King
497 views
12 hours ago
AI indicator
https://www.facebook.com/share/18qFciAqoP/ 24-07-2011அன்று கோவையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் அன்றைய பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் பேசியது: "நான் தி.மு.கழகத்தவன் என்ற முறையில் அரசியல்வாதி தான். ஆனால், கலைஞரைத் தவிர இன்னொருவரை இந்த நாட்டிற்கு வழிகாட்டியாக ஏற்றுக்கொள்பவன், தமிழ்நாட்டினுடைய எதிர்கால நன்மையைக் காப்பாற்றக்கூடியவனாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தவன். அவருடைய மதிநுட்பம், அசருடைய எழுத்து, பேச்சு, அவருடைய அறிவு, ஆற்றல் இவைகள் காரணமாகத்தான், இந்த அளவாவது, பெரியார், அண்ணா ஆகியோருடைய கொள்கைகள் கோட்பாடுகள் காப்பாற்றப்படக்கூடிய ஒரு தட்பவெட்ப நிலை - ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டிலே இருக்கிறது. ஆரியம் என்னதான் தந்திரமாக வஞ்சகமாக சூழ்ச்சியாக நம்மை வீழ்த்த எண்ணினாலும் கூட அதை எதிர்த்து நிற்கக் கூடிய ஓர் ஆற்றல் - அந்தச் சூழ்ச்சியைக் கண்டுகொள்ளக்கூடிய ஆற்றல் - அந்த வசஞ்சகத்தை வளைத்து மறுபடியும் வீழ்த்தக்கூடிய ஒரு ஆற்றல் - பெருமையாக நான் சொல்லுகிறேன், தந்தை பெரியாரே மறுபடியும் வந்துயிர்த்தாலும்கூட, கலைஞர் தன்னைவிடத் திறமையாகப் பணியாற்றுகிறார் என்று சொல்லக்கூடிய ஆளவிற்கு கலைஞர் இந்த சமூகத்திற்கு ஒரு வரமாகக் கிடைத்திருக்கின்ற காரணத்தால் தான், அவர் தான் கழகம், அவர் தான் திராவிட இயக்கம், அவர் தான் தமிழகத்தைக் கப்பாற்றக்கூடிய ஆற்றலாளர் என்று நான் பேசுகிறேனே தவிர வேறு காரணத்தினால் அல்ல." - பேராசிரியர் அன்பழகன், மேனாள் அமைச்சர், மேனாள் பொதுச்செயலாளர் - திமுக #KalaignarForever #,Mr.UDHAYANITHI STALIN, திரு .உதயநிதி ஸ்டாலின் அவர்கள் # #தெரிந்துகொள்வோம் # #💪தி.மு.க