ShareChat
click to see wallet page
search
🔹 பாதையில் இருக்கும் கல்லை அகற்றுவது மட்டுமே ஈமான் அல்ல 🔸 மனங்களில் இருக்கும் காயத்தை அகற்றுவதும் ஈமானின் ஒரு அழகான வெளிப்பாடு தான். 🔹 நபிகள் நாயகம் ﷺ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பாதையிலிருந்து தீங்கை அகற்றுவது ஈமானின் ஒரு கிளை என்று கற்றுத் தந்தார்கள். 🔸 ஆனால் சில தீங்குகள் நாம் நடக்கும் பாதையில் இல்லை 🔹 அவை சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில இதயங்களில் இருக்கும். 🔸 நாமே அறியாமல் விட்டுச் செல்லும் ஒரு காயமாக இருக்கலாம், 🔹 எல்லா தீங்கும் கல்லாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை 🔸 எல்லா தீங்கும் முள்ளாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 🔹 சில தீங்குகள் ஒரு வார்த்தையாக 🔸 சில தீங்குகள் குரலின் கடுமையாக 🔹 சில தீங்குகள் கேலியாக 🔸 சில தீங்குகள் தேவையான நேரத்தில் கைவிடுதலாக 🔹 சில தீங்குகள் பார்வையால் ஒருவரை “நீ சிறியவன்” என்று உணர வைக்கும், 🔸 மக்கள் சாதாரணம் என்று நினைக்கும் சில விஷயங்களால் இதயங்கள் மெதுவாக உடைந்து போகின்றன 🔹 சிலர் பல வருடங்கள் வாழ்கிறார்கள் 🔸 ஆனால் கோபத்தில் சொல்லப்பட்ட ஒரு வார்த்தையிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறார்கள். 🔹 சிலர் எல்லோரிடமும் சிரிக்கிறார்கள் 🔸 ஆனால் உள்ளுக்குள் ஒரு உடைந்து போன நினைவானது மீண்டும் மீண்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 🔹 எனவே தான் உடைந்து போன மனதை ஆறுதல் கூறுவது ஒரு வணக்கமாக சன்மார்க்கத்தில் பார்க்கப்படுகிறது. 🔸 மென்மையாக நடப்பதும் ஒரு தர்மம் 🔹 பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது அதிகப்படியான ஒழுக்கம் என்று சொல்லப்படவில்லை, 🔸 மாறாக, அது நம் சன்மார்க்கத்தின் ஒரு பகுதி. 🔹 மனங்களில் இருக்கும் தீங்கை அகற்றுவது என்றால் ; 🔸 பேசுவதற்கு முன் நமது தாக்கத்தை நினைத்துப் பார்ப்பது 🔹 எல்லா இதயங்களும் ஒரே அளவு வலிமை கொண்டதல்ல என்பதை புரிந்து கொள்வது 🔸 எல்லோராலும் ஒரே வேகத்தில் காயத்திலிருந்து மீள முடியாது என்பதை உணர்வது 🔹 வாழ்க்கையானது நமக்கு கடுமையாக நடக்க வாய்ப்பையே கொடுத்தாலும் கூட 🔸 கருணையையே தேர்ந்தெடுப்பது. 🔹 பேசும் வார்த்தை மற்றவரை காயப்படுத்தும் என்றால் 🔸 அமைதியைத் தேர்ந்தெடுப்பது 🔹 மன்னிப்பு கேட்பது பலவீனம் அல்ல 🔸 ஏனெனில் அல்லாஹ்விடம் இதயங்கள் மலிவானவை அல்ல. 🔹 உண்மையான வலிமை பிறரை காயப்படுத்துவதில் இல்லை 🔸 காயப்படுத்தும் சக்தி இருந்தும் மன்னிப்பதில்தான் உள்ளது 🔹 உலகத்தை முழுவதும் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை 🔸 ஒருவரின் வேதனைக்கு நாம் ஒரு காரணமாக இல்லாமல் இருந்தாலே போதும் 🔹 மக்களிடம் மென்மையாக இருங்கள் 🔸 ஏனெனில் ஒவ்வொருவரும் யாரிடமும் சொல்லாமல் ஒரு போராட்டத்தை இதயத்தில் சுமந்துக் கொண்டிருக்கிறார்கள் 🔹 யா அல்லாஹ் 🔸 எங்களை யாரெனும் பார்த்தால், அவர்கள் இதயங்கள் அமைதி அடையும் மக்களாக எங்களை ஆக்குவாயாக 🔹 எங்கள் வார்த்தைகளால் மற்ற ஆன்மாக்களை மென்மையடையச் செய்வாயாக 🔸 எங்கள் வருகையால் நல்ல நினைவுகளை விட்டுச் செல்லச் செய்வாயாக 🔹 எவருக்கும் நாங்கள் வேதனையாக இருக்காமல் காப்பாயாக 🔸 உடைந்த இதயங்களை இணைக்கும் காரணமாக எங்களை ஆக்குவாயாக 🔹 நாயகத் திருமேனி ﷺ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கும், அவர்களின் புனித குடும்பத்தினருக்கும், அன்புத் தோழர்களுக்கும் அருள் மற்றும் சாந்தி உண்டாகட்டும் 🔸 ஆமீன் بجاه سيد المرسلين صلى الله عليه وآله وصحبه وسلم 💞 #🤍💚அல்லாஹு 🌹அக்பர்💚🤍 #💚❤️அல்லாஹ் 🌹போதுமானவன் ❤️💚
🤍💚அல்லாஹு 🌹அக்பர்💚🤍 - அல்லால் யாருக்கு நலம் புரிய நாடுகின்றாரோ அவருக்கே அதிக துன்பங்களை தந்து ம்மை மறுமை இரண்டிலும் வெற்றி பெற வைக்கிறான்  OVASHA   அல்லால் யாருக்கு நலம் புரிய நாடுகின்றாரோ அவருக்கே அதிக துன்பங்களை தந்து ம்மை மறுமை இரண்டிலும் வெற்றி பெற வைக்கிறான்  OVASHA - ShareChat