உருவம் இதில் தெரியும். ஒவ்வொரு பெண்களின் முகத்திலும் ஒவ்வொரு முகபாவனையைக் காணலாம். நவரசத்தையும் தங்களது முகத்தில் வைத்து இவர்கள் காட்சி தருகிறார்கள். நவரசம் என்பது நகை, அழுகை, இளிவரை, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவவை, அமைதி ஆகியவையாகும். இவற்றை முகபாவனை மூலம் வெளிப்படுத்தலாம். அத்தகைய முகபாவனைகள் கொண்ட பெண்களே நவநாரிகுஞ்சர சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளனர் என்பதே இந்த சிற்பத்தின் சிறப்பாகும். ஆலயங்களில் அமைந்திருக்கும் இந்த நவநாரிகுஞ்சரம் சிற்பம், நம்முடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது இதுபோன்ற நவரசத்தையும் நாம் உணருவோம். அப்படி நடக்கும்போது வாழ்க்கையில் அது ஒரு பகுதி என்று எண்ணி அதை குஞ்சரமாகிய யானையை போல வலிமையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே இந்த சிற்பம் கூறும் தத்துவப் பொருளாகும். கோயில் சிற்பங்களில் எண்ணற்ற வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. சற்று அமைதியாக இவற்றை கவனித்துப் பார்த்தால் புரியும். கோயிலில் இந்த சிற்பங்களை அமைத்ததற்குக் காரணம், இங்கே வரும் மக்கள் இவற்றைப் பார்த்து அதன் அர்த்தத்தைப் புரிந்து வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும். எனவே, நீங்களும் அடுத்த முறை கோயிலில் நவநாரிகுஞ்சரம் சிற்பத்தைப் பார்த்தால், இந்த விளக்கத்தை நினைவில் வைத்து அந்த சிற்பத்தைக் கண்டு தரிசித்து அனுபவியுங்கள்.🌹
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - நவநாரிகுஞ்சரம் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்! நவநாரிகுஞ்சரம் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்! - ShareChat
#காலை வணக்கம் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 அடிநாதமாக விளங்கும் ஆன்மிகம்!* வாழ்க்கையில் நமது அறிவு வளர்ந்துகொண்டே போய்க்கொண்டிருந்தாலும், நம்முள் பலர், ‘மிக விரைவாக ஓடுகிறேன், ஆனால் எங்கே சென்றுகொண்டிருக்கிறேன் என்பதே தெரியவில்லை’ என்ற எண்ணத்தில் இருக்கிறோம். பணம், பதவி, சொத்து, செல்வம் அனைத்தும் இருந்தும் மனம் ஓர் வகை வெறுமையால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் பயணமே ஆன்மிகப் பயணம். இது நம் உடல் அல்லது உலகை அல்ல, நம் உள்ளத்தையும் உயிரின் அடிப்படையையும் புரிந்துகொள்வதற்கான ஒரு பயணமாகும். ஆன்மிகம் என்பது மதக் கட்டுப்பாடுகளும், சடங்குகளும் அல்ல. மனிதன் தன்னைத் தேடிக்கொள்வது, உணர்வுகளை நிர்வகிப்பது, பிறருக்காக எதையோ செய்ய விழைவது ஆகியவற்றின் தொகுப்பாகும். ஆன்மிகம் என்பது ஆன்மா சார்ந்தது. ‘ஆன்மா’ என்பது நம்முள் வாழும் உண்மையான சுயம். நம்முடைய உணர்ச்சி, சிந்தனை, செயல் ஆகியவற்றை ஒருமித்தமாக தூய்மையாக வைத்துக்கொள்ளும் சிந்தனையால் ஆனது ஆன்மிகம். இது நம்மை, ‘நான் யார்?, என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?, நான் பிறர் வாழ்க்கையில் எதைக் கொண்டு வர விரும்புகிறேன்?’ எனும் கேள்விகளுக்குப் பதில்கள் தேட வைக்கிறது. ஆன்மிகத்தின் அவசியம்: இன்றைய உலகம் வேகமானது, போட்டியினால் நிரம்பியது. ஆனால், அந்த வேகத்தில் மன நிம்மதி, பரிவு, பொறுமை, மகிழ்ச்சி ஆகியவை குறைந்து வருகின்றன. அதனால்தான், மன அழுத்தம், விரக்தி, தனிமை, தற்கொலை எண்ணங்கள் கூட உருவாகின்றன. இவற்றுக்கு நிலையான தீர்வு தத்துவங்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட ஆன்மிக நெறிகளில்தான் இருக்கிறது. ஆன்மிகம், மனதை அமைதியாக வைத்துக்கொள்ளும் ஒரு தளத்தை உருவாக்குகிறது. ஆன்மிகம் வாழ்க்கையை மாற்றும் விதம்: உள்ளார்ந்த அமைதி: பிரச்னைகள் எத்தனை இருந்தாலும், ஆன்மிகத்தைப் பின்பற்றுபவர் உள்ளத்தில் அமைதியை நிலைத்துவைக்கக் கற்றுக் கொள்கிறார். அழுத்த நிலையை சமாளிக்கிறது: விபத்துகள், தோல்விகள் போன்றவற்றை சமாளிக்க மனத் தூண்டுதலை அளிக்கிறது. சுய ஒழுக்கம் மற்றும் நேர்மை: உண்மை பேசுதல், தவறுகளுக்கு மன்னிப்பு கோருதல், பொறுப்புடன் நடத்தல் போன்ற நற்பண்புகள் வளர்க்கப்படுகின்றன. பிறரிடம் கருணை: ஆன்மிகம் ஒருவர் தனக்கு மட்டும் வாழாமல், பிறரையும் புரிந்து கொள்ளச் செய்கிறது. சுய உணர்வு மற்றும் வாழ்வியல் தெளிவு: வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக எதிர்கொள்வதற்கான மனநிலையை உருவாகிறது. பெரும்பாலோர், ‘ஆன்மிகம் என்பது மத சடங்குகளோடு தொடர்புடையது’ என்று எண்ணுகிறார்கள். ஆனால், உண்மையில் ஆன்மிகம் என்பது எல்லா மதங்களுக்கும் அடிப்படைக் கருத்தாக இருக்கிறது. ஆன்மிகம் என்றால் கோயிலுக்கு மட்டும் போவதல்ல, ஒருவரை வருத்தாமல் வாழ்வதே உண்மையான ஆன்மிகம். இளைஞர்கள் மற்றும் ஆன்மிகம்: இன்றைய இளம் தலைமுறைக்கு அதிக அறிவு, திறன், தொழில்நுட்ப அறிவு ஆகியவை இருப்பினும், மனநிறைவு குறைவாகவே உள்ளது. இதன் காரணம் உள்ளார்ந்த தொடர்பு இல்லை. பள்ளியிலிருந்தே ஆன்மிகப் பயணத்தின் சிறு தூண்கள் விதைக்கப்பட வேண்டும். தியானம், யோகா, நேர்மையான உறவுகள், நற்கதைகள், பெரியோர்களின் அனுபவங்கள் போன்றவை அவர்களை நேர்மையான வழியில் வளர்க்கும். வெற்றிக்காக மட்டுமல்ல, அர்த்தமிக்க வாழ்வுக்காகவும் இளைஞர்கள் ஆன்மிகத்தைப் பின்பற்ற வேண்டும். ஆன்மிகம் என்பது மனித வாழ்வின் தேவை. அறிவு வளர்ச்சி நமக்கு வசதியை அளிக்கிறது. ஆனால், ஆன்மிகம் நமக்கு அமைதியையும் அர்த்தத்தையும் அளிக்கிறது. இது ஒரு இலட்சிய வாழ்க்கையின் தாய்மொழி எனலாம். தெய்வத்தையே காணவில்லை என்றாலும், தெய்வீக எண்ணங்களை வளர்த்துக்கொள்வதே ஆன்மிகம். ஆன்மிகம் வாழ்வின் வழிகாட்டுதலாக இருக்கட்டும்; அதனால் நம் வாழ்க்கை வெளிச்சமாகட்டும்.🍀
