#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் பற்றி பிறருக்குத்
தெரியுமா? தெரியாதா?
தன்னைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள்? என்பதைப் பற்றிக் கவலைப்படாதவன்.
தன்னை தனக்கு மட்டும்
பிடித்தால் போதுமென்று,
போலியாக இல்லாமல், உண்மையாக வாழ்பவன்...
அடுத்தவர்களை திருப்திபடுத்த நினைக்காதவன்..
முதுகுக்குப் பின்னால் பேசுபவர்களைப் பற்றி கவலைப்படாதவன்..
பொய்களைப் பேசாமல் ,
மற்றவர்களை ஏமாற்றாமல்,
தீயசெயல்களை செய்யாமல் இருப்பவன்..
எல்லோரிடமும் பாரபட்சமின்றி,
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி..
விருப்பு வெறுப்பின்றி,
எல்லோரிடமும் அன்பு கருணை கொண்டவன்..
அடுத்தவர்களுக்குப் பிடிக்கவில்லை, என்பதற்காக தன் சுயத்தை இழக்காதவன்..
அடுத்தவர்களுக்கு பயப்படாமல்,
படைத்தவனுக்கு மட்டுமே பயந்து வாழ்பவன்..
போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் கலங்காதவன்..
அற்ப விஷயங்களில் மயங்காதவன்..
எண்ணம் சொல் செயல் மூன்றாலும்,அன்பு கருணை நேர்மையுடன்,மகிழ்ச்சியான மனதை உடையவன்..
அவன் தான்,
தன்னை உணர்ந்து
கடவுளை உணர்ந்து
ஆனந்தமாக வாழ்கிறான்.. உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள் சொல்லும் சொல் உயிர் பெற்று விடும். அது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும்.
சந்தோஷம் எப்பொழுதும் நம்மை சார்ந்ததாக இருக்க வேண்டும். மாறாக, பிறரைச் சார்ந்து இருக்கும் போது தான் நாம் அவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவோ அடிமையாகவோ இருக்க வேண்டி வரும்.
துன்பம் யாரையும் துரத்துவது இல்லை. துன்பத்தை நாம் தான் ஏற்படுத்திக் கொள்கின்றோம்.
வாழ்வில் மகிழ்ச்சிக்காக எதையும் தேடிப் போகணும்னு அவசியமே இல்லை. தேவையற்றதை விலக்கி வைத்தாலே போதுமானது.
அடைந்ததெல்லாம் வெற்றியும் இல்லை, இழந்ததெல்லாம் தோல்வியும் இல்லை. நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால் இழந்த எல்லாம் காலடி தேடி வரும்.
நல்எண்ணங்களுடன் இனிதே ஆரம்பமாகட்டும் இந்த நாள்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன் 😊😊😊