ADITYA GURUJI
599 views
2 days ago
11 வருட மெமரி.. கடக்கத்திற்கு செவ்வாய் தரும் ருசக யோகம்.. #adityaguruji #கடகம் #TamilArticle #பலன்கள் #Cancer #ஜோதிடம் #ருசகயோகம் #செவ்வாய் #mars உங்கள் ஜாதகம் யோகஜாதகமா? 47 கடக லக்னத்திற்கு செவ்வாய் பகவான் அளிக்கும் ருசக யோகத்தினைப் பற்றி இப்போது பார்க்கலாம்..... கடகம் : கடகத்தின் பூரண ராஜயோகாதிபதியான செவ்வாய் பகவான் இந்த லக்னத்திற்கு பத்தாமிடமான மேஷத்தில் மூலத்திரிகோணம் மற்றும் திக்பலம் பெற்றும், ஏழாமிடத்தில் உச்சம் பெற்றும் இரண்டு இடங்களில் வலுப்பெற்று ருசக யோகம் அளிப்பார். இயற்கைப் பாபரான செவ்வாய் திரிகோணங்களுக்கு அதிபதியாக வரக் கூடாது என்ற எனது தியரிப்படி அவர் திரிகோணாதிபத்தியம் பெறும் ஐந்தாமிடமான விருச்சிகத்திற்கு ஆறில் மறைந்து பத்தாமிடத்தில் ஆட்சி பெறுவது சிறப்பான நிலை. மேலும் இது தசம அங்காரா எனும் தொழிலுக்கு மேன்மை தரும் அமைப்பாகும். இங்கிருக்கும் செவ்வாய் லக்னம், நான்கு ஐந்து ஆகிய இடங்களைப் பார்ப்பார். ஆகவே இந்த இடங்கள் வலுப்பெறும். நான் ஏன் செவ்வாய் தனது ஐந்தாமிடத்திற்கு ஆறில் மறைந்து பத்தாமிடத்தில் அமருவது நல்லது என்று சொல்கிறேன் என்பது இப்போது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். (செவ்வாய் ஏன் திரிகோணாதிபத்தியம் பெறக்கூடாது என்று நினைப்பவர்கள் நான் ஏற்கனவே எழுதிய “பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்” கட்டுரையைப் படியுங்கள்.) தான் திரிகோணாதிபத்தியம் பெற்ற தோஷம் நீங்க தனது திரிகோண வீட்டிற்கு ஆறில் மறைந்து பத்தில் ஆட்சி பெற்று அங்கிருந்து தனது ஐந்தாம் வீட்டையும் செவ்வாய் பார்ப்பது மிகச் சிறப்பான நிலை. தன் வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில், தனது இன்னொரு வீட்டையும் பார்க்கும் ஒரே கிரகம் செவ்வாய் மட்டுமே. மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது வீட்டைப் பார்க்கும் கிரகம் அந்த பாவத்தை வலுப்படுத்தும் என்பதால் செவ்வாயின் இரண்டு வீடுகளும் இதனால் பலம் பெறும். இங்கிருக்கும் செவ்வாய் லக்ன சுபர்களான சூரிய, சந்திர, குருவுடன் தொடர்போ, இணைவோ பெறும் நிலையில் தனித்திருப்பதை விட நல்ல பலன்கள் இடைக்கும். செவ்வாய் தசையின் ஏழு வருடங்களும் தனது காரகத்துவங்களில் தொழில் வகைகளில் நல்ல அமைப்புகளை செவ்வாய் தருவார். நான் ருசக யோகத்தின் ஆரம்பத்தில் சொன்ன இனங்களின் வழியாக ஜாதகருக்கு வருமானம் வரும். எதிர்த் தன்மையுடைய கிரகங்களுடனோ ராகு கேதுக்களுடனோ தொடர்பு கொண்டிருந்தால் நேர்மையற்ற வழிகளில் ஜாதகருக்குப் பணம் வரும். தனித்திருந்து செவ்வாய் லக்னத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகர் முன் கோபக்காரராக, அசட்டுத் துணிச்சல்காரராக இருந்து, முன் யோசனையின்றி ஏதேனும் காரியம் செய்து அதனால் சிக்கல்களில் மாட்டிக் கொள்வார். இந்த இடத்தில் அசுவினி பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் இருப்பதை விட கிருத்திகை ஒன்றாம் பாதத்தில் இருப்பது சிறப்பானது. கடகத்திற்கு இன்னொரு நிலையாக