Islamic Way ❤️ Of Life
1.1K views
21 days ago
"அரஃபா ❤️💐 1.அல்லாஹ் புகழ்ந்து பேசுகிறான் அபூஹுரைரா மற்றும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் போன்றோர் அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா அரஃபா தினத்தின் மாலையில் அரஃபாவிற்கு வந்திருக்கக்கூடிய மக்களை குறித்து மலக்குமார்களிடம் புகழ்ந்து பேசுகிறான். "எனது மலக்குமார்களே! எனது அடியார்களை நோக்கி பாருங்கள். அவர்களில் அந்தஸ்த்து உள்ளவர்கள், அந்தஸ்து இல்லாதவர்கள் என அனைவரும் பரட்டை தலையுடையவர்களாகவும், புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளார்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான் என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள். நூல்: (முஸ்னத் அஹ்மத்) 2. நரக விடுதலை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'அல்லாஹ் தபாரக வ தஆலா அதிக அதிகமாக தனது அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யக்கூடிய தினம் அரஃபா தினத்தை விட வேறு தினம் இருக்க முடியாது' என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள். நூல்: (ஸஹீஹ் முஸ்லிம்) 3. சிறந்த துஆ அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'துஆக்களில் மிகவும் சிறந்த துஆ அரஃபா தினத்தில் செய்யப்படக்கூடிய துஆ நானும் எனக்கு முன் வந்த நபிமார்களும் கூறிய கூற்றுகளில் மிகச் சிறந்த கூற்று லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் ஆகும் என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள். நூல்: (திர்மதி முஸ்னத் அஹ்மத்) அஷ் ஷெய்க் அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ் இதை ஹஸன் என்று கூறியுள்ளார்கள். 4. அரஃபா தினம் நோன்பு வைப்பதன் சிறப்பு [ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள், "அரஃபா தினத்தன்று நோன்பு வைப்பது முன்சென்ற வருடத்திலும் பின் வரக்கூடிய வருடத்திலும் நிகழ்ந்து விடுகின்ற பாவங்களுக்கு பரிகாரமாக இருக்கின்றது" என்று கூறினார்கள். நூல்: ஸஹீஹ் முஸ்லிம்] 5. அரஃபா தினம் - மார்க்கம் பரிபூரணமாக்கப்பட்ட தினம் அரஃபா தினம் என்பது இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு தினமாக இருக்கிறது. அன்றைய தினத்தில் தான் அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா இஸ்லாமிய மார்க்கத்தை பரிபூரணப் படுத்தி கொடுத்தான். "சுப்ஹானல்லாஹ் ❤️✨ தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் இறுதி நாளான துல்ஹஜ் பிறை 13 அஸர் தொழுகை வரைக்கும் கூறுதல் வேண்டும். இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்…. நூல்: புகாரி 4/123. #islam #அரஃபாதினம் #அரஃபா நோன்பின் சிறப்பு #arafahday

More like this