ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
661 views
4 days ago
ஹாங்காங்கைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த இரண்டு வாரங்களாகக் கடுமையான மலச்சிக்கல் பாதிப்பு இருந்துள்ளது. சம்பவத்தன்று அவர் கழிவறைக்குச் சென்றபோது, மலம் கழிக்க அதிக முயற்சி செய்து முக்கியுள்ளார். அதன் பிறகு வெளியே வந்த அவர், கடந்த 10 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கையில் நடந்த எந்த விஷயத்தையும் நினைவுகூர முடியாமல் தவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. சுமார் 8 மணிநேரம் அந்தப் பெண்ணால் கடந்த கால நிகழ்வுகளைச் சிறிதும் யோசிக்க முடியவில்லை. ஆனால், அதன் பிறகு மெல்ல மெல்ல அவரது நினைவாற்றல் தானாகவே திரும்பியது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த 8 மணிநேரம் அவர் எங்கு இருந்தார், என்ன செய்தார் என்பது அவருக்கு இன்றுவரை நினைவில் இல்லை. இந்த வினோத பாதிப்பிற்கு மருத்துவ ரீதியாக 'ட்ரான்சியன்ட் குளோபல் அம்னீசியா' (Transient Global Amnesia) என்று பெயர். இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், மலம் கழிக்க அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும்போது, அது மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்தத் திடீர் அழுத்தத்தினால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் கலந்த இரத்த ஓட்டம் சில நொடிகள் தடைபடக்கூடும். இதனால் மூளையின் நினைவாற்றல் பகுதி பாதிக்கப்பட்டு, தற்காலிகமாகத் தகவல்களைச் சேமிக்கவோ அல்லது பழைய நினைவுகளை மீட்கவோ முடியாமல் போகிறது. மேலும் இதுபோன்ற பாதிப்புகள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றாலும், மலச்சிக்கல் போன்ற சாதாரணப் பிரச்சனைகளைக் கூட கவனிக்காமல் விட்டால் இத்தகைய வினோத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். #புரியாத புதிர்🌷 #மருத்துவ குறிப்பு #விழிப்புணர்வு எச்சரிக்கை பதிவு