#ஏப்ரல்_21,
உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகள் தினம் இன்று.
உலகில் ஒவ்வொருவரும் தம்முடைய சொந்த படைப்பாற்றல் திறன் மற்றும் கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கு ஆபத்தில்லாத வகையில் வழங்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் கற்பனைத் திறன்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2002-ஆம் ஆண்டு முதல் 46 நாடுகளின் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் இணைந்து புதிய சிந்தனைகள், யோசனைகள், எல்லையற்ற படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பின் மூலமாக வளமான எதிர்காலம் மற்றும் உலக நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இத்தினம் ஏப்ரல்-21 நாளான இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் தாஜ்மகாலை உருவாக்கிய ஷாஜகான், கல்லணையை கட்டிய கரிகால் சோழன், ராஜஸ்தானின் அபு மலையில் உள்ள ஜெயின் தில்வாரா கோவில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில், தஞ்சை பெரிய கோவில், கடல் மற்றும் வானத்தின் நீல நிறத்திற்கு காரணமான ஒளிச்சிதறலை விளக்கிய சர். சி. வி. ராமன், பெரிய நட்சத்திரங்களின் வளர்ச்சி நிலையை ஆராய்ந்த சந்திரசேகர், கணித பகுப்பாய்வு, எண்கோட்பாடு, தொடர் பின்னங்கள் மற்றும் முடிவிலி தொடர்கள் போன்ற கண்டுடிபிப்புகளை வழங்கிய ராமனுஜம், உயிரியலில் ரிபோசோம்கள் பற்றிய ஆராய்ந்து நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் நம் நாட்டில் சிறந்த படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளை வழங்கியவர்களாவர்.
#life #lifes