#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடியில் மாநில அளவிலான கைப்பந்தாட்டப் போட்டி
தூத்துக்குடி, மே. 10
தூத்துக்குடி சிஎம்என் ஆண்கள் கைப்பந்து கிளப் நடத்தும் 2 ஆம் ஆண்டு கைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கைப்பந்து கழக தலைவர் உதயசங்கர் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான போட்டி சின்னமணிநகர் சிஎம்என் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவிற்கு கவுன்சிலர் சந்திரபோஸ் தலைமை வகித்தார்
கவுன்சிலர் பொன்னப்பன் முன்னிலை வகித்தார்.
சிஎம்என் ஆண்கள் கைப்பந்து சங்க தலைவர் ராஜா வரவேற்று பேசினார்.
போட்டியை பிஎஸ் டிஸ் தொழிலதிபர் வேல் சங்கர் துவக்கி வைத்து பேசுகையில் போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்களுக்கும் ஊக்குவித்த அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். மேலும் விளையாட்டு போட்டிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பேன் என பேசினார்.
நிகழ்வில் சிஎம்என் ஆண்கள் கைப்பந்து கிளப் செயலாளர் சச்சின் பெல், பொருளாளர் அருண்குமார், துணைத் தலைவர்கள் மணிகண்டன், அஸ்வின்குமார், துணை செயலாளர்கள் பாலகணேஷ், மோகன்குமார், கெளரவ ஆலோசகர்கள் ரமேஷ் கார்த்திக்கேயன், காளிராஜன், தனபால், முருகேசன், ரமேஷ்,,புஷ்பராஜ், லெனின் பெல், கார்த்திக்குமார் உட்பட விளையாட்டுவீரர்கள் கலந்து கொண்டனர்.