#muga moodi manithargal.
_*உதட்டில் புன்னகை*_
_*உள்ளத்தில் வஞ்சம்*_
_கண்களில் கனிவு_
_கருணையில்லா இதயம்,_
_*உதவிடும் கரங்கள்*_
_*நெஞ்சமதில் வெறுப்பு*_
_பாசம் வெளியே_
_மோசம் உள்ளே_
_*மெய்யாய்ப் பழகிடுவர்*_
_*மேனியெங்கும் பொய்மையே*_
_இனித்திடப் பேசிடுவர்_
_நஞ்சை விதைத்திடுவர்_
_*வாக்குகள் தந்திடுவர்*_
_*வஞ்சனை செய்திடுவர்*_
_நேசமாய் நெருங்கிடுவர்_
_நெருப்பைத் தெளித்திடுவர்_
_*உள்ளொன்று வைத்து*_
_*புறமொன்று உரைத்திடுவர்*_
_வாஞ்சையுடன் அரவணைத்திடுவர்_
_அக்னியாய்க் கொதித்திடுவர்_
_*முகமூடி மனிதர்கள்*_
_*மூர்க்கமான குணத்தவரே*_
_செய்நன்றி மறந்திடுவர்_
_சேற்றை வாரி பூசிடுவர்_
_*நல்லவனாய் நடித்திங்கு*_
_*நாசமதை விளைவிப்பர்*_
_கவனமாய் இருந்திட்டால்_
_கணநேரமும் துன்பமது அணுகிடாதே_