*ஜூன் 21,*
*உலக யோகா தினம்*
5000 ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டின் ரிஷிகளும் முனிவர்களும் யோகக் கலையை உருவாக்கி அதனைத் தங்கள் வாழ்க்கை முறையாகக் கடைபிடித்தனர்.
தொடர்ந்து யோகப் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நோய்களால் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமான உடல்நிலை மற்றும் அமைதியான மனநிலையுடன் வாழ்ந்தனர்.
அத்தகைய யோகக்கலையின் சிறப்பையும் பயன்களையும் உலகில் அனைவருக்கும் உணர்த்தி அனைவரும் அதனைப் பின்பற்றும் வகையில் ஜூன் 21ம் நாளை உலக யோகா தினமாக அனுசரிக்க வேண்டும் என பாரதம் ஐ.நா. சபையில் செப் 2014 ல் தீரமானத்தை முன் மொழிந்தது.
ஐநா வின் 177 உறுப்பு நாடுகள் தாங்களும் அந்த தீர்மானத்தை முன்மொழிவதாக முன்வந்து ஆதரித்தன.
அத்தீர்மானம் ஐ.நா. சபையால் ஏக மனதாக ஏற்கப்பட்டு அதன் படி 2015 முதல் உலகெங்கும் 193 நாடுகளில் ஜூன் 21 உலக யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.
#😎வரலாற்றில் இன்று📰