காலை வணக்கம் - ஆனந்தத்தின் அடிநாதமாக விளங்கும் ஆன்மிகம்! ஆனந்தத்தின் அடிநாதமாக விளங்கும் ஆன்மிகம்! - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #காலை வணக்கம் வேண்டுதல்கள் நிறைவேறணுமா? கடவுளை இப்படி வழிபடுங்கள்...* 🙏 கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடும் போது சரியான முறையில் வழிபட வேண்டியது அவசியமாகும். சிலருக்கு வேண்டுதல்கள் விரைவாக நிறைவேறிவிடும். ஆனால், இன்னும் சிலருக்கோ எவ்வளவு வேண்டிக்கொண்டாலும் கஷ்டங்கள் தீராமல் தொடரும். இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட ஒரு முறை இருக்கிறது. அந்த முறையை சரியாக பின்பற்றினால் மட்டுமே இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கும். இதை அறியாமல் எடுத்ததுமே சுவாமி சன்னதிக்கு சென்று, 'எனக்கு அதை கொடு, இதை கொடு' என்று சிலர் தங்கள் குறைகளைக் கூறி புலம்புவார்கள். முதலில் இறைவனை கண்ணார தரிசித்து, அவரது நாமத்தை வாயார உச்சரித்து, கோவில் பிரஹாரத்தை சுற்றி வலம் வந்து கொடி மரத்தின் முன் வணங்கி பின் அமைதியாக அமர்ந்து மனதார வேண்டுதல்களை வைக்க வேண்டும். இதுவே இறைவனை வேண்டும் சரியான முறையாகும். சிலர் தங்கள் வேண்டுலை வைக்கும் போது தெரியாமல் தவறு செய்கிறார்கள். 'நான் வறுமையில் இருக்கிறேன், வீடு இல்லை, திருமணம் நடைப்பெறவில்லை, உடல்நலம் சரியில்லை' என்று எல்லாவற்றையும் எதிர்மறையாகவே சொல்லி புலம்புவார்கள். இவ்வாறு புலம்பும் போது இறைவன் 'அவ்வாறே ஆகட்டும்' என்று ஆசி வழங்குவார். இதனால் நம் கஷ்டங்களும் தீராமல் தொடரும். அதற்கு பதில் நேர்மறையான எண்ணங்களுடன் இறைவனிடம் சரணாகதியடையுங்கள். 'இறைவா! நீ எனக்கு சொந்த வீடு, நல்ல பிள்ளைகள், ஆரோக்கியமான உடல்நிலை எல்லாம் தந்தருள வேண்டும். என்னுடைய திருமணம் விரைவில் நடக்கும், கடன் அடைப்படும்' என்று நம்பிக்கையுடன் வேண்டுங்கள். இப்படி நேர்மறை எண்ணங்களோடு இறைவனை முழுமனதோடு நம்பிக்கையோடு வணங்கினால், நம் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. இனி கோவிலுக்கு செல்லும் போது இந்த வழிபாட்டை பின்பற்றி மகிழ்ச்சியாக வாழுங்கள்.🌹
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - வேண்டுதல்கள் உங்கள் நிறைவேறணுமா? கடவுளை இப்படி வழிபடுங்கள்.. வேண்டுதல்கள் உங்கள் நிறைவேறணுமா? கடவுளை இப்படி வழிபடுங்கள்.. - ShareChat
#🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 குடிக்காமல் அழும் குழந்தைகளின் ‘பாலாரிஷ்டம்’ தோஷம் தீர்க்கும் அபூர்வ கோயில்!* திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாச்சிலாச்சிரமம் என்ற பாடல் பெற்ற திருத்தலம். தற்போது இது திருவாசி எனப்படுகிறது. இத்தலத்தில் அருளும் இறைவன் அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரைவரதீஸ்வரர். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது. ஆதியில், ‘சமீவனேஸ்வரர்’ என அழைக்கப்பட்ட ஈசன் பிற்காலத்தில், 'மாற்றுரைவரதீஸ்வரர்' என அழைக்கப்படுவதன் காரணம் மிகவும் சுவாரசியமானது. சுந்தரர் திருத்தல யாத்திரை செல்லும்போது தனது அடியார்களுக்கு குறைவிலாது உணவு வழங்குவது வழக்கம். இதற்காக செல்லும் இடங்களில் ஈசனிடம் பொன் பெறுவது வழக்கம். அப்படி திருவாசி தலத்தில் பொன் பெற்றபோது அதன் தரத்தை அறிந்துகொள்ள வேண்டினார். ஈசனே மாற்று உருவில் வந்து பொன்னின் தரத்தை உரைத்துச் சொன்னாராம். அதனால் இத்தல இறைவனுக்கு, 'மாற்று உரை வரதீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. கருவறையில் ருத்ராட்ச பந்தலின் கீழ் ஈசன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். ராஜகோபுரத்தின் கீழ் அதிகார நந்தி, தனது மனைவியுடன் எழுந்தருளியுள்ளார். நவகிரக சன்னிதியில் சூரியன் தனது மனைவியருடன் காட்சி தருகிறார். மற்ற கிரகங்கள் எல்லாம் அவரைப் பார்த்தபடி இருப்பது இக்கோயிலின் சிறப்பு. கொல்லிமலை மன்னனின் மகளைத் தாக்கிய நோயை மடக்கி ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார் ஈசன். இதனால் இங்குள்ள நடராஜர் காலுக்குக் கீழே முயலகன் உருவம் இல்லாமல் நாகத்தின் மீது ஈசன் நடனமாடுகிறார் என்பது இங்கு மட்டும் காணக்கூடிய சிறப்பு. வைகாசி மாதம் பெளர்ணமி தொடங்கி 11 நாட்கள் முத்துப் பல்லக்கு விழா இங்கு விசேஷமான விழாவாகும். சோம வாரம் திங்களில் 7 விளக்குகளில் இலுப்ப எண்ணெய் ஊற்றி இத்தல இறைவனுக்கும் அம்பாளுக்கும் தீபம் ஏற்றினால் குடும்பப் பொருளாதாரம் மேம்படும். ஐந்து வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள அன்னமாம் பொய்கையில் நீராடி, அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறும். தீராத வயிற்று வலி, நோயுற்றவர்கள் இங்கு ஒன்பது வாரம் தொடர்ந்து விளக்கு போட நல்ல பலன் கிடைக்கும். பால் குடிக்காமல் அழும் கைக்குழந்தைகளின் 'பாலாரிஷ்டம்' என்ற தோஷம் நீங்க காலை 7 மணி முதல் 12 மணிக்குள் இங்குள்ள அம்பாளுக்கு அபிஷேகம் செய்து குழந்தை பெயரில் அர்ச்சனை செய்து, அபிஷேக தீர்த்தத்தை குழந்தை மீது தெளித்தால் பாலாரிஷ்ட தோஷம் தீரும் என்பது நம்பிக்கை. இத்தல அம்பிகை அன்னப்பறவையாக வந்து, 'அன்னமாம் பொய்கை' என்ற தீர்த்தத்தில் வளர்ந்து ஈசனை வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.🍀
🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 - குடிக்காமல் அழும் LIIT6U குழந்தைகளின் பாலாரிஷ்டம் தோஷம் தீர்க்கும் அபூர்வ கோயில்! குடிக்காமல் அழும் LIIT6U குழந்தைகளின் பாலாரிஷ்டம் தோஷம் தீர்க்கும் அபூர்வ கோயில்! - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏🪔 ஓம் வராகி அம்மா போற்றி 🪔🙏 உயிரின் சூத்திரக் கயிறாக விளங்கும் அக்னி தேவன்! 🔥 உடலின் உள்ளக நெருப்பும், பிரபஞ்சத்தின் தெய்வீக இயக்கமும் “நெருப்பு இல்லாமல் வாழ்க்கை சாத்தியமா?” இந்தக் கேள்விக்கு நாம் உடனே “இல்லை” என்று சொல்வோம். ஆனால் அந்த நெருப்பு வெறும் அடுப்பில் எரியும் தீயா? இல்லையே… அந்தத் தீ — நம் மூச்சில், நம் இரத்தத்தில், நம் உயிரோட்டத்தில் மறைந்து கிடக்கிறது. அந்த உயிர் சக்தியே அக்னி தேவன். இந்தப் பதிவில் அக்னியின் தெய்வீக தோற்றமும், பிரபஞ்ச இயக்கத்துடனான தொடர்பும், நம் உடலோடு உள்ள ஆழமான உறவும் விரிவாக காண்போம். 