
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
தரிசனம்..*
*சோம வார சிவ தரிசனம்..* #பக்தி #🕉️ஓம் முருகா #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏
#பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️ஓம் முருகா படிக்க வேண்டிய...
அருமையான பதிவு!
"நான் பலகாலம் எல்லோரையும் போல என் வயதுக்கு ஏற்ற உடை (வெள்ளை வேட்டி, அரைக்கை சட்டை) உடுத்தி சாதாரணமாக தான் இருந்தேன்...
ஒரு முறை எதேச்சையாக, 'ஓம்' பொறித்த சட்டை கிடைத்தது.
அதை போட்டு கொண்டு வழக்கம் போல ஊர் சுற்றினேன்.
அப்போது,
ஆட்டோ ஓட்டுபவர்,
நான் தங்கிய ஓட்டலில், உணவு அருந்திய உணவகத்தில்,
இன்னும் சொல்ல போனால் கோவிலில் கூட வித்தியாசமாக பார்த்தார்கள்.
சிலரின் பார்வையில் வெறுப்பு பளீர் என்று தெரிந்தது.
இது எனக்கு அதிசயமாக இருந்தது.
'என்னடா இது?
ஒரு பாய் தலையில் குல்லா போட்டு தாடி வெச்சு வந்தாலோ...
'ஒரு பாதிரி வெள்ளை அங்கி கட்டி வந்தாலோ...
'ஒரு பெண் புர்கா போட்டு வந்தா கூட எவனும் கவனிப்பதில்லை!
மரியாதையாக வழி விடறான்...
நான் 'ஓம்' பொறித்த சட்டை போட்டு வந்ததற்கு மட்டும் ஏன் சிலர் வெறுப்பாகவும்... பலர் வியப்பாகவும் பார்ப்பதின் காரணம் என்ன?
அன்று புரிந்தது.
இந்துக்கள் தங்கள் அடையாளங்களை இழந்து விட்டோம்.
மீறி வெளிப்படுத்தினால் அது 'தவறோ' என்கிற சந்தேகத்தை ஆழமாக இந்துக்கள் மனதிலேயே ஊன்றி விட்டனர்.
அதே போல ஒரு இந்து தன் அடையாளத்தை ஆடைகள் மூலம்வெளிப்படுத்தனால்...
அவன் மாற்று மதத்திற்கு எதிரானவன் என்கிற கருத்தாக்கத்தை மாற்று மதத்தினரிடையேயும் பதிந்து விட்டார்கள்.
இது இன்று நேற்று நடந்ததில்லை.
பல காலமாக...
ஆம், வெள்ளைக்காரனிடம் வேலைக்கு சென்றவனிடம் 'Professional Ethics' என்று வெள்ளைகாரன் உருவாக்கினான்.
அதாவது, வேலைக்காரர்களிடம் 'இந்து' அடையாளம் எதுவும் இருக்க கூடாது.
அதன் நியாய அநியாயத்தை சிந்திக்காமல் சம்பளத்திற்காக 'சலாம்' போட்டு வந்தார்கள்.
அது தான் இன்று வரை தொடர்கிறது.
இன்றும் மறைமுகாக இயக்கி வருகிறான்.
சினிமா, டிராமா என்று எல்லாவற்றிலும் இப்படி நம் அடையாளத்தை வெளிப்படுத்துவதை 'நாகரீகம், நகைச்சுவை' என்கிற பெயரில் மொட்டையாக கிண்டல் செய்வதை சர்வசாதாரணமாக பார்க்கலாம்.
நாமும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
சிரித்து விட்டு கடந்து போய்விடுவோம்.
நாம் என்றாவது தாடி வளர்த்த பாயை கிண்டல் செய்த படம் பார்த்திருப்போமா?
பாதிரியை கிண்டல் செய்வதை படமாக்கியிருப்போமா?
மாட்டோம்.
இப்படி இந்துக்களின் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியை நிறுவிய பிறகு...
அவனை விபூதி பூசு, பெண்களின் நெற்றியில் திலகம் இடு என்று சொன்னால்... யார் கேட்பார்கள்?
நானும் இதை சாதாரணமாக கடந்து சென்றவன் தான்.
அன்று, எதேச்சையாக நான் அணிந்த 'ஓம்' பொறித்த ஒரு சட்டை...
