பாவங்களின் 42 வகை. வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்
🔥. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.*
🔥. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.*
🔥. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.*
🔥. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.*
🔥. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.*
🔥. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.*
🔥. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.*
🔥. தருமம் பாராது தண்டிப்பது.*
🔥. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.*
🔥. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.*
🔥. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.*
🔥. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.*
🔥. ஆசை காட்டி மோசம் செய்வது.*
🔥. பொது வழியை மூடி அடைப்பது.*
🔥. வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது.*
🔥. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.*
🔥. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.*
🔥. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.*
🔥. நட்டாற்றில் கை நழுவுவது.*
🔥. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.*
🔥.கற்பிழந்த -வளோடு கலந்துறைவது.*
🔥. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.*
🔥. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.*
🔥. கருவைக் கலைப்பது.*
🔥. குருவை வணங்கக் கூசி நிற்பது.*
🔥. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.*
🔥. கற்றவர் தம்மிடம் கடுப்போடு நடப்பது.*
🔥. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.*
🔥. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.*
🔥. ஊன் சுவை உண்டு உடல் வளர்ப்பது.*
🔥. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.*
🔥. அன்புடைய -வர்க்குத் துன்பம் செய்வது.*
🔥. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.*
🔥. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.*
🔥. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.*
🔥. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.*
🔥. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.*
🔥. சிவனடியாரைச் சீறி வைவது.*
🔥. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.*
🔥. சுத்த ஞானியரைத் தூஷணம் செய்வது.*
🔥. தந்தை தாய் மொழியைக் தள்ளி நடப்பது.*
🔥. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.*
🙏🙏🙏
#🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏 #சிவன #சிவ #சிவ சிவ #சிவ சிவ