🔥 அக்னி – பிரபஞ்சத்தை அசைத்த முதல் சக்தி பிரம்ம சிருஷ்டியின் தொடக்கத்தில், அண்டங்கள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், கோள்கள் — அனைத்தும் உருவாக்கப்பட்டிருந்தாலும் அசைவற்ற நிலையில் இருந்தன என்று ஆகமங்கள் கூறுகின்றன. அப்போது பரமாத்மாவின் சங்கல்பத்தில் இருந்து தோன்றிய ஆனந்த தாண்டவ மூர்த்தி — நடராஜர் அவரது திருக்கரங்களில் ஒரு அபூர்வப் பொருள் — தீச்சட்டி. அதில் எரிந்தது அக்னி. அந்த அக்னி வெளிப்பட்ட தருணமே பிரபஞ்சம் முழுவதும் இயக்கம் பெற்றது. நடராஜரின் திருநடனம் ஆரம்பித்தவுடன் அசையாமல் இருந்த பிரபஞ்சம் உயிர்பெற்று அசைந்தது. இந்த அற்புத தரிசனத்தை நம் முன்னோர்கள் ஆருத்ரா தரிசனம் என்று கொண்டாடினர். 🌟 பஞ்சபூதமும் அக்னியின் ரகசியமும் பஞ்சபூதங்கள்: பிரித்வி (மண்), அப்பு (நீர்), வாயு (காற்று), தேஜஸ்/தேயு (ஒளி), ஆகாயம் (விண்). இங்கு முக்கியமான திருத்தம்: “அக்னி” மற்றும் “தேஜஸ்” இரண்டும் ஒரே அம்சத்தின் வெளிப்பாடுகள். தேஜஸ் என்பது தெய்வீக ஒளி; அக்னி அதன் செயற்பாட்டு வடிவம். தேஜஸ் நிறைந்த பிரபஞ்சத்தில் இருந்து அசைவூட்டும் செயல்திறன் கொண்ட அம்சமாக பிரிக்கப்பட்டதே அக்னி. அக்னி இல்லாமல்: ஜடம் அசையாது. உடல் இயங்காது. உயிர் நிலைக்காது. 🔥 அக்னி பகவானின் திருவுருவம் அக்னி பகவான்: இரண்டு தலைகள் மூன்று கால்கள் ஏழு கரங்கள் மேஷம் (ஆடு) வாகனம் இவ்வாறு வேதங்களில் வர்ணிக்கப்படுகிறார். அவரே யாகங்களில் ஹோமக் குண்டத்தில் எழுந்து தேவர்களுக்கு அவிர் பாகத்தை எடுத்துச் சேர்ப்பவர். 🔥 அக்னியும் நம் உடலும் – உயிரின் உள்ளக நெருப்பு அக்னி வெளியில் எரியும் தீ அல்ல. நம் உடலில் அது “அனல் சக்தி” (Thermal energy) வடிவில் உள்ளது. அக்னியின் ஐந்து வடிவங்கள் (பஞ்சாக்னி) ஜாடராக்னி – ஜீரண சக்தி காயாக்னி – உடல் வெப்பம் காலாக்னி – கால இயக்க சக்தி மூலாக்னி – அடிப்படை உயிர் சக்தி காமாக்னி – இனப்பெருக்க சக்தி இந்தப் பஞ்சாக்னியே வாதம், பித்தம், கபம் ஆகிய மும்மலங்களின் சமநிலையை காக்கிறது. 🔥 நாபி – அக்னி குண்டம் நம் முன்னோர்கள் நாபியை “அக்னி குண்டம்” என அழைத்தனர். ஏன்? நாபி பகுதியில் உள்ள ஜீரண அங்கங்களில் நெருப்புக் கோளம்போல் எரியும் சக்தி உள்ளது. அதுவே உணவை ஆற்றலாக மாற்றுகிறது. உணவு → ஜீரணம் → இரத்தம் → உயிர் சக்தி இந்தச் சங்கிலியின் மையம் அக்னி. 🔴 இரத்தம் – உடலின் ஓடும் அக்னி நெருப்பின் நிறம் சிவப்பு. இரத்தத்தின் நிறமும் சிவப்பு. இரும்பை சூடு செய்து உருக்கினால் அது ஓடும். அதேபோல் இரத்தமும் அக்னியின் வெப்ப சக்தியால் ஓடுகிறது. மூச்சின் வழியாக உள்ளிழுக்கும் பிராண வாயு இரத்த ஓட்டத்தின் மூலம் உடலெங்கும் செல்கிறது. செல்கள், திசுக்கள் அனைத்துக்கும் உயிர் கொடுப்பது அந்த அக்னிச் சக்தியே. இரத்தம் உறைந்துவிட்டால்? இயக்கம் நிற்கும். உயிர் முடியும். இதனால்தான் சித்தர்கள் அக்னியை “உயிரின் சூத்திரக் கயிறு” என்று அழைத்தனர். 🔥 புராண நிகழ்வுகளில் அக்னியின் பங்கு தசரதன் புத்திர காமேஷ்டி யாகத்தில் அக்னி மூலம் பாயசம் பெற்றார். சீதா தேவி அக்னி பிரவேசம் மூலம் கற்புக்கரசி என நிரூபிக்கப்பட்டார். அக்னி — சாட்சி, சுத்திகரிப்பு, சக்தி. 