#🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🙏ஓம் முருக சரணம்🙏 #முருகன் #🕉️ஓம் முருகா வருடம் ஆனி மாதம் 09ம் நாள், 23-ஜூன்-26, செவ்வாய் கிழமை அங்காரகன் மங்களன் விரத நாளில்
பக்தவத்சலன் அசுரன் சூரபத்மனுக்கு அருளிய சூரசம்ஹாரன், கருணை பொழியும் அருளோடு, இம்மையில்
பரம சுகங்களை அனுபவித்து மகிழ்ச்சியோடு சக்தி வேலன் செந்தில் நாதன் செவ்வேள் பாலசுப்ரமணியன்
பத்ம பாதரவிந்தங்களில் இறுதியில் அடைக்கலம் தந்து அருளிட வேண்டி போற்றி பாடி
பக்தி பொங்கி நிரம்பிய மனதோடு வணங்கிடுவோம் வாரீர்
சங்கரன் அமர்ந்த கயிலைமலை ஒத்த செந்திலம்பதி வாழ்வே உன் உயர் கருணையாம் இன்பக்கடலில் மூழ்கி
உன்னை எனதுள்ளே அறியும் அந்த சொலற்கரிய வரம் அருள்வாயே சக்தி சிவ பாலனே சரணம் போற்றி
அந்தகன் எனை அடர்ந்து கரிய எருமைமேல் ஏறி பாசக்கயிறு வீசுமுன் அஞ்சல் என நீல மயிலேறி நீ அந்த
மறலியிடம் அடியேன் எனக்கு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிந்து அந்த காலபாசத்திலிருந்து எனை காப்பாற்றுவாயே
அலைவாய் கரையின்மீது அமர்ந்து மகிழ்வோடு அடியாருக்கு அருளும் எளிய பெருமாளே நிலையா
உடலை கருதி நெடுநாள் பொழுதும் அவமே போய், நிறை போய், செவிடு குருடாய், பிணிகள் நிறைந்து பொறிகள்
தடுமாறி மலம், சிறுநீர் சயனமிசை பெருகி மடியும்முன் உயரிய நெறி, நான்மறை போற்றும்
உன் மலர்த்தாட்கமலம் அருள்வாய்
பரமேஸ்வரன் தந்த அருள் பாலா அரி கேசவன் தன் மருகோனே திருசீர் அலை வாய் கரை அமர்ந்த பெருமாளே
கொங்கடம்பு கொங்கு பொங்கு பைங்கடம்பு தண்டை கொஞ்சும் உந்தன் பங்கய மலர் பாதங்கள் தருவாயே
கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) வீழ்ந்து படவும், அலைகடல் கொந்தளித்து அஞ்ச, வடிவேலெறிந்த அதிதீரா
உன்னிருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் துயர் களைவோனே, என் குறை தீர்த்து உன் பாதமலர் தருவாய்
🙏🦚🐓