YouTurn
715 views • 2 months ago
திமுக ஆட்சியிலேயே செயல்படுத்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கான “Earned Leave Surrender” திட்டம்! வதந்தி பரப்பும் தவெகவினர்!
பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத “Earned Leave Surrender” திட்டம், தவெக ஆட்சியில் தான் செயல்பாட்டுக்கு வந்தது எனப் பரவும் செய்திகள் தவறானவை. இது கடந்த 2025 ஆம் ஆண்டே செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள் தாங்கள் சேமித்து வைத்துள்ள விடுப்பில் (Earned Leave) ஒரு பகுதியை அரசிடம் ஒப்படைத்து (surrender), அதற்கான சம்பளத்தைப் பணமாகப் பெறும் வசதியே EL Surrender ஆகும். உதாரணமாக, ஒரு ஊழியரிடம் 100 நாட்கள் “Earned Leave” இருந்தால், அதில் 15 நாட்களை surrender செய்து அதற்கான சம்பளத்தை பணமாகப் பெறலாம்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட கடுமையான நிதிச் சுமை காரணமாக, அதிமுக ஆட்சி காலத்தில், 27 ஏப்ரல் 2020 முதல் EL Surrender திட்டத்தை தமிழ்நாடு அரசு தற்காலிகமாக நிறுத்தியது. பின்னர் அந்தத் தடை திமுக ஆட்சியிலும் தொடர்ந்த நிலையில், 2025 பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில், அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, "Earned Leave Surrender" திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.
அதன்படி, அரசாணை (G.O. Ms. No.35, 30.06.2025) வெளியிடப்பட்டு, 01.10.2025 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-budget-2025-earned-leave-surrender-system-restored-for-govt-employees/article69329492.ece #🤔 Unknown Facts #youturn
https://tnebes.org/archive/2025/Jun/EL%20Surrender%20GO.pdf
11 likes
4 shares