ஏழாமிடத்தில் உச்சம் பெறும் செவ்வாயினால் நன்மைகள் அவ்வளவாக இருக்காது. முதலில் ஏழாமிடத்தில் உச்சபலம் பெறும் செவ்வாய் என்னதான் லக்ன யோகராக இருந்தாலும் களத்திர பாவத்தைக் கெடுப்பார். ஒரு இயற்கைப் பாப கிரகமான செவ்வாய் நம் வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான வாழ்க்கைத்துணையைப் பற்றிய பாவத்தில் அதிபலம் பெறுவது நல்ல நிலையே அல்ல. இங்கிருக்கும் செவ்வாய் இருதார நிலையை ஏற்படுத்துவார். ஜாதகர் ஏக பத்தினி விரதனாக இருக்க முடியாது. ஏகப்பட்ட பத்தினிகளின் தலைவனாக இருக்க முடியும். சுபத்துவம் பெற்றாலொழிய ஏழாமிடம் கெடுவதைத் தவிர்க்க முடியாது. இங்கிருந்து தன் பார்வைகளால் தனது பத்தாம் வீடான மேஷத்தையும், தனது நண்பர்களின் வீடுகளான சந்திரனின் லக்னத்தையும், சூரியனின் தன ஸ்தானத்தையும் பார்வையிடுவார். ஒரு பாபகிரகம் கேந்திரத்திற்கு அதிபதியாகி மறு கேந்திரத்தில் உச்சம் பெற்று தன் கேந்திர வீட்டைப் பார்ப்பது பலமான நிலைதான் என்றாலும், ஜீவன ஸ்தானத்தை அவர் பார்வையிடுவதன் மூலம் அடிதடி, கட்டைப் பஞ்சாயத்து, வில்லங்கமான துறைகள், நேர்மையற்ற வழிகள்,அல்லது காவல்துறை, ராணுவம் போன்ற இனங்களில் ஈடுபடுத்தி ஜாதகரை பொருள் தேட வைப்பார். சூரியனும் பலம் பெற்று பத்தாமிடத்தோடு சம்பந்தப்பட்டால் ஜாதகர் காவல் துறையில் உயர் அதிகாரி ஆகலாம். வேறு சுபக்கிரகங்கள் செவ்வாயோடு சம்பந்தப்பட்டால் மட்டுமே இந்த நிலை மாறும். நான் ஏன் பாபக்கிரகங்கள் தருவது ஒரு அமைப்புத் தான் அதிர்ஷ்டங்கள் அல்ல என்று அடிக்கடி எழுதுகிறேன் என்றால், என்னதான் நீங்கள் செவ்வாயின் தயவினால் காவல்துறையில் உயர் அதிகாரியாகவோ ராணுவத் தளபதியாகவோ ஆனாலும், குரு, சுக்கிர, புதன் போன்ற இயற்கைச் சுபர்களின் தயவினால் ஐஏஎஸ் அதிகாரியாகும் ஒரு தலைமைச் செயலருக்கோ, உள்துறைச் செயலருக்கோ, மந்திரிக்கோ, முதல்வருக்கோ, பிரதமருக்கோ சல்யூட் அடித்துத்தான் ஆக வேண்டும். செவ்வாய் என்பவர் ஒரு மாளிகையை காவல் காக்கும் காவலாளியைத்தான் உருவாக்குவாரே தவிர மாளிகைக்கு சொந்தக்காரனை அல்ல. மற்ற சுபக்கிரகங்களின் தயவு இருந்தால்தான் நீங்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியும். இங்கிருந்து அதிபலம் பெறும் செவ்வாய் லக்னத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகர் கடுமையான முன்கோபக்காரராகவும், முரட்டு சுபாவம் உடையவராகவும் இருப்பார். யோசிக்காமல் தான் எடுக்கும் முடிவுகளால் சிக்கல்களில் மாட்டிக் கொள்வார். அசட்டுத்துணிச்சல் இருக்கும். வாக்கு ஸ்தானத்தையும் செவ்வாய் பார்க்கும் நிலையில் கடுமையான பேச்சுக்களும் இருக்கும். குத்தலாகவும் பேசுவார். கேலியும் கிண்டலும் கூடவே பிறந்திருக்கும். கடினமனம் ஜாதகரின் சிறப்பு. மற்ற லக்னங்களுக்கு செவ்வாய் அளிக்கும் ருசக யோகம் நாளை பார்க்கலாம்... அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 🍃தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888,044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.🍃 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