Arunachalam
723 views
3 days ago
பூமிக்கு அடியில் நூற்றுக்கணக்கான அடி ஆழம்... நவீன செயற்கைக்கோள்களின் கண்களுக்கே புலப்படாத ஒரு பிரம்மாண்ட நகரம். அது வெறும் மண் அல்ல, மேலை நாடுகளின் நிம்மதியைச் சிதைக்கும் இரும்புக்கோட்டை என சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஈரானின் சாக்ரோஸ் (Zagros) மலைத்தொடர்களுக்கு அடியில், மேற்கத்திய நாடுகளின் மிகப்பெரும் சிம்மசொப்பனமாக விளங்கும் "மிசைல் நகரங்கள்" (Missile Cities) அமைந்துள்ளன. வாஷிங்டனும் டெல் அவிவ் நகரமும் 13 டன் எடையுள்ள Bunker-buster குண்டுகளை நம்பியிருக்கும் வேளையில், ஈரான் எவராலும் ஊடுருவ முடியாத ஒரு பிரம்மாண்டமான நிலத்தடி வலையமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலத்தடி தளங்கள் வெறும் சேமிப்பு கிடங்குகள் அல்ல; இவை கருங்கற் பாறைகள் மற்றும் Steel கொண்டு கட்டப்பட்ட ஒரு சிக்கலான பிரம்மாண்ட தளம். செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களால்கூட இந்த சுரங்கத்திற்குள் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய முடியாது. இந்த கோட்டைகள் உயர் தொழில்நுட்ப தொழிற்சாலைகளாகவும் செயல்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஹைப்பர்சோனிக் (Hypersonic) ஏவுகணைகள், மணிக்கு சுமார் 2000 மைல் வேகத்தில் செல்லக்கூடியவை. இவை ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இஸ்ரேலை சென்றடையும் வல்லமை கொண்டவை. தற்போது ஈரானின் இந்த நிலத்தடி பாதுகாப்பு உத்தி, அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்கு (Air Dominance) நேரடி சவாலாக மாறியுள்ளது. ஒரு நாடு தனது முழு ஏவுகணை பலத்தையும் நிலத்திற்கு அடியில் பல மைல் தூரத்தில் மறைத்து வைத்திருக்கும்போது, வழக்கமான போர் முறைகள் அங்கு எடுபடாது. எதிரி கண்ணுக்குத் தெரியாமல், நிலத்திற்கு அடியில் பல மைல் ஆழத்தில் மறைந்திருந்து தாக்கும் இந்த சூழலை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்கிறதா? ஈரானின் இந்த "Missiles city" நவீன காலத்தின் சமச்சீரற்ற போர்முறைக்கு (Asymmetric warfare) ஒரு சிறந்த உதாரணமாகவும், உலக நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் ஒரு பெரும் எச்சரிக்கையாகவும் மாறியுள்ளன. #👨மோடி அரசாங்கம்