என்னை மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்க வைத்த போது தான்,
என் (நமது) மத சுதந்திரம் பறி போயிருப்பதை உணர்ந்தேன்.
இது எங்கு போய் முடியும்? என்று பார்க்கும் போது...
நமக்கு (இந்துக்கள்) எதிராக மாபெரும் 'சதி' பின்னப் பட்டிருப்பதை அறிய முடிந்தது.
இது நமது மதத்தை மட்டுமல்லாமல்...
நமது பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியலை அழிக்க உருவாக்க பட்டடது என்பதை உணர முடிந்தது.
உலகின் உன்னதமான வாழ்வியல்...
நமது வாழ்வியல் தான்🎯
இதன் மூலம் தான்...
உடல், மன ஆரோக்கியத்தை நாம் அடைந்து...
பிறந்ததற்கான பயனை அடைய முடியும்.
எனவே, நமது வாழ்வியலை அழிய விடக்கூடாது.
அப்படி அழிய விட்டால் 'நமது தலையில் நாமே மண்ணை அள்ளி போடுவது' மாதிரி தான்.
இதனை மாற்ற வேண்டும்.
முதலில் நான் மாற வேண்டும்.
என் நாட்டில் என் மத அடையாளங்களை நான் போட்டுக் கொள்வது சாதாரணமாக இருக்க வேண்டும்.
அது வியப்பாக இருக்க கூடாது.
உலகெங்கிலும் தன்னை நிறுவிக் கொள்ள முனைப்படும் இயக்கங்கள் முதலில் செய்வது...
மக்களின் தனித்துவ அடையாளங்களை அழிப்பது தான்.
இது தவறு!
நம் நாடு!
நம் அடையாளம்!
நம் நம்பிக்கை!
நம் கலாசாரம்!
இதனை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.
இது தான் ஒவ்வொரு குடிமகனின் கடமை.
அன்றிலிருந்து...
நான், முடிந்த வரை என் உடைகளில் காவியை சேர்த்தே வருகிறேன்.
நெற்றியில் சந்தனம் குங்குமம் இட்டே வலம் வருகிறேன்.
லண்டனில்... வேட்டி கட்டி, நெற்றியில் சந்தனத்துடன் பாட்டு பாடி செல்லும் வெள்ளைக்கார 'ஹரே கிருஷ்ணா' இயக்கத்தவனுக்கு இருக்கும் தைரியம்...
நமக்கு ஏன் இல்லை❓
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #பக்தி #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ புன்னை நல்லூர் மாரியம்மன்
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வெங்கோஜி ஆண்டு வந்தார். அவர் அவ்வப்போது தீர்த்த யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் கண்ணபுரம் என வழங்கும் சமயபுரத்தில் அருளும் மாரியம்மனை தரிசிக்கச் சென்றார்.
அன்னையை வணங்கி வழிபட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் வெங்கோஜி. அப்போது அவர் கனவினில் தோன்றிய மாரியம்மன் தஞ்சை நகருக்குக் கிழக்கே புன்னை வனக்காட்டில் புற்றுருவாய் தான் குடி கொண்டிருப்பதாகவும், அங்கேயே தன்னை தரிசிக்கலாம் எனவும் திருவாய் மலர்ந்தருளினாள். திடுக்கிட்டு விழித்த மன்னர் புன்னைக்காட்டினை அடைந்தார். அங்கே திறந்த வெளியில் புற்றுருவாய் அமர்ந்திருந்த அம்பிகையைக் கண்டார். உலகையே ரட்சிக்கும் அன்னை இப்படி வெட்ட வெளியில் இருப்பது கண்டு மனம் நொந்தார். உடனே மேற்கூரை அமைத்து அனைவரும் வந்து வழிபட வகை செய்தார்.
சிறிது காலம் சென்ற பின் வெங்கோஜி மன்னனின் மகனான துளசிராஜா ஆட்சிக்கு வந்தார். இவருடைய மகளுக்குக் கடும் அம்மை நோய் கண்டது. அதனால் அவளது பார்வை பறிபோயிற்று. மகளுடைய இந்த நிலையைக் கண்டு மன்னர் ஆழ்ந்த வருத்தம் கொண்டார். அவருடைய கனவில் ஒரு சிறுமி தோன்றினாள். ‘உன் தந்தை எனக்கு வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் பாதுகாப்புத் தர மேற்கூரை வேய்ந்தார். அவருடைய மகளான உன்னை நான் காக்க மாட்டேனா?’ என்று புன்முறுவலுடன் சொன்னாள். அந்தச் சிறுமி புன்னைநல்லூர் மாரியம்மன்தான் என்பதைப் புரிந்து கொண்டார் துளசிராஜா.
