இப்படி கையும் களவுமாக ஓட்டு திருடர்கள் பிடிபடுகிறார்கள் இவர்கள் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.
சபரிமலை சீசன் நேரத்தில் பம்பையில் பிக்பாக்கெட் அடிப்பவர்களை பிடித்து அப்படியே அங்கே ஒரு சிறை போல் தயார் செய்து அங்கே அடைத்து வைப்பார்கள்
ஜோதி முடிந்தவுடன் அனைவரையும் விரட்டி விடுவார்கள் வழக்கு பதிவு செய்யாமல்
அது போல் தான் தற்போது தேர்தல் ஆணையமும் நடந்து கொள்கிறது
தேர்தல் முடிந்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
எனக்குத் தெரிந்து இதுபோல் நபர்கள் மீதோ? வேட்பாளர்கள் மீதோ தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்த சரித்திரம் கிடையாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் ஐந்து வருடம் தாண்டி தான் எடுப்பார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இவர்களை எல்லாம் உடனே விசாரணை செய்து இவர்கள் யாருக்காக பணம் பட்டுவாடா செய்தார்களோ
அந்த வேட்பாளரை வாழ்நாள் தேர்தலில் போட்டி போடாமல் தடுக்க வேண்டும். அப்போதுதான் பாரதத்தில் நேர்மையான தேர்தல் நடக்கும்
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு என்ன வந்தது தேர்தலை முடித்தால் போதும் என்று இருந்தால் கண்டிப்பாக நியாயமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது குறிப்பாக தமிழகம் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில்.
#🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #🔥நம் ஓட்டு நம் உரிமை💪 #🧓பிரதமர் மோடி