இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 30/06/2026
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 310
வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் :
XI. 2. "இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்." (வெளி 14:5)
அன்பான தேவனுடைய பரிசுத்தவான்களே, சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவரோடு இருக்கும் ஆவியின் முதற்பலனைப் பெற்ற இவர்களில் மேலும் இரண்டு தேவனுடைய திவ்ய சுபாவங்கள் இருப்பதை இவ்வசனத்தில் காண்கிறோம்.
1. வாயில் கபடம் இல்லாதவர்கள்.
2. மாசில்லாதவர்கள்.
இவர்கள் வாயில் கபடம் (Guile) இல்லை என்பது, இவர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்கள் என்பதை அறிவிக்கிறது. "சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை: அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும் போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." (யோவான் 8:44) பொய் பேசுபவர்கள் அவனுடையவர்களாயிருக்கிறார்கள். தீட்டுள்ளதும், அருவருப்பையும், பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை. (வெளி 21:27). “பொய்யை விரும்பி அதின்ன்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்." (வெளி 22:15). இவர்கள் அனைவரும் சீயோனுக்குப் புறம்பே இருப்பார்கள் என்று அறிய முடிகிறது."இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ் செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சக நாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை.” (செப் 3:13).
“எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்." (சங் 32:2). “உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன் தானே. அவன் தன் நாவினால் புறங் கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்கு செய்யாமலும், தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்." (சங் 15:2,3). இவனே தேவனுடைய கூடாரத்தில் தங்க முடியும் என்று மேற்காணும் கர்த்தருடைய வசனங்கள் நமக்குப் போதிக்கின்றது.
சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவரோடே நிற்கும் மணவாட்டி சபையினரின் கடைசி திவ்ய சுபாவமானது. இவர்கள் மாசில்லாதவர்களாய் இருக்கிறார்கள் (without Blame), பரிசுத்தமான ஆட்டுக் குட்டியானவருடன் இவர்கள் காணப்படுவதின் இரகசியம் இது தான். "கறை திரை முதலானவைகள் ஒன்றும், இல்லாமல், பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக (எபே 5:27) தேவனை ஆராதித்தவர்களானபடியால், இயேசு மணவானன் தன் இரகசிய வருகையில் மணவாட்டி சபையாக சேர்த்துக் கொண்டார். ஆகையால் நித்தியத்தில் சீயோன் மலையில் மணவாளனாகிய ஆட்டுக்குட்டியானவரோடு நிற்கிறார்கள்.
இவர்கள் பாவமே செய்யாதவர்கள் என்பதல்ல. இவர்கள் பாவ மில்லாதவர்கள் என்றால் மீட்கப்பட வேண்டும் என்பதில்லையே. "உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்.” (ஏசா 1:18). “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி யாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப் பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.”(1 பேது 1:19). "வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்." (யூதா :24) என்ற கர்த்தருடைய திருவசனங்களின்படி கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்ட இவர்கள் மாசில்லாதவர்களாகி சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவரோடு நிற்கிறார்கள்.
கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர்,
I. ஆசீர்வாதம்
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
மதுரை,
இந்தியா,
(தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805)
Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n.
#🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்