பால. கதிரவன்
540 views
1 days ago
#அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம் நட்பு# இன்று காலை ஈரோடு கணபதி பாளையம் நால்ரோட்டிலிருந்து எனது நண்பரும் சிறந்த சிவபக்தருமான லிங்கம். செங்கோட்டுவேலப்பன் இந்த போட்டோவை எனக்கு அனுப்பியிருந்தார். இது போட்டோ அல்ல... பல நினைவலைகளின் உள்ளடக்கம். 1987 மார்ச் மாதம் மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்களுடைய +2 தேர்வெழுதி முடித்த உடனே ஈரோடு சென்று சென்ட்ரல் தியேட்டரில் சின்னதம்பி பெரிய தம்பி படம் பார்த்துவிட்டு இந்த போட்டோவினை எடுத்துக்கொண்டு பிரியாவிடை பெற்றுக் கொண்டோம். கால ஓட்டத்தில் அனைத்து பள்ளிக்கூட சந்தோஷ நினைவுகளும் மறந்துபோன நிலையில் இன்று அவர் அனுப்பிய இந்த போட்டோவானது மொடக்குறிச்சி பள்ளிக்கூட நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டது. அது ஒரு கனாக்காலம்