#💪 தன்னம்பிக்கை to solve a problem?
நிறைய தன்னம்பிக்கை புத்தகங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் படிச்சாச்சு.
Core point, more or less same.
மகரிஷி அவர்களின் சிந்தனை சற்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும்.
Just a glance.
1) பிரச்னை குறுக்கிடும் போது மனம் தளரக் கூடாது.
2) நேர்வழியில் துணிவுடன் போராட வேண்டும்.
3) திறக்க முடியாத பூட்டே கிடையாது. சரியான சாவியைத் தான் கண்டு பிடிக்க வேண்டும்.
4) ஒரு பிரச்னையால் தவிர்க்க முடியாத துன்பம் வந்தால், தேவையற்ற வினைப் பதிவு கழிகிறது என்ற மனப்பக்குவம் தேவை.
5) பிரச்னை மனதில் எழும் ஆசைகளால் இருந்தால்,மனதில் எழும் ஆசைகனை யாராலும் அடியோடு ஒழிக்க முடியாது. மாறாக அதை சீரமைத்துக் கொள்வதே சரியான வழி.
6) பிரச்னை மற்றவர்களால் இருந்தால், அவர்களைக் குத்திக் காட்டுவது போல் அறிவுரை சொல்லக் கூடாது.தவறை உணர்ந்து திருந்தும் விதத்தில் அமைய வேண்டும்.
6) பிரச்னைக்காக, பிறர் மீது கோபம் கொள்ளும் போது, அந்தக் குறை தம்மிடம் இருக்கிறதா என்றும் சிந்திக்க வேண்டும்.
7) அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வுக்கு வழி வகுக்கும்.
தெளிவான சிந்தனைத் துளிகள்.
😊😊😊