மறுநாள் துயிலெழுந்ததும் முதல் வேலையாக தன் மகளுடன் புன்னைநல்லூர் வந்தார். மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் அபிஷேகங்களும், அர்ச்சனையும் புரிந்து வணங்கினார். அன்னையின் சந்நதியில் நெய்தீபங்களை ஏற்றினார். அந்த தீபங்களின் ஒளி நேராக துளசிராஜாவின் மகளை நோக்கிச் செல்வது போன்ற பிரமை ஏற்பட்டது. ஆனால், அது பிரமை அல்ல; உண்மை. ஆமாம், அவளுக்குப் பார்வை மீண்டது.
அன்னையின் மகத்தான சக்தியை மனப்பூர்வமாக உணர்ந்த மன்னன், திருச்சுற்றுச் சுவர்களைக் கட்டி, இறைவிக்கு அழகிய கோயிலை உருவாக்கி அதை பக்தர்களுக்குக் காணிக்கையாக்கினார். அந்த மன்னனின் திருவுருவச் சிலை இன்றும் இறைவியின் சக்திக்கு சாட்சியாக ஆலயத்தில் காட்சி தருகிறது.
சக்திக்கே சக்தி தரும் வகையில் மகான் சதாசிவப்பிரம்மேந்திரர் அம்பிகையின் சந்நதியில் புற்றுமண்ணைக் கொண்டே அம்மனை வடிவமைத்து சக்ரத்தையும் நிறுவினார். அதனால் மூலவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. உற்சவ அம்மனுக்குத்தான் அபிஷேகம். வரப்ரசாதியாகக் திகழும் இந்த அம்பிகைக்கு பக்தர்கள் பால் குடமெடுத்தும், மாவிளக்கும் போட்டும் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.
பேச்சியம்மை, லாட சந்நியாசி, மதுரைவீரன், கருப்பன், பாடகச்சேரி சுவாமிகள், சதாசிவ பிரம்மேந்திரர் ஆகியோரின்சுதை உருவங்கள் உடன் திகழ, அன்னை அருளாட்சி புரிகிறாள்.
கடுமையான கோடைக் காலத்தில் அம்மனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்வை பெருகி வரும். இது பலநூறு ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் அற்புதம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒரு வெள்ளைக்கார அதிகாரி, இவ்வாறு வியர்வை அரும்புவதை கேலி செய்ததோடு அது தற்செயலாக வேறு ஏதாவது நீர்பட்டு அவ்வாறு தோன்றியிருக்கும் என்று சொல்லி, அந்த நீரைத் துடைக்குமாறு கட்டளை இட்டான். அவன் ஆணையை மீற முடியாத கோயில் அர்ச்சகர் நடுங்கும் கரங்களுடன் அவ்வாறே செய்ய, முத்துகளாய் அரும்பியிருந்த அந்த வியர்வைத் துளிகள் அதிகாரியின் உடலில் அம்மை முத்துகளாகப் பொங்கி, அவனை அதிர வைத்தன.
அதிர்ச்சிக்குள்ளான அந்த அதிகாரி, அந்தப் பகுதி பக்தர்களின் நம்பிக்கையைக் கேவலப்படுத்திய தன் தவறை உணர்ந்து வருந்தி, கண்களில் நீர் பெருக்கினான். நாளடைவில் அம்மனின் அருளால் அவன் அதிகத் துன்பமின்றி, நோய் வந்த வடுவும் எதுவும் இன்றி பூரண நலம் பெற்றான். சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலய திருக்குளத்தில் வெல்லம் கரைப்பதாக வேண்டிக் கொண்டால் உடலில் தோன்றும் கட்டிகள், மருக்கள் போன்றவை விரைவில் மறைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 7 கி.மீல் உள்ளது புன்னைநல்லூர் திருத்தலம்.
#🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #பக்தி #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 கார்த்திகை திருநாள்..