🔥 நடராஜரின் நித்திய நடனம் – உயிரின் ஐந்து இயக்கங்கள் உண்பது உறங்குவது மூச்சு விடுவது பேசுவது பெருக்கம் இந்த ஐந்து செயல்களும் நடராஜரின் நித்திய நடனம். அந்த நடனத்தை இயக்கும் உயிர் சக்தி — அக்னி. 🔥 முடிவுரை அக்னி இல்லாமல்: உடல் இயங்காது மனம் செயல்படாது பிரபஞ்சம் சுழலாது அக்னி வெளியில் எரியும் தீ அல்ல. அது நம் உள்ளில் ஓடும் உயிர். அதை சமநிலைப்படுத்துவது நல்ல உணவு நல்ல சுவாசம் நல்ல எண்ணம் நல்ல வாழ்க்கை. அக்னி சாந்தமாக இருந்தால் வாழ்க்கை சமநிலையாகும். அக்னி சீற்றமாக இருந்தால் உடலும் மனமும் பாதிக்கப்படும். ஆகவே அக்னியை புரிந்து கொண்டு வாழ்வது உயிரை மதிப்பது ஆகும.
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - மனித உயிரின் சூத்திரக் கயிறாக விளங்கும் அக்னி தேவன்! জ फँ যী 3 உடலின் உள்வக நெருப்பும் பிரபஞ்சத்தின் தெய்வீக இயக்க مف தெரிந்துகொள்ளுங்கள் மனித உயிரின் சூத்திரக் கயிறாக விளங்கும் அக்னி தேவன்! জ फँ যী 3 உடலின் உள்வக நெருப்பும் பிரபஞ்சத்தின் தெய்வீக இயக்க مف தெரிந்துகொள்ளுங்கள் - ShareChat
ஆன்மீக சிந்தனைகள்.. *************************************************** நாம் வண்டியில் போகும்போது பன்றி மீது மோதினால் அந்த வண்டியை விற்றுவிட சொல்கிறார்களே, ஏன்? ---------------------------------------------------------------------------------- இந்த கருத்து நம்மிடையே உள்ள நம்பிக்கையாக உள்ளது. பொதுவாக வாகனத்தை இயக்கவேண்டும் என்றால் அதற்கு ஜாதகத்தில் செவ்வாய் வலிமை பெற்றிருக்க வேண்டும். இந்த செவ்வாய் என்கிற கிரஹம்தான் பாதுகாப்பிற்கும் அதிபதி. இந்த பூமி, நிலம், சாலை வழி போக்குவரத்து ஆகியவற்றிற்கு அதிபதி செவ்வாய். வராஹம் என்று அழைக்கப்படும் பன்றி செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்றது. வராஹ ஸ்வாமியின் உருவத்தை நினைவிற்கு கொண்டுவந்து பாருங்கள். ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனிடமிருந்து பூமியைக் காத்து கடலுக்கு அடியில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தவராக புராணங்கள் கூறுகின்றன. இப்படி செவ்வாயின் வலிமை பெற்ற வராஹம் என்று அழைக்கப்படும் பன்றியானது, வாகனத்தை இயக்கும்போது குறுக்கே வந்து அதன் மீது மோதிவிட்டால், அந்த வாகனத்தினால் நமக்கு வேறு ஏதோ பெரிய ஆபத்து நேரப்போகிறது என்பதைக் குறிப்பதாகவும், நம்மை எச்சரித்து பாதுகாப்பதற்காகத்தான் அவ்வாறு பன்றி ஆனது குறுக்கே வந்துநின்று தடுத்து நம்மைக் காப்பதாகவும், ஒரு நம்பிக்கை உள்ளது. அதனால்தான்.. பன்றியின் மீது மோதிவிட்டால் அந்த வாகனம் நமக்கு #🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #🙏🪔 ஓம் வராகி அம்மா போற்றி 🪔🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 உகந்தது அல்ல என்று கருதி அதனை உடனே விற்றுவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். ➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️
🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 - திருவரங்கம் பரஸ்றைஜ்ரோதிஷே நம' திருவரங்கம் பரஸ்றைஜ்ரோதிஷே நம' - ShareChat