𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
881 views
18 days ago
#🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 ஹனுமானின் பலத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட ராவணன்...!! ஆஞ்சநேயருக்கும் ராவணனுக்கும் இடையில் ஒரு பயங்கரமான போர் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் ராவணன். ஹனுமனை தனது பலமான கைகளால் பிடித்து... “ஏய் குரங்கே, நீ என் லங்கையை தீ வைத்தாயே... இன்று உன் இரு கைகளையும் முறித்து, இனிமேல் நீ பறக்க முடியாத படி செய்வேன்” என்று சொல்கிறான். ஹனுமான் அவன் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அப்போது ராவணன், “நான் மஹா சிவபெருமானின் பரம பக்தன்; என் கைகளிலிருந்து தப்பிப்பது சாத்தியமில்லை” என்று பெருமையாகச் சொல்கிறான். ஆனால் ஹனுமான் தனது பேராற்றலை பயன்படுத்தி, ராவணனை வலுவாக ஒரு அடி கொடுக்கிறார். அந்த அடியால் ராவணன் ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டு தரையில் விழுகிறான். அப்போது ஹனுமான் தைரியமாக, “இப்போது ஸ்ரீ ராமனின் பரம பக்தனின் சக்தி என்ன என்பதைப் பார்!” என்று சொல்லி, மீண்டும் தனது பஞ்சத்தால் ராவணனை பலமாக தாக்குகிறார். அந்த தாக்குதலால் ராவணன் நூறு யோஜனை தூரம் தூக்கி எறியப்படுகிறான். சிறிது நேரம் கழித்து, ராவணன் எழுந்து நின்று ஆச்சரியத்துடன், “ஹனுமா, நீ இவ்வளவு சக்தியானவன் என்றால், ஏன் அந்த சாதாரணமான வன வாசி ராமனுக்கு சேவை செய்கிறாய்?” என்று கேட்கிறான். அதற்கு ஹனுமான் பதிலளிக்கிறார்: “ராவணா! ஸ்ரீ ராமனின் பக்தனான என்னுடைய சக்தியே இப்படியிருக்கிறது என்றால், என் பிரபுவின் சக்தி எவ்வளவு இருக்கும் என்று நீயே நினைத்துப் பார்" ஶ்ரீ ராம ஜெயம்... Jai Shri Ram 🚩 ஶ்ரீ ராம ஜெயம்...