#✡️ஜோதிட பரிகாரங்கள் இன்று 13.04.2026.. ஏகாதசி விரதம்
எவ்வளவு பெரிய துன்பத்தையும் விரட்டும் ஏகாதசி விரதம்.
ஒரு காலத்தில் அம்பரீஷன் என்பவன், இப்பூமண்டலத்தின் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்து வந்தான். அவன் ஏகாதசி விரதத்தை தவறாது கடைபிடித்து வந்தான்.
ஒருமுறை, ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசி சமயத்தில், யமுனைக்கரையில் கோபக்கார துர்வாச முனிவரை அவன் சந்தித் தான். அவருக்கு பாதபூஜை செய்து, அவரையும் தன்னோடு உணவு உண்ண வரும்படி அழைத்தான்.
யமுனையில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்ற முனிவர், நீண்டநேர மாகியும் வரவில்லை. அம்பரீஷனின் ஏகாதசி விரத பலனை பங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்,இவ்வாறு அவர் செய்தார்.
செய்வதறியாது திகைத்த அம்பரீஷனிட ம் அங்கிருந்த மற்ற ரிஷிகள், "அம்பரீஷா துளசி தீர்த்தத்தையாவது சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொள். துர்வாசரை விட்டு உணவு உண்பது தான் தவறு. தீர்த்தம் அருந்துவதால் குற்றமில்லை,” என்று ஆலோசனை கூறினர்.
அம்பரீஷனும் துளசி தீர்த்தத்தை அருந்தி னான். துர்வாசரும் வந்து சேர்ந்தார்.
தன்னை எதிர்பார்க்காமல் அம்பரீஷன் மட்டும் துளசி தீர்ததம் உண்டதைக் கேட்டு கோபம் கொண்டார். தன் சடைமுடி ஒன்றை அம்பரீஷன் மீது ஏவி விட்டார்.
அது பயங்கர பூதமாகமாறி அம்பரீஷனை த் துரத்தியது. .அப்போது, மகாவிஷ்ணு அந்தப் பூதத்தின் மீது, தன் சுதர்சனச் சக்கரத்தை வீசி எறிந்தார். அச்சக்கரத்தி ன் வெப்பம் தாங்காமல் பூதம் எரிந்து சாம்பலானது.
அதோடு மட்டுமில்லாமல் துர்வாசரையும் துரத்தியது. துர்வாசர் பாற்கடலுக்கு ஓடி மகாவிஷ்ணுவிடம் தன்னை மன்னிக்கு மாறு முறையிட்டார்.
"துர்வாசரே! யாரொருவர் பக்தியோடு ஏகாதசி நாளில் என்னைக் குறித்து விரத ம் இருக்கிறார்களோ, அவர்களுடைய இதயத்தில் நான் குடியிருக்கிறேன் அவர் களை காப்பது என் கடமை. அம்பரீஷனிட ம் மன்னிப்பு கேளுங்கள். அப்படியானால் தான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள்,” என்றார்.
துர்வாசரும் அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியதோடு, அவனு டன் உணவு அருந்தி, பல வரங்களையும் தந்து விட்டு கிளம்பினார். ஏகாதசி விரத மிருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத் தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களா கத் திகழ்வார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
ஓம் நமோ நாராயணாய 🙏🙏
13.04.2026... நேசமுடன் விஜயராகuவன்....
#🙏பெருமாள் #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஏகாதசி🕉️