🧓பிரதமர் மோடி

8K Posts • 60M views
Arunachalam
775 views 17 days ago
சங்கி ஓநாய்கள் விமர்சனத்தை தாங்கிக் கொள்ளமுடியாத கோழைகள். தங்களை யார் விமர்சனம் செய்தாலும் அவர்களை பழிவாங்குவதில் புழ்பெற்றவர்கள். "பிரதமரை விமர்சனம் செய்யலாமா என்று கேள்வியெழுப்பி பல நூறு சங்கிகள் பெண்ணை தரக்குறைவாக செல்போனில் தினசரி தொல்லை கொடுக்கிறார்கள். டெல்லியில் நடைபெற்ற CJP மாணவர் போராட்டத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து வைரல் ஆன சிறுமி, தனக்கு பல இடங்களில் இருந்து கொலை மிரட்டலும், பாலியல் பலாத்கார மிரட்டலும் வருவதாக தெரிவித்திருந்த நிலையில், இப்போது அவர் குடியிருக்கும் வீட்டை ஹவுஸ் ஓனர் காலி செய்யச் சொல்லிவிட்டதாக வீடியோ பதிவிட்டு வருத்தம். எப்ஸ்ட்டீன் பைல்ஸ் புகழ் மோடியின் சிஷ்யன்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்..? #👨மோடி அரசாங்கம்
10 shares
Arunachalam
1K views 15 days ago
நாம் கவனிக்கத் தவறிய முக்கியமான விஷயம் இது தான்! இந்தியாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சகல தேர்வுகளையும் அதாவது மருத்துவம், பொறியியல் தொடங்கி ஆசிரியர்கள் தேர்வு உள்ளிட்ட அனைத்தையும் நடத்தி வருவது என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையாகும். நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி( NTA ) என்ற அமைப்பு முழுக்க, முழுக்க ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் வடிவமைக்கப்பட்டு 2018-ல் உருவாக்கப்பட்டது. இந்த தனியார் ஏஜென்ஸி அமைப்பு NEET- UG, JEE , UGC- NET, NEET-PG, போன்ற போட்டித் தேர்வுகளை நடத்துகிற ஒற்றை அதிகார மையமாக ஆக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமையும் உயர் கல்வி படிக்கும் ஆறரை கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அமைப்பின் தலைவர் இந்தியாவில் இந்துத்துவாவின் முகமாக அறியப்பட்ட உத்திரகண்ட் மாநிலத்தில் உருவான ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியாவார். இவர் பல ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பங்கு பெற்று இந்துத்துவ கல்வி முறை குறித்து நிறையவே ஆய்வுரைகள் ஆற்றியுள்ளவர். உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி என்ற தனியார் அமைப்பில் உள்ளவர்கள் கல்வியாளர்கள் அல்ல. இவர்களின் கீழ் இயங்கும் பல தனியார் காண்டிராக்ட் நிறுவனங்களுக்கும் கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை உள்ளிட்ட பல உண்மைகளை முழுமையாக அறிந்து கொள்ள, எனது நண்பர் ச.அருணாச்சலம் அறம் ஆன்லைன் டாட் இன்னில் எழுதியுள்ள கட்டுரையை வாசியுங்கள். அதனை வாசிக்க கீழே தரப்பட்டுள்ள அறம் வாட்ஸ் அப் சேனல் லிங்கை தட்டி வாசியுங்கள். அதில் உங்களை இணைத்துக் கொண்டால் இது போன்ற கட்டுரைகளை தினமும் வாசிக்கலாம். ஆக, முக்கியமாக நாம் உணர வேண்டியது, கரப்பான் பூச்சி இளைஞர் போராட்டத்திற்கான வரவேற்பு தற்செயலானதோ, திடீர் சம்பவமோ, ஒரு வினாத்தாள் கசிவிற்கு வெகுண்டெழுந்த போராட்டமோ அல்ல. கடந்த 12 ஆண்டுகளாக கல்வித் துறையில், ஆர் எஸ் எஸ் சூழ்ச்சிகளால் உருவான நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி உள்ளிட்ட இந்துத்துவ தனியார் ஏஜென்ஸிகளின் சகிக்க இயலாத தகிடுதத்தங்களின் விளைவே; சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
17 shares