நோய்மை காலத்து
முத்தங்கள்
கனப்போட்டுச் சூட்டில்
தொட்டில் உறங்கும்
கைக்குழந்தையின்
ஆழ் உறக்க நிலை
💗💗💗
நீ வரைந்திருந்தாய்
நீள் கோடுகளை
குறுக்கு வெட்டுத்
தோற்றத்தில்
பிரிக்கும்
இரு இதயரேகை
இணையும் புள்ளியை
💗💗💗
எந்த வனத்திலும்
இல்லை உன்குரல்போல
அற்புத கானமென
நினைத்துக் கொண்டே
நிலைப்படியில் அமர்ந்திருந்தேன்
ஒற்றைக் குயில்
கூவத் தொடங்கியது
உள்ளிருந்து தன் ராகத்தை
💗💗💗
எங்கிருந்தும்
தோற்றுத் திரும்புதலில்
வெகுண்டெழுந்ததில்லை
இந்நாள் வரையிலும்
சாய்த்துக் கொள்ள
உன் மடி
எனக்கிருப்பதால் #✍️கவிதை📜