பாமாலை⚜️🦚...!*
*பாடல்:22..!*
பாரதிப் பாடல் - தாழைமடலாக தணிகைச் செல்வன் அடிகளில்:
வேடர் கனியை விரும்பியே தவ
வேடம் புனைந்து திரிகுவான் ... தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே முனி
நாதனுக்கு இன்மொழி கூறுவான் ... சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட இருள்
பார மலைகளைச் சீருவான் ... மறை
ஏடு தரித்த முதல்வனும் குரு
என்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.
*பொருள்:*
வள்ளிக்காக தவவேடம் புனைந்தவன் தமிழின் புகழ் விளங்க அகத்தியருக்குத் தமிழ் கற்பித்தவன் தேவர்கள் துயர் தீர மலையான அசுரனை வீழ்த்தியவன் வேதனாகிய பிரமனும் குரு எனப்பணியும் புகழ் மிக்கவன் யார்? முருகக்கடவுள்தான்!
*மலரும்...*
🟨🔷🟨🔷🟨🔷🟨🔷🟨🔷🟨🟨🔷🟨🔷🟨🔷🟨🔷🟨🔷🟨
#murugan pamaalay