🔹 பாதையில் இருக்கும் கல்லை அகற்றுவது மட்டுமே ஈமான் அல்ல
🔸 மனங்களில் இருக்கும் காயத்தை அகற்றுவதும் ஈமானின் ஒரு அழகான வெளிப்பாடு தான்.
🔹 நபிகள் நாயகம் ﷺ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பாதையிலிருந்து தீங்கை அகற்றுவது ஈமானின் ஒரு கிளை என்று கற்றுத் தந்தார்கள்.
🔸 ஆனால் சில தீங்குகள் நாம் நடக்கும் பாதையில் இல்லை
🔹 அவை சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில இதயங்களில் இருக்கும்.
🔸 நாமே அறியாமல் விட்டுச் செல்லும் ஒரு காயமாக இருக்கலாம்,
🔹 எல்லா தீங்கும் கல்லாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
🔸 எல்லா தீங்கும் முள்ளாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
🔹 சில தீங்குகள் ஒரு வார்த்தையாக
🔸 சில தீங்குகள் குரலின் கடுமையாக
🔹 சில தீங்குகள் கேலியாக
🔸 சில தீங்குகள் தேவையான நேரத்தில் கைவிடுதலாக
🔹 சில தீங்குகள் பார்வையால் ஒருவரை “நீ சிறியவன்” என்று உணர வைக்கும்,
🔸 மக்கள் சாதாரணம் என்று நினைக்கும் சில விஷயங்களால் இதயங்கள் மெதுவாக உடைந்து போகின்றன
🔹 சிலர் பல வருடங்கள் வாழ்கிறார்கள்
🔸 ஆனால் கோபத்தில் சொல்லப்பட்ட ஒரு வார்த்தையிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறார்கள்.
🔹 சிலர் எல்லோரிடமும் சிரிக்கிறார்கள்
🔸 ஆனால் உள்ளுக்குள் ஒரு உடைந்து போன நினைவானது மீண்டும் மீண்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
🔹 எனவே தான் உடைந்து போன மனதை ஆறுதல் கூறுவது ஒரு வணக்கமாக சன்மார்க்கத்தில் பார்க்கப்படுகிறது.
🔸 மென்மையாக நடப்பதும் ஒரு தர்மம்
🔹 பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது அதிகப்படியான ஒழுக்கம் என்று சொல்லப்படவில்லை,
🔸 மாறாக, அது நம் சன்மார்க்கத்தின் ஒரு பகுதி.
🔹 மனங்களில் இருக்கும் தீங்கை அகற்றுவது என்றால் ;
🔸 பேசுவதற்கு முன் நமது தாக்கத்தை நினைத்துப் பார்ப்பது
🔹 எல்லா இதயங்களும் ஒரே அளவு வலிமை கொண்டதல்ல என்பதை புரிந்து கொள்வது
🔸 எல்லோராலும் ஒரே வேகத்தில் காயத்திலிருந்து மீள முடியாது என்பதை உணர்வது
🔹 வாழ்க்கையானது நமக்கு கடுமையாக நடக்க வாய்ப்பையே கொடுத்தாலும் கூட
🔸 கருணையையே தேர்ந்தெடுப்பது.
🔹 பேசும் வார்த்தை மற்றவரை காயப்படுத்தும் என்றால்
🔸 அமைதியைத் தேர்ந்தெடுப்பது
🔹 மன்னிப்பு கேட்பது பலவீனம் அல்ல
🔸 ஏனெனில் அல்லாஹ்விடம் இதயங்கள் மலிவானவை அல்ல.
🔹 உண்மையான வலிமை பிறரை காயப்படுத்துவதில் இல்லை
🔸 காயப்படுத்தும் சக்தி இருந்தும் மன்னிப்பதில்தான் உள்ளது
🔹 உலகத்தை முழுவதும் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை
🔸 ஒருவரின் வேதனைக்கு நாம் ஒரு காரணமாக இல்லாமல் இருந்தாலே போதும்
🔹 மக்களிடம் மென்மையாக இருங்கள்
🔸 ஏனெனில் ஒவ்வொருவரும் யாரிடமும் சொல்லாமல் ஒரு போராட்டத்தை இதயத்தில் சுமந்துக் கொண்டிருக்கிறார்கள்
🔹 யா அல்லாஹ்
🔸 எங்களை யாரெனும் பார்த்தால், அவர்கள் இதயங்கள் அமைதி அடையும் மக்களாக எங்களை ஆக்குவாயாக
🔹 எங்கள் வார்த்தைகளால் மற்ற ஆன்மாக்களை மென்மையடையச் செய்வாயாக
🔸 எங்கள் வருகையால் நல்ல நினைவுகளை விட்டுச் செல்லச் செய்வாயாக
🔹 எவருக்கும் நாங்கள் வேதனையாக இருக்காமல் காப்பாயாக
🔸 உடைந்த இதயங்களை இணைக்கும் காரணமாக எங்களை ஆக்குவாயாக
🔹 நாயகத் திருமேனி ﷺ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கும், அவர்களின் புனித குடும்பத்தினருக்கும், அன்புத் தோழர்களுக்கும் அருள் மற்றும் சாந்தி உண்டாகட்டும்
🔸 ஆமீன்
بجاه سيد المرسلين صلى الله عليه وآله وصحبه وسلم 💞
#🤍💚அல்லாஹு 🌹அக்பர்💚🤍 #💚❤️அல்லாஹ் 🌹போதுமானவன் ❤️💚