youturn

59 Posts • 65K views
YouTurn
521 views 1 months ago
முந்தைய ஆட்சியில் காவலர் உயிரிழந்தால் ஒரு லட்சம் ரூபாய் தான் நிவாரணமாக வழங்கப்பட்டதா? பரவும் பொய்! “மணற்கொள்ளையை தடுக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் மகேஷ்குமாரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஜோசப் விஜய். ஆனால் இதற்கு முந்தைய ஆட்சியில் ஒரு லட்சம் ரூபாய் தான் நிவாரணமாக அறிவிக்கப்படும்” என தவெகவினர் பரப்பும் செய்திகள் தவறானவை. கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உடுமலைப்பேட்டை அருகே படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். இதே போன்று கடந்த 2024-ல், பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் உயிரிழந்தபோது, ரூ.25 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Proof: https://x.com/PttvNewsX/status/1952951674311721341 #🤔 Unknown Facts #youturn https://www.youtube.com/watch?v=DO8V_4zf4fk #factcheck | #youturn | #Solatium
15 likes
10 shares
YouTurn
715 views 2 months ago
திமுக ஆட்சியிலேயே செயல்படுத்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கான “Earned Leave Surrender” திட்டம்! வதந்தி பரப்பும் தவெகவினர்! பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத “Earned Leave Surrender” திட்டம், தவெக ஆட்சியில் தான் செயல்பாட்டுக்கு வந்தது எனப் பரவும் செய்திகள் தவறானவை. இது கடந்த 2025 ஆம் ஆண்டே செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்கள் தாங்கள் சேமித்து வைத்துள்ள விடுப்பில் (Earned Leave) ஒரு பகுதியை அரசிடம் ஒப்படைத்து (surrender), அதற்கான சம்பளத்தைப் பணமாகப் பெறும் வசதியே EL Surrender ஆகும். உதாரணமாக, ஒரு ஊழியரிடம் 100 நாட்கள் “Earned Leave” இருந்தால், அதில் 15 நாட்களை surrender செய்து அதற்கான சம்பளத்தை பணமாகப் பெறலாம். கொரோனா காலத்தில் ஏற்பட்ட கடுமையான நிதிச் சுமை காரணமாக, அதிமுக ஆட்சி காலத்தில், 27 ஏப்ரல் 2020 முதல் EL Surrender திட்டத்தை தமிழ்நாடு அரசு தற்காலிகமாக நிறுத்தியது. பின்னர் அந்தத் தடை திமுக ஆட்சியிலும் தொடர்ந்த நிலையில், 2025 பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில், அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, "Earned Leave Surrender" திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவித்தார். அதன்படி, அரசாணை (G.O. Ms. No.35, 30.06.2025) வெளியிடப்பட்டு, 01.10.2025 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். Proof: https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-budget-2025-earned-leave-surrender-system-restored-for-govt-employees/article69329492.ece #🤔 Unknown Facts #youturn https://tnebes.org/archive/2025/Jun/EL%20Surrender%20GO.pdf
11 likes
4 shares
YouTurn
487 views 2 months ago
சோலார் மின்உற்பத்தியில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதா? கடந்த 2024-25ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை தமிழ்நாடு உற்பத்தி செய்ததன் மூலம், அகில இந்திய அளவில் தொடர்ந்து 3-வது ஆண்டாக 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது தமிழ்நாடு. இதே போன்று மார்ச் 2025-ல் ஒன்றிய அமைச்சகத்தின் MNRE தரவின்படி, தமிழ்நாடு 24.58 GW சூரிய மின் திறனுடன் 3-வது இடத்தில் உள்ளது என்பதை அறிய முடிகிறது. Proof: https://www.hindutamil.in/news/tamilnadu/1358851-tamil-nadu-ranks-4th-in-solar-power-generation.html #youturn #🤔 Unknown Facts https://www.facebook.com/MNREMinistry/posts/pfbid0Sww4cQDN6yKFRpswGGiqEaaCi3h88U3o7bKA93qtJjRSwHo4wtCtaCAqPf8FiKAzl
11 likes
13 shares