***************************************************
வைணவத்திலும் கார்த்திகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். காரணம் திருமங்கை ஆழ்வார் ஜன்ம நட்சத்திரம் கார்த்திகை. பெரும்பாலான பெருமாள் கோயில் களில் திருமங்கையாழ்வார் சன்னதி இருக்கும். அங்கே இன்று திருமங்கையாழ்வாருக்கு திருமஞ்சனமும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும்.
திருமங்கையாழ்வாரின் வேறு பெயர்கள்
----------------------------------------------------------------------------------
ஆழ்வார் பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்களால் அறியப்பட்டார்.
திருமங்கையாழ்வார் ஆன்மிகப் பணிகள்
----------------------------------------------------------------------------------
திவ்யதேச யாத்திரை
திருமங்கை ஆழ்வார் பல வைணைவ தலங்களுக்கு பயணம் சென்று தலத்தையும், அங்கு கோவில் கொண்ட பெருமாளையும் மங்களாசாசனம் ( போற்றிப் பாடுதல்) செய்தார். இமயமலையிலுள்ள பத்ரிநாத், நைமிசாரண்யம் தொடங்கி திருக்குறுங்குடி வரை 86 திவ்ய தேசங்களைப் பாடியிருக்கிறார். பல சிறிய தலங்களின் அழகிய தமிழ்ப்பெயர்கள் அவரது பாசுரங்களில் காணக் கிடைக்கின்றன (திருக்காவளம்பாடி, திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன்பள்ளி, திருவெள்ளியம்பாடி, திருப்புள்ளம்பூதங்குடி, திருநாங்கூர் செம்பொன்சேய்கோயில், திருநந்திபுரவிண்ணகரம்). கேரள மாநிலத்தின் திருவெள்ளா தலத்தை திருவல்லவாழ் என்று குறிப்பிடுகிறார். திருநிறையூர், திருக்கண்ணபுரம், திருவரங்கம் போன்ற தலங்களை அதிகம் பாடியிருக்கிறார்.
திருவரங்கத்தில் திருப்பணிகள்
----------------------------------------------------------------------------------
திவ்ய தேசப் பயணத்திற்குப்பின் திருவரங்கம் வந்து அங்குள்ள பெரிய பெருமாளுக்கும் அழகிய மணவாளனுக்கும் விமானம், மண்டபம், திருத்தளிகை, திருமதில், கோபுரம் முதலியவற்றை அமைத்தார். தொண்டரடிப்பொடி ஆழ்வார், மலர் பறிக்கும் தமது ஆயுதத்துக்கு திருமங்கை மன்னருடைய பெயர்களுள் ஒன்றான அருள்மாரி என்று பெயரிட்டார். திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் நம்மாழ்வார் பரமபதம் அடைந்த வைகுண்ட ஏகாதசித் திருவிழாவையும் ராப்பத்து உற்சவத்தையும் ஏற்படுத்தினார். ராப்பத்து உற்சவத்தில், நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல்களை இசையுடன் ஓதி பத்து நாட்கள் விழா எடுத்தார். அதற்காக தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் கோயில் கொண்டுள்ள நம்மாழ்வார் திருமேனியை ஸ்ரீரங்கத்துக்கு ஊர்வலமாகக் கொணர்ந்து மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடினார். பின்னர் ஸ்ரீரங்கத்திலேயே ஆழ்வார்களுக்கு விக்கிரகங்கள் அமைத்துக் கோயில் எழுப்பப்பட்டது. திருவாலி நகரத்தில் திருமங்கையாழ்வார்-குமுதவல்லி க்கு தனி சன்னதி உள்ளது துணையுடன் கோவில் கொண்ட ஒரே ஆழ்வார் திருமங்கையாழ்வார்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்..
➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #பக்தி #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #பக்தி #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 ஓம்சர்வேஷ்சாய ஓம்கார்த்திகேய ஓம் நமோ நாராயணா சிரமாறு உடையான் 🌞 🙏 இன்று இனிய நாள் வாழ்க வளர்க நலத்துடன் துரைசாமி🪷🪷🪷
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #பக்தி #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏
திரு மந்திரம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏சீதா ராமர்
#🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
கோபுர தரிசனம்
அருள்மிகு
*ஸ்ரீ சற்குணநாதர்*
*ஸ்ரீ மங்கள நாயகி அம்பாள்*
திருக்கோவில்
இடும்பாவனம்
திருவாரூர் மாவட்டம்.












