💙 kalai 💙
559 views
22 hours ago
ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்திருப்பது என்று சொல்லப் படலாம்.ஆனால் நான் ஏற்கெனவே சொன்ன படி இப்போதிருக்கும் தவெக வின் ஆட்சியே திமுக வின் தயவில் இருப்பது போலத் தான் தெரிகிறது.தவெக அரசுக்கு ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகள்&விசிக ஆகியவை ஸ்டாலினின் வார்த்தையை மீறாதவை. "நாங்கள் இப்போதும் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்" என்று அவை வெளிப்படையாகவே சொல்கின்றனவே?ஆக இது ஸ்டாலினுக்கு விஜய் நன்றி தெரிவிக்கும் சந்திப்பாகவும் பரஸ்பரப் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும் சந்திப்பாகவும் இருக்கக் கூடும். இதைப் பார்த்துக் கொண்டு அண்ணாமலை சும்மா இருப்பாரா என்ன? "டிரான்ஸ்பார்மர் கொள்முதல்' விவகாரத்தை சிபிஐ விசாரிப்பதான வழக்கின் மீதான மேல்முறையீட்டை திரும்பப் பெறுமாறு விஜய் தலைமையிலான அரசுக்கு அறிவுறுத்துகிறார்.அதாவது திமுக வையும் தவெக வையும் "சிண்டு முடிந்து" விடுகிறார் அண்ணாமலை. இந்த அறிவுறுத்தலைப் பழனிச்சாமி ஏன் செய்யவில்லை? மின்சாரம் தொடர்புடைய விவகாரங்கள் மகாபாரதக் கதைகளைப் போல் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை.அதிமுக வை இழுத்து விடும் படியான விவகாரங்களும் உண்டு.ஆக இது பற்றி அவர் வாயைத் திறக்கவே மாட்டார். இப்போது திமுகவுக்கு எதிராக நடைபெறும் வழக்கை முடுக்கி விடும் வேலையைச் செய்வாரா விஜய்?அவர் இந்த விசயத்தில் வழக்கம் போல் மௌனமாக இருந்து விடவும் முடியாது.அண்ணாமலை விட மாட்டார். அமெரிக்காவிலிருக்கும் போதே இப்படி "டார்ச்சர்" செய்கிறாரே, தமிழகத்துக்குத் திரும்பிய பின் இன்னும் என்னென்ன செய்வாரோ? தமிழகத்தில் கடந்த காலத்தில் நடந்ததை விடவும் எதிர்வரும் காலத்தில் அண்ணாமலையின் அரசியல் மிகவும் பரபரப்பாகவும் சாதுர்யம் நிறைந்ததாகவும் இருக்கும் என்றே அடியேனுக்குத் தோன்றுகிறது. அண்ணாமலைக்குக் கட்டம் கட்டி விட்டோம், அவர் கதை முடிந்தது, இனி அவர் ஆடு மேய்க்கப் போய் விடுவார் என்பது போல் பழனிச்சாமி கூட்டமும் ஸ்டாலின் கூட்டமும் கொக்கரித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவர் பேசுவதைப் பார்த்தால் அவர் இனிமேல் தான் தீவிரமான ஆட்டத்தைத் துவக்கப் போவது போலத் தெரிகிறது. *** சிவனே ..சம்புலிங்கா K Shanmugananda🤟🤘 #தமிழக தேர்தல் களம் 2026