#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
*________﷽________*
*السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ*
*இறைவனின் சாந்தியும், கருணையும், உங்கள் மீது உண்டாவதாக.......*
*بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان*
*امين امين يارب العالمين!*
💖💖💖💖💖💖💖💖💖
*இனிய இரவு வாழ்த்துகள்!*
*╔═══🌻⊰⊱⊰🌹⊱⊰⊱⁶🌻═══╗*
*மனதை ஒரு முகப்படுத்துங்கள்!*
✶⊶⊷⊶⊷❍⊶⊷⊶⊷✶❍⊶⊶⊷⊶⊷❍
உயிரியல் பேராசிரியர் மீன் தொட்டியில் இருந்து ஒரு மீனை எடுத்து அந்த மாணவன் முன் வைத்து அதை மிக நுணுக்கமாகக் கவனித்து தன்னிடம் விளக்கமாகச் சொல்லச் சொல்லி விட்டு வெளியே போய் விட்டார்.
அந்த மாணவன் பல முறை பல விதமான மீன்களைப் பார்த்தவன்.
இந்த மீனோ மிக சாதாரணமான மீன். இதைக் கவனித்து விளக்கமாகச் சொல்ல என்ன இருக்கிறது என்று எண்ணினான்.
ஆனாலும் அவர் சொல்லியபடி அந்த மீனைக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டான்.
மீனின் கண்கள், வால் பகுதி, வாய், செதிள்கள்,
பக்க வாட்டில் துடுப்பு போன்ற பகுதி என்று எல்லாவற்றையும் கவனித்து எழுதினான்.
சிறிது நேரத்தில் எல்லாம் அறிந்தாகி விட்டதாக நினைத்து வெளியே வந்து ஆசிரியரைத் தேடினான்.
அவரைக் காணவில்லை.
மறுபடி உள்ளே வந்தவன் பொழுது போகாமல் அந்த மீனை வரைய ஆரம்பித்தான். வரையும் போது அந்த மீன் குறித்து இதற்கு முன் கவனிக்காத சில அதிகப்படியான தகவல்களை அவன் அறிந்தான்.
அதையும் குறித்துக் கொண்டான்.
பல மணி நேரம் கழித்து வந்த ஆசிரியரிடம் தன் குறிப்புகளைக் காட்டினான்.
அவர் திருப்திய
டையவில்லை. இன்னும் நன்றாகவும் நுணுக்கமாகவும் கவனிக்கச் சொல்லி விட்டுப் போனார்.
மாணவனுக்கு ஒரே ஏமாற்றம்.
இந்த ஆளிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று நொந்து கொண்டான். ஆனாலும் மேலும் நுணுக்கமாக அதைக் கவனிக்க ஆரம்பித்தான்.
இதற்கு முன் சாதாரணமாகத் தெரிந்த ஓரிரு விஷயங்கள் இப்போது மிக நுண்ணிய அளவில் வித்தியாசமாக இருக்கக் கண்டான். அவற்றைக் குறித்துக் கொண்டான்.
அந்த நாளின் இறுதியில் மறுபடி வந்த ஆசிரியரிடம் அவற்றைக் காட்டினான். அப்போதும் அவர் திருப்தியடைய
வில்லை.
அது போல் மூன்று நாட்கள் அவனை அந்த மீனைக் கவனிக்க வைத்தார்.
மூன்று நாட்களின் இறுதியில் அவன் மேலும் மேலும் கவனித்து அந்த மீனின் தனித் தன்மைகளாக பல பக்கங்கள் எழுதியிருந்தான்.
அந்த மாணவன் பிற்காலத்தில் சிறந்த உயிரியல் வல்லுனராகப் புகழ் பெற்ற போது கூறினான்.
”நான் என் வாழ்க்கையில் கற்ற அந்த முதல் பாடம் தான் கற்ற எல்லாப் பாடங்களிலும் உயர்ந்ததென்று இப்போதும் நினைக்கிறேன்.
அதுவே பிற்காலத்தில் நான் அறிந்த அத்தனை அறிவுக்கும் காரணமாக இருந்தது. வேறு வகைகளில் யாரும் பெற முடியாத, பெற்ற பின் இழக்க முடியாத சிறந்த பாடமாக அதைச் சொல்லலாம்”.
பிரபல விஞ்ஞானியான ஐசக் நியூட்டனும் தான் அறிவியல் இரகசியங்களை அறிந்த விதமாக இதையே கூறுகிறார். “நான் அறிய வேண்டிய விஷயத்தைக் குறித்தே தினமும் என் கவனத்தில் வைத்திருப்பேன்.
சிறிது சிறிதாக உண்மைகள் விளங்கும்.
ஒரு நாள் எல்லாம் தெளிவாகத் தெரியும்.” இதையே மற்ற பெரும்பாலான விஞ்ஞானிகளும் அனுபவபூர்வமாகக் கூறுகிறார்கள்.
மனதை நாம் தேர்ந்தெடுக்கும் பொருளில் நூறு சதவீதம் கவனிக்க வைத்தல் தான் ஒருமுனைப்
படுத்துதல்.
குரங்கு போல் தாவும் மனதைக் கடிவாளம் இட்டு இழுத்துப் பிடித்து,
நமக்கு வேண்டியதில் ஒருமுனைப்
படுத்துதல் மன உறுதியும்,
ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
சுவாரசியமில்லாத பொருள்களிலும், சுவாரசியமில்லாத விஷயங்களிலும் தொடர்ந்து கவனத்தைக் குவிப்பதால் என்ன நன்மை விளைந்து விடும் என்று சந்தேகத்துடன் கேட்காதீர்கள்.
இந்தப் பயிற்சியில் நாம் எடுத்துக் கொள்ளும் பொருளோ, விஷயமோ முக்கியமல்ல.
உடலின் பகுதிகளை உடற்பயிற்சி செய்து பலப்படுத்துவது போல மனதின் திறன்களைப் பலப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமும், பயனும்.
மனம் நம் கருவியாக இருந்து நாம் விரும்பும் இடத்தில் குவிகிறது என்கிற அளவிற்கு பழக்கப்படுத்திக் கொண்டால் அது
பல பெரும் சக்திகள் அடங்கிய பொக்கிஷத்தைத் திறக்க உதவும் சாவியாக மாறும்.
எனவே இந்தப் பயிற்சியைத் தவறாமல் செய்து பாருங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் அதில் மனதைக் குவிக்கும் நேரத்தை நாளுக்கு நாள் அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள்.
ஆரம்பத்தில் போரடித்தாலும் நீங்கள் தொடர்ந்து செய்து ஒன்றைப் பற்றி புதிது புதிதாக போகப் போக அறியும் போது தானாக அதில் ஈடுபாடும், ஆர்வமும் பிறக்கும்.
💐 🌹 🌻 💐 🌹 🌻 💐 🌹 🌻
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் இன்று இரவு உறங்கி காலையில் சுபுஹுக்கு எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
இனிய கனவுகளுடன் இரவு இதமாகட்டும்...
*இந்த இரவு இனிதாகட்டும்*
தொகுப்பு...
*S.S.ஷேக் ஆதம் தாவூதி*
*No : 02 கடலங்குடி*
*மயிலாடு துறை*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