YouTurn
759 views
23 hours ago
தவெக ஆட்சிக்கு வந்தவுடன், திருவாரூரில் உள்ள 33 தனியார் பள்ளிகளின் 120 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யட்டதாகக் கூறி வீடியோ ஒன்று பரப்பப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படுவதற்கு முன்பு, பள்ளி வாகனங்களை சோதனையிடுவது என்பது வழக்கமான நடைமுறை தான். இதற்கு முன்பும், கடந்த 2025 ஆண்டு மே மாதம், நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தது குறித்த வீடியோக்களை செய்திகளில் காண முடிகிறது. Proof: https://www.youtube.com/live/55yqFXDWkVo